Wednesday, 10 September 2014

சொர்க்கமே என்றாலும்........


நேற்று மோர்மிளகாய் வற்றலும் சுண்டைக்காய் வற்றலும் வறுத்தபோது, என் கடந்த வருடத்திய அமெரிக்க பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவத்தை நினைவுகூறாமல் இருக்க முடியவில்லை...

ஒவ்வொரு முறை வற்றல் வறுத்த போதும் மகளோ மருமகனோ
ஒரு துண்டோ கெட்டி அட்டையோ விசிறியோ கையில்
தயாராய் வைத்து நிற்க, புகை கண்டறியும் கருவி ஒவ்வொரு முறையும் அலற, அதற்கு அவர்கள் சாமரம் வீச , அப்போதும் சில நாட்கள் அது விடாமல் அலற எண்ணை சட்டியை எடுத்துக் கொண்டு வாயிற்கதவைத் திறந்து கொண்டு நான் திறந்த வெளிக்கு ஓடியதும் உண்டு..... அப்போது நான் நினைத்தது ராமராஜன் அவர்கள்

ஒரு படத்தில் பாடிய சொர்க்கமே என்றாலும்........பாடலைத்தான்........

1 comment: