Monday, 29 September 2014

பொம்மைக்கோல் (கொலு) பட்சணம்........

 
Tony among other dolls
Make over from Western to Ethnic 





சிறு வயதில் சத்தியமங்கலத்தில் கொண்டாடிய நவராத்திரி பண்டிகை தினங்கள்......சில மலரும் நினைவுகள்.


மரத்தாலான பிரம்மாண்டமான 9 படிக்கட்டுகள் கொண்டது எங்கள் வீட்டுக் கொலு. (இதன் புகைப்படம் யாரிடம் தற்சமயம் இருக்கிறது என்று தெரியவில்லை) 
Raghav As Radha @ San Jose Kolu of a Friend's 
எங்கள் கொலுவில் பாடி முடித்த கையோடு ......................நான் , என் இளைய சகோதரி சுஜாதா (எ) விஜயா , எங்கள் தோழிகள் வேணி மற்றும் பத்மாவுடன் 4 தெருக்கள் கொண்ட அக்ரஹாரத்தில் கையில் ஒரு பிளாஸ்டிக் பையுடன், பட்டாடைகளுடன் ,விதம் விதமான தலையலங்காரங்களுடன் (எங்கள் பாட்டி இதில் கைதேர்ந்தவர்) மஞ்சள் நிற சாமந்திப் பூக்களுடன் .... கூச்சமே படாமல் [என் 13 ஆம் வயது வரை] தினமும் மாலையில் ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி**, பாட்டு பாடி, கொலு பொம்மைகளை விமர்சித்து , சுண்டல் வாங்கி கொண்டு [இதே பையிலேயே போட்டுடுங்க மாமி] வீடு திரும்ப எப்படியும் இரவு 8 மணியாகி விடும்.

Bhaktha Meera's visit to SJ House 


[**அனைத்து வீடுகளும் தெருவிலிருந்து 5 (அ) 7 படிக்கட்டுகள் உயர்த்தி கட்டப்பட்டிருக்கும், எங்கள் பின் வாசல் கதவுடன் ஒட்டியே பவானி நதிக்கு செல்லும் படிக்கட்டுக்கள்] 


Navarathri get ups of Keshav -  2012

[ஒரு தெருவின் அடுத்தடுத்த வீடுகள் இவை ----அத்தங்கா வீடு, நடேச மாமா வீடு ( தேள் கடி மந்திரிப்பவர்), பகவதி விலாஸ் வீடு, மணி அண்ணா வீடு( இவரது தாயார் புள்ளிக் கோலங்கள் போடுவதில் நிபுணர்... ஒரு நாள் பார்த்த கோலம் மறு நாள் இருந்ததே இல்லை....) , ஹாசனூர் கணக்குபிள்ளை வீடு, கிருஷ்ண வேணி மாமி அம்மா வீடு- இந்த மாமி என் தாயாரின் தோழி, இன்றும் தொடர்பில், திரும்பினதும் சரோஜா டீச்சர் வீடு, மணி டாக்டர் வீடு, மெத்தை வீடு, வெங்கடரங்கன் மாமா வீடு, வெங்கட பதி மாமா வீடு...இப்படி 4 தெருக்களில் உள்ள ஒவ்வொரு வீட்டாரையும் பரஸ்பரம் தெரியும்....புதிதாக யாராவது குடித்தனம் வந்திருந்தாலும் கூட]


கடைசியாக , அவரவர் பையில் உள்ள  எல்லார் வீட்டு சுண்டலையும் கலந்து கட்டி சாப்பிட்டு விட்டு, வீட்டுக்கு வந்து எங்கள் வீட்டு சுண்டலையும் சாப்பிடுவோம். பிறகு மோர் சாதம் .....

Fur dolls - Current Year
இந்த வைபவம் 9 நாட்களும் தொடர்ந்து நடக்கும். என் நினைவில் உள்ள வரை எங்கள் யாருக்குமே வயிற்றுக் கோளாறு வந்ததாக நினைவே இல்லை... வீட்டு பெரியவர்கள் தான் அது குறித்து கவலைப் படுவார்கள்.  :) :D :)

நினைவில் நிற்பவை :
Current Year Kolu

1. மெத்தை வீடு என்பது பெரிய பணக்காரர் வீடு.பங்களா.... கொலு மிக பிரம்மாண்டமாக இருக்கும்.

2.வெங்கடபதி மாமாவின் மகள் பத்மினி அக்கா பாட்டு சாதகம் செய்வதை அவர்கள் வீட்டு ஜன்னலில் ஏறி நின்று வேடிக்கை பார்ப்போம் (இவர் பிரபல கர்னாடக இசை பாடகி திருமதி காயத்ரி கிரீஷ் அவர்களின் தாயார்)


3.யார் வீட்டிலாவது கொலு வைக்கவில்லை என்றாலோ, வருபவர்களுக்கு பிரசாதம் தரவில்லை என்றாலோ, சின்ன பிள்ளைகள் தானே என்று விரட்டி விட்டாலோ,  உடனே கோரஸாக வாசலில் நின்று எல்லாரும் சேர்ந்து "பொம்மைக்கோல் பட்சணம் வீட்ட(டை) பாத்தா லட்சணம் என்று கத்துவோம்.


Current yr - Pillaiyar Collection
4.மாறுதலுக்கா இல்லை சோம்பேறித்தனமா தெரியவில்லை...நடுவில் ஒரு நாள் உடைத்த கடலையுடன் (எங்கள் ஊரில் பொட்டு கடலை) வெல்லம் சேர்த்து பொடியாக்கித் தருவார்கள். அதற்கு எங்கள் மூத்த தலைமுறை வைத்த பெயர் பஃப் பஃப் மாவு. இந்த மாவை காகிதத்தில் பொட்டலம் போட்டு வைத்திருந்து தருவார்கள். அங்கேயே அப்போதே பிரித்து வாயில் போட்டுக் கொண்டு பஃப் பஃப் என்று சொல்லி அவர்கள் வீட்டு கூடத்திலேயே ஊதி விட்டு செல்வோம்.[அவ்வீட்டினரின் அலறலுக்கிடையே தான்]

5. கிழக்கு தெருவில் இருக்கும் சாமி நாத வாத்தியார் [இவர் நாங்கள் படித்த ரமணி எயிடட் எலிமெண்டரி பள்ளியின் தாளாளர்] வீட்டில் நாங்கள் என்றைக்கு சென்ற போதும் வெங்காய தோசை தருவார்கள். (நேரம் கழித்து போவோம் ..சுண்டல் தீர்ந்து போயிருக்கும் என்று இப்போது தோன்றுகிறது.)

Kolu 2009 @ my tuition centre
6.ஒரு முறை எங்கள் மாமன் மகன் [ஒரு வயதுக்குள் இருக்கும்] வாசு தேவனை இடுப்பில் சுமந்து கொண்டு கிளம்பிய ஐந்தாவது நிமிடம் தூங்கி விட்டார். வீட்டிற்கு கொண்டு வந்து விட்டு போகணும் என்ற அளவுக்கு யோசிக்காமல் ..4 தெருவையும் நாங்கள் நால்வரும் அவரை மாற்றி மாற்றி சுமந்து சென்றோம் [ செம கனம்]

7.கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் வாணிக செட்டியார் வகுப்பினர் ஏற்படுத்திய கோவில். நவராத்திரி நாட்களில் அவர்களது வீட்டு பெண்மணிகள் அணிந்த நகைகளை  அணிந்து தினம் ஒரு வித அலங்காரத்துடன் அம்மன் வலம் வருவார்.

சரஸ்வதி பூஜை ....அல்லது புத்தகங்கள் பாதுகாப்பு தினம்

காலை எழுந்து எண்ணை தேய்த்து குளித்து சாமந்திப் பூ வைத்துக் கொண்டு புத்தகங்களை தொட்டி முற்றத்தில் வெய்யிலில் காய வைத்து சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். எங்கள் வீட்டில் வாசலில் ஆரம்பித்து சமையல் அறை தாண்டி மாட்டு கொட்டகை வரை எங்கும் புத்தகங்கள். 

[பாட்டி எங்களுக்கு பால் கூட தர மாட்டார். பூஜை முடிந்தவுடன் தான் சாப்பாடு.]
Lord Shiva @ San Jose 
ஓலை சுவடிகள் (பூஜை அறை), புராணங்கள், பத்திரிக்கைகளில் வந்த தொடர்கதைகள் பைண்டு செய்யப்பட்டவை(கூடத்து அலமாரிகள்), ஆங்கிலப் புத்தகங்கள், என் தகப்பனாரின் மருத்துவ புத்தகங்கள், மாமன்கள் அம்மா சித்தியின் புத்தகங்கள் (அறை), அதற்கும் மீறிய பல வகை புத்தகங்கள் (அட்டத்தில் டிரங்கு பெட்டிகளில்), நரசிம்ஹப்ரியா, ரங்க நாத பாதுகா, சப்தகிரி (சமையல் அறை, மாட்டுக் கொட்டகை) என அவ்வளவும் வெயிலில் காய வைக்கப்படும். [மாட்டுக் கொட்டகை மரங்கள் சூழ்ந்த இடம், பாட்டி ஓய்வு நேரங்களில் அங்கே உள்ள பென்சில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பார், தூங்கும் வழக்கம் இல்லை]


 பின்பு மீண்டும் புத்தகங்களை அதனதன் இடத்தில் வைக்க வேண்டும். 
மாலையில் ஆய்த பூஜை. மாமன்கள், அப்பா சைக்கிள் ஆயுதங்களை சுத்தம் செய்து பூஜை செய்வார்கள்.

நாங்கள் கோவில், நண்பர்கள் உறவினர்கள் விளையாட்டு என்று இரவு தான் வீட்டிற்குள் நுழைவோம்.மீனாட்சி அம்மன் கோவில் , பெரிய கோவில் , கன்னிகா பரமேஸ்வரி கோவில்களில் பூஜைகள் , ஊர்வலங்கள் அமோகமாக நடைபெறும் ஒன்பது நாட்களும். (நாங்கள் இல்லாமலா??)

அரசு பள்ளியில் படித்ததால் ஒரு லாபம் விஜய தசமியன்றும் பள்ளி விடுமுறை. எனவே அன்று தான் வீட்டு பாடங்களை செய்து முடிப்போம்.

பஃப் .....பஃப்...... பஃப்...... பஃப்...........

பின் குறிப்பு :

[1] என் மகளின் பிறந்த நாள் (நட்சத்திரம்) நவராத்திரியின் இரண்டாம் நாள் வரும். அப்போது புரட்டாசி மாதம் சென்னையில் பருவ மழை பெய்யும். ஒவ்வொரு முறையும் புத்தாடை அணிந்து கிளம்பி சற்று நேரத்தில் மழையில் நனைந்து (அ) வழுக்கி விழுந்து அழுது கொண்டே வருவார். அவரது 15 வயது வரை மழை பெய்தது... ..
Visitors @ San Jose , California
14 வருடங்களுக்குப் பிறகு இம்முறை தினமும் மழை..... 

பிள்ளைகள் சிறு வயதில் தினமும் பாட்டு நோட்டை பார்த்து பாடுவோம். சரஸ்வதி பூஜை அன்று முதல் இரண்டு வரிகளுக்கு பிறகு ....பே பே தான்....ஒரு பாட்டு கூட பாடமாக தெரியாது. 

[2]சமீப வருடங்களில் மகளின் அமெரிக்க நவராத்திரி கொலுவுடன் நேர்த்தியாக நடைபெறுகிறது. கேசவ் தன்னுடைய இன்றைய அலங்காரம் என்ன என்று சொல்லி விடுகிறார்.( அம்மா ..இன்னிக்கு சோட்டா பீம், இன்னிக்கு சிவன்) .  சின்னப் பாப்பாவும் தயாராகி விட்டார். 
அனைவரும் உற்றார் உறவினர் நண்பர்கள் இல்லங்களுக்கு சென்று வருகிறார்கள். கோவில்களும் இங்குள்ளபடியே.... 

அருமையான அனுபவம் ......

தாமஸ் மாமா



என் கடந்த வருட அமெரிக்க பயணத்தில் மகளது பக்கத்து வீட்டு மாடியில் (இவர்களும் மாடி தான்) வசித்து வந்த திரு தாமஸ் என்ற அமெரிக்கரின் குடும்பத்தினருடன் பழகவும்  அவர்களது வாழ்க்கை முறையை காணவும் நேர்ந்தது.

3 மகள்களுக்குத் பெற்றோரான அவர்களது தினசரி நடப்புகள் நம் இந்தியக் குடும்பங்களை ஒத்தே இருந்தது. மூத்த மகளுக்கு திருமணமாகி அவருக்கு இரண்டு மகன்கள். (சிறு வயது தாத்தா பாட்டிதான் அவர்களும்) .... கடைசி மகள் ஸ்கூல் படிப்பதாக சொல்வார்கள்.(அமெரிக்காவில் கல்லூரியும் ஸ்கூல் தான் என்பதால் என்ன படித்தார் என்று தெரியவில்லை??!!)

வீட்டுக் கூடத்தில் , பால்கனியில், கார் நிறுத்தும் கராஜில் என எங்கும் அவர்கள் இல்லத்தில் பசுமை, செடிகளும் கொடிகளுமாக...........வீட்டை தினமும் சுத்தம் செய்வார்கள்.செடிகளுக்கு நீர் ஊற்றுவார்கள்.....

ஒரு அழகான பூனைக்குட்டியும் அவர்கள் இல்லத்தில் உண்டு. திரு தாமஸுக்கு முன்னால் அவரை முந்திக் கொண்டு படிகளில் தாவி ஏறும் ...... வாசலில் செடிகளுக்கிடையில் மறைந்து நின்று தன் சிவந்த கண்களால் மாலை நேரங்களில் கேசவை பயமுறுத்தும். தாமஸ் மாமா என்று கேசவ் அன்போடு அழைக்க அவரும் இவரை கொஞ்சாமல் நகர மாட்டார்.

ஹாலோவின் தினத்திற்காக (அக்டோபர் 30)  , பரங்கிகாயை குடைந்து அழகான உருவம் செய்து அதற்குள் மெழுகு வர்த்தியை தினமும்  மாலையில் மாதம் முழுவதும் வாசற்படியில் ஏற்றினார்கள்.(கேசவின் விருப்பப்படி நாங்களும் செய்தோம்...)

தேங்க்ஸ் கிவிங்க் டே அன்று அமெரிக்க வழக்கப்படி பிள்ளைகள் பெற்றோருடன் கூடி மகிழ்ந்தனர்.

அடுத்து கிறிஸ்துமஸ் .... அந்த சமயத்தில் டிசம்பர் 3,4 & ஜனவரி 1 ஆம் வாரங்கள் விடுமுறை தினங்களாக கொண்டாடுகிறார்கள்.

அந்த சமயத்தில் வாசலில் ரெயிண்டீர் பொம்மைகளை வைத்திருந்தார்கள். அந்த பொம்மைகளைக் கண்டே அவர்களின் கொண்டாட்டங்களை புரிந்து கொள்ளலாம் என்று மகள் கூறினார்.

பெரும்பாலான அலுவலகங்களுக்கு விடுமுறை அல்லது மக்களே விடுப்பில் சென்று விடுகிறார்கள். (மருமகனுக்கு கிறிஸ்துமஸுக்கு ஒரு நாள் புது வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் தான் விடுமுறை.....)

கேசவ் சைக்கிள் ஓட்டப் பழகியது பற்றி அறிந்ததும் அவரது மனைவி.......கேசவ் நீ ரொம்ப நல்லா சைக்கிள் ஓட்டறியாமே மாமா சொன்னாங்க.......நல்லா ஓட்டி பழகிக்கோ (ஆங்கிலத்தில் தான்) என்று அவருக்கு உற்சாக வார்த்தைகள் கூறினார். (அச்சமயம் அவருக்கு சைக்கிள் ஓட்டவே தெரியாது.....)

குட்டிப் பாப்பாவின் பெயர் சூட்டு விழாவிற்கு அழைத்தால் வருவார்களோ மாட்டார்களோ என்று தயங்கிய சமயத்தில் திரு தாமஸ் தாமே பாப்பாவுக்கான பரிசை கொண்டு வந்து தந்து சென்றார்.

ஒரு நாளில் எத்தனை முறை காண நேர்ந்தாலும் ஹாய் சொல்லாமல் செல்ல மாட்டார்கள் திரு தாமஸும் அவர் மனைவியும். இன் முகத்துடன் குடும்பத்தினர் நலம் விசாரிப்பார்கள். வீட்டுப் பெண்டிர்  எப்போதும் முழு உடலையும் மூடிய ஆடைகளையே அணிந்திருந்ததைக் காண நேர்ந்தது. தினமும் இரு வேளைகளும் திரு தாமஸ் அல்லது அவரது மனைவி, மூன்றாவது மகளை ஸ்கூலுக்கு அழைத்து சென்று வருவார்கள்.

அங்கே பண்டிகைகள் நம்மைப் போல பக்தி பூர்வமானதாக இல்லாமல் குடும்பத்தினர் கூடி மகிழும் வகையிலும் பல்வேறு இடங்களுக்கு சென்று மகிழும் வகையிலும் அமைந்து இருப்பதை அறிய நேர்ந்தது. (ஆங்காங்கே சர்ச்சுகள் விசாலமான கார் பார்க்கிங்குகளுடன் காணப் பட்டாலும் வேற்று நாட்டவர்களே அங்கே அதிகம் செல்வர் என்பதாக அறிந்தேன்...)

அமெரிக்க பாட்டிக்கும் இந்திய பாட்டிக்குக்கும் வித்தியாசம்......
அவர் பேண்ட் சட்டை நீண்ட பாப் தலை முடியுடன், 
நான் சேலை, நீண்ட பின்னலுடன்   .....
இருவருக்கும் பொது-----கையில் துடைப்பமும் பிளாஸ்டிக் முறமும் :) :)

  

பின் குறிப்பு : எலும்பு முறிவு சிகிச்சைக்கு சென்ற நாட்களில் சீன மருத்துவர்... (DR. FRANK WONG) காலை தூக்கி வைத்து கொண்டு வேலை செய்யுங்க.....டீவீ பாருங்க , கம்ப்யூட்டர்ல வேலை செய்யுங்க , தயிர் சாப்பிடுங்க என்றார். கட்டு பிரித்தவுடன், சமைக்க ஆரம்பித்து விட்டீர்களா, வீட்டை சுத்தம் செய்தீங்களா , குழந்தைகளை கவனிக்கறீங்களா, கடைக்கு போறீங்களா .என்றெல்லாம் கேட்டார். (ஒரு சீன படத்தில் ஒரு சீன டீக்கடைக்காரர் ஒரு குவளையில் எடுத்து வாசல் தெளிக்கும் காட்சியைக் கண்டேன்)




Friday, 26 September 2014

THE WORDS….


It’s always been a pleasure to recollect how I came to know about a few words in English since I started learning the language ……. [Remember my first English poem ??! Hot cross buns in my 3rd Standard when English was first introduced as a subject , Rock a bye baby on the tree top in my 6th Standard being the  first poem of High School Education, The Daffodils in Higher Secondary ]

DILEMMA

A cartoon story about a Dracula … published in Kumudam magazine during my High School Days…The Dracula disguised as a nurse would hesitate to take blood from our Hero, when its counterpart would ask why it hesitates to do so…The Dracula’s reply “I’m in Dilemma” First ever difficult vocabulary….which put us girls in dilemma….. A classmate got the meaning for this word from her neighbour.

DUMMY

Yet another crime thriller story studied during my High School days, where a person pretended to be killed and thrown down the mountains , was found to be alive. The police finds his “Dummy” was thrown which was noticed by some tourists ..which was  informed to the police. Had a chance to know about the dummies used in the making of cinemas.

ANXIOUS , ANTICIPATION

A letter received from a friend stated that the friend was “Anxious” to know about me and waiting for my reply in “Anticipation “ . I penned the friend to relieve from the anxious anticipation, which happened during my Higher Secondary days.

2K BUCKS

During the college days of my daughter, I received an SMS stating “Please send me 2k bugs”  I was annoyed and horrified  what  2k  and Bugs mean? Why being an Under Graduate in “Fashion Technology” she needed Bugs ….
Called her to find out the message was typed by one of her friends .. Learnt from her “k” relates to Thousand and Not bugs its “Bucks”
Sent her 5k Bugs sorry Bucks to comfort her…(or me??!) which motivated me to enter into the “Young World” or “Youth World “ can I say?

CHECK AND BILL

During my last visit to US,  while in a Restaurant with daughter’s family ,  heard Son in law telling daughter to collect the “Check” to pay the “Bills” (Cheque = check , Bill  = Dollar)
[In India we collect Bill after eating in restaurant and pay cheque/cash ]

DILIGENT AND METICULOUS

A friend of mine told she had been reading my write ups diligently(of course , not now I guess) and the other friend commented that  my work is meticulous .

P.S:  My anxious anticipation right away , is whether the  diligent followers of mine would be placed in dilemma whether to like this write up of  mine, which is worth  2k million bucks to me or will scroll up this meticulous thing of mine in dilemma thinking it to be something Dummy and not worth a Bill to be honoured with a check.









Monday, 22 September 2014

கீதா ........காதல் வராதா?


பல வருடங்களுக்கு முன்பு ஒரு பிரபல பள்ளியில் வேலையில் சேர்ந்த புதிது.(அங்கே வேலை செய்தது மொத்தம் 6 மாதங்கள் மட்டுமே)

என் மகள் அவ்வருடம் ஆறாம் வகுப்பில் அதே பள்ளியிலும் குட்டிப் பையன் வீட்டிற்கருகில் வேறு ஒரு பள்ளியில். UKGயும் படித்துக் கொண்டிருந்தார்கள்.

எங்கள் பள்ளியில் மாணவர்களுக்குத்  தனியாகவும் ஆசிரியர்களுக்குத் தனியாகவும் பகவத் கீதை வகுப்பு வாரம் ஒரு நாள் நடக்கும்.

பிரதி வியாழன் மாலை 4 - 5 மணி. மடத்திலிருந்து ஒரு சாமியார் அம்மா வந்து சொல்லித் தருவார்.

ஆடியோ விஷுவல் ரூமில் ஒரு ஜமுக்காளம் விரித்து , மின் விசிறிகள் போடப்பட்டு , சாமியார் அம்மாவுக்கு சற்றே உயர ஆசனம் போடப்பட்டு வகுப்பு ஆரம்பம்....

உண்மையாகவே கற்கும் ஆர்வம் உள்ளவர்கள்,நிர்வாகத்துக்கு வேண்டியவர்கள், பல வருடங்களாக அங்கே வேலை செய்பவர்கள் , சமஸ்கிருதம் (அ) தமிழில் பகவத்கீதை ஸ்லோகத்தைப் படிக்கத் தெரிந்தவர்கள், தலைமை ஆசிரியை, இன்கிரிமெண்ட் எதிர்பார்ப்பவர்கள் முன்வரிசைகளிலும், புதிதாக சேர்ந்தவர்கள், கீதையை எந்த மொழியிலும் படிக்கத் தெரியாதவர்கள், நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்கள் (என்னை மாதிரி என வைத்துக் கொள்ளலாம்) பின் வரிசைகளிலுமாக அமர்ந்திருக்க. வகுப்பு ஆரம்பிக்கிறது.

என்ன சொல்ல வருகிறார் என புரியுமுன் முன்வரிசைகளிலிருந்து ஒரு பகவத் கீதை ஸ்லோகத்தை எல்லாரும்  ராகத்தோடு (புத்தகத்தைப் பார்த்துத் தான்)  பாடுவார்கள் . 

அந்த ஸ்லோகத்திற்கு சாமியார் அம்மா. ஆங்கிலம் மலையாளம் சமஸ்கிருதம் கலந்த மொழியில் விளக்கம் சொல்ல ஆரம்பிப்பார்.

சா.அ : கீதா சேஸ் வீ ஹேவ் டு ஃபோர்கோ வாசனாஸ் (இந்த வாசனாஸ் ஐ மூக்கை லேசாக அழுத்தி பிடித்தபடி படிக்க வேண்டும்)

ஆசிரியை 1: (ரகசியக் குரலில் ) மஞ்சு , 5D ஐந்து மணிக்கு சரியாக கிளம்புடுவான்பா , அடையாறு போகணும் நான்...

சா.அ: லார்ட் க்ரிஷ்ணா சேஸ் ............விளக்கம் தொடரும்

நான் : மேடம், பையனுக்கு ஸ்கூல் விட்டிருப்பாங்க....... என்ன பண்றானோ தெரியலை..

சா.அ: வாசனாஸ் ஆர் தி பேசிக் திங் வீ ஹேவ் டு.......

ஆசிரியை 2: ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா........ கால் வலிக்குது.... (காலை நீட்டிக் கொள்வார், ஆவ்.. கொட்டாவியுடன்)

சா.அ:   ஆல் ஆஃப் யூ லிசன் ப்ராபர்லி.........(முறைப்பார்)

நான்: என் மகள் வேறு தனியாக வீட்டில் இருப்பாளே.... குழந்தைக்கு பசிக்குமே?

ஆசிரியை 1: பஸ் கிளம்பிட்டா கஷ்டம்பா...... முடிஞ்சுடுமா?
(முன் வரிசையில்  பாட ஆரம்பிப்பார்கள் மீண்டும்)

சா.அ: மீண்டும் எங்களை முறைப்பார். சுவாரசியமற்ற முறையில் விவரம் கூறிக் கொண்டே செல்வார். 

பக்கத்தில் ஒரு ஆசிரியை வைத்திருந்த தமிழ் பதிப்பில் படிக்க முயன்றேன். சமஸ்கிருத ஸ்லோகம் தமிழில். இருந்தது. சுமாராக வார்த்தைகளை பி(ப)டித்தால், ராகம் பிடிபடவில்லை.. ராகத்தை பிடித்தால் வார்த்தைகள் அம்பேல். மூன்று மொழிகளைக் கலந்து பேசுவார் என்று சொன்னேன் இல்லையா? அதனால் பொருளும் பிடிபடவில்லை.  மொத்தத்தில் எப்போது வகுப்பு முடியும் என்ற நிலை தான் ஒவ்வொரு முறையும். 

வகுப்பு முடிந்தவுடன் அட்டண்டன்ஸ் ரெஜிஸ்டரில் கை எழுத்துடன் நேரத்தையும் குறிக்க வேண்டும் (அதற்கு காவலாய் மற்றொரு சா.அ)

ஒரு வழியாக வகுப்பு முடிந்ததும் , சிறு குழந்தைகள் பசிக்குமே,  மகள் தனியாக வீட்டு வாசலில் காத்திருப்பாரே  என்ற கவலைகள். மழையோ வெய்யிலோ சேறோ சகதியோ குட்டிப் பையனின் பள்ளிக்கு ஓட்டமும் நடையுமாக செல்வேன். 

மாலையில் வகுப்பு வைத்தால் ஒழுங்காக கவனிப்பதில்லை என்பதால் காலையில் 9 - 10 என நேரத்தை மாற்றினார்கள்.காலையில் எழுந்து வேலை செய்த களைப்பு, நேரத்திற்கு வந்து சேரவேண்டும் என்ற டென்ஷன் என மறுபடியும் அதே கதை தான். 

மாணவர்கள் 10 மணிக்குத் தான் கூடுவார்கள். இந்த நேரமும் எனக்கு நிம்மதியை தரவில்லை. மகள் அதே பள்ளியில் படித்தாலும் என்னுடன் உள்ளே வர அனுமதிக்க மாட்டார்கள். அவள் பள்ளி வந்து சேரும் வரை அமைதியற்ற நிலை.

நானும் முன் வரிசை, பின் வரிசை சமஸ்கிருதம் , தமிழ் என விதம் விதமாக முயற்சித்தும் எதுவும் உதவவில்லை. 

சாமியார் அம்மா இன்னைக்கு வரமாட்டார் என்ற செய்தியை கேள்விப்படும் தினங்களில் ஸ்டாஃப் ரூமில் காணப்படும் நிம்மதியான முகங்களை காண கண் கோடி வேண்டும்.

பின் குறிப்பு: 
கற்றல் ஒரு சுகமான அனுபவமாக இருக்க வேண்டும் என்பதை உணர வைத்த வகுப்புகள் அவை. (என் வகுப்புகளில் மாணவர்களின் முகங்களில் எப்போதும் புன்னகையைக் கண்டிருக்கிறேன்.....நான் சிரிக்க மாட்டேன்..)

The Terminal.....


 New York,  JFK International Airport, Terminal 8 …….


Here is where I waited at Gate No 47, as per my boarding pass issued at the check in counter, to board my connecting flight to San Francisco. After a detailed window shopping  around the terminal and a coffee from Star Bucks (as recommended by my son in law ) , upon confirming the flight details  in  the electronic display board , except for the fact that I was unaware that the flights arrive and depart every second in that airport and the data change according to the availability of the gates and I should monitor the display board then and there …… I settled down to look around me……….until it was 5.50 pm (my connecting flight was at 6.00 pm)

I got my first doubt when I there was no trace of any boarding call at 47 …. Checked with the staff at counter  47…… The staff showed his hand in the air and sounded “OOOOSH” (his gesture made me smile though it wasn’t a good time)..

Rushed to the Jet Airways counter and requested for help. Initially they refused. From nowhere another staff who resembled more like a north Indian offered to help me….. Found out from the control room that my flight was  to depart from Gate 40 , was delayed just for me as a transit passenger  to catch up….. We ran ran and ran……to see desperately ….the aircraft  moving away from the gate .(Mam.. can u see the wings of your flight ??, yeah with my checked in baggage and half of the money I brought in US dollars)

Tried for a ticket to the nearby airports (San Jose, Oakland ) but horrified to know that no flight service is operated from the East Coast to the West coast after 6 p.m after the 9/11 incident……Upon watching my helpless situation , the Jet Airways staff offered to help me out. Offered his hand phone to contact my daughter, got the tickets printed out from his friend and made me wait near the Check in counter  near the departure gate for my bro to pick me up ……..

Around 8 pm ,my  bro, Sree as we call him, picked me up to his house to host me with Dosas and milk for dinner (his wife was away in India then), Sun TV, a nice chat, a little guided tour of his house in Milbourne in the suburbs of New York and of course (en route to his house) about the Brooklyn bridge, Liberty statue and what not..( I heard New York’s night view to be the best , is it so Sree?)

Early morning he rushed me to the airport and I boarded the  flight, of course without missing it this time, with the ticket helped out by the Jet airways staff the previous evening with no additional cost ……. On our way, my bro told me that the JFK airport is closed every night and no one is allowed to stay inside since the 9/11 incident . [What if those guyz were not there for me ? God knows what I would have done with my $ 500 , jet lag, new country,  new culture ……]

To my utter dismay, the flight was delayed due to technical snag……. When it started flying, there was this real rough noise of the engines which scared me throughout…..Except for the cornflakes and milk offered by my bro with tissues to wipe away the puss from my fungal infection in my finger….no food except little orange juice and wadar..(water as they say…..was offered in a tray in bottles to all non white people from where the needy had to pick up the bottle)

Thank God,  landed at San franscisco at last, after 3 days(I guess so or was it 2 guyz?) Happy to go  with grandson’s  sweet baby talks , hugs and good food and what not..

P.S : Guess why I felt so close to my heart when I watched the movie “The Terminal” by Tom Hanks


THANK YOU DEAR BROS….the known and the unknown ….



Thursday, 18 September 2014

Night of the Scorpion............


Cannot skip the thought of  my encounter with the Scorpion, whenever I happen to read the famous poem by “Nizzem Eskiel “…… an Indo-Anglican poet….since my childhood until last night…

Grand Parents @ my mother's wedding

This is our ancestral house at Sathyamangalam …..(We are the proud owners of this house right now…) This place is surrounded by mountains and river on all side and I remember the frozen coconut oil most of the days in a year.

A long “thinnai” supported by pillars which leads to the main door of the house preceded by a brightly  lit courtyard (Thotti muththam)……Wooded pillars( horizontal and vertical), three layered roof (Tiles, sheet made of bamboo, bamboo), separate storage area for condiments, built in granaries, a row house with great width and length (Rendu kattu veedu)  

“I REMEMBER THE NIGHT MY MOTHER
WAS STUNG BY A SCORPION. TEN HOURS
OF STEADY RAIN HAD DRIVEN HIM
TO CRAWL BENEATH A SACK OF RICE.”

During one of my early childhood days, at dusk heard the groaning of my grandmother who was stung by a “Scorpion” who used to operate around the granaries and condiment storage area where the gunny bags and cartons are stored.

Myself and my sister rushed to one of our neighbouring houses wherein lived Mr.Natesa Ayyar who was well known as a priest who could recite mantras for people who are in distress.( It was not the first time she was bitten by the Scorpion……. I myself can count to 10 times minimum , my mom says since her childhood its infinity….)

“THE PEASANTS CAME LIKE SWARMS OF FLIES”
“WITH CANDLES AND WITH LANTERNS”

In the mean while , all our neighbours started coming to our house hearing about what happened …….

“MAY THE SINS OF YOUR PREVIOUS BIRTH
BE BURNED AWAY TONIGHT, THEY SAID.
MAY YOUR SUFFERING DECREASE
THE MISFORTUNES OF YOUR NEXT BIRTH, THEY SAID.
MAY THE SUM OF ALL EVIL
BALANCED IN THIS UNREAL WORLD”

People started talking philosophy around …… if you suffer the pain , all your sins will go away, your chance of rebirth is reduced etc etc….(which I believe strongly)
As kids did not know what to do…….Just watched …..

“AND BUZZED THE NAME OF GOD A HUNDRED TIMES
TO PARALYSE THE EVIL ONE.”

Some chanted prayers……

“I WATCHED THE HOLY MAN PERFORM HIS RITES TO TAME THE POISON WITH AN INCANTATION.”

Natesa Mama started applying the “Holy Ash” and started reciting Mantras to drive away the evil out of our granny massaging with “Neem Leaves” around the bitten area……which would stop the poison gushing into the blood.

“MY(GRAND) FATHER, SCEPTIC, RATIONALIST,
TRYING EVERY CURSE AND BLESSING,
POWDER, MIXTURE, HERB AND HYBRID”

After a while, everyone left ….
Our granny was still groaning and groaning in pain…until the next day..


MY  MOTHER ONLY SAID
THANK GOD THE SCORPION PICKED ON ME
AND SPARED MY CHILDREN.

With Great Grand Children during Diwali 2013
We were care free kids then who were left under her care …. which made her to think that the scorpion spared us, the kids.
[Same I felt when I got my ankle fractured while walking along with my grandson..  :D]

During our teen years , we used to make fun at our granny to be a person like the villain “Naganandhi” of Sivagamiyin Sabatham by KALKI , who used to take the poison of snakes and bit by them … to develop immunity to his system.

Few years back, I saw a scorpion at Chennai in the walk path of our apartment while sitting along with small kids , which scared them….Not me…..

P.S:  I still wonder, in spite of the medical facilities available, why she was not given medical aid???

Tuesday, 16 September 2014

ஆலிவுட்டு போனே(ன்) ஆர்னால்ட் வூடு பாத்தே(ன்)......


என் முதல் அமெரிக்கப் பயணத்தின் போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 3 நாள் பயணமாக காரில் சென்றோம். 

மூன்றாவது நாள் அந்த நகரின் முக்கியப் பகுதியான ஹாலிவுட் புலவா(ர்)ட் என்னும் இடத்திற்கு சென்றோம். (இந்த புலவா(ர்)ட் என்பது நம்ம ஊர் பாக்கம், பட்டி, பாளையம் போல அங்கங்கே சேர்க்கப்பட்டிருக்கும்)

ஹாலிவுட் புலவா(ர்)ட் (Hollywood Boulevard) பகுதியில் ,காரை நிறுத்திய இடத்தில் என்னைக் கவர்ந்தவைகள் ....  மல்டி லெவல் பார்க்கிங், தெருவோரத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த லிமசின்( limousine) கார்கள். (வாடகைக்கு விடுவாங்களோ?)

ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் (Hollywood Walk of Fame ) எனப்படும் ஹாலிவுட் புலவா(ர்)ட் பகுதியில் அமைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சைனீஸ் திரையரங்கத்தின் அருகில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் வசிக்கும் பகுதிகளான சன் செட் புலவா(ர்)ட் (Sunset Boulevard), பெவர்லி ஹில்ஸ் ஆகிய பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா வண்டிகளில் ஏற வேண்டும். 

அந்தத் தெருவின்(Hollywood Walk of Fame )இரு பக்க நடைபாதைகளிலும் திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி என புகழ் பெற்றவர்களின் பெயர்களும் அவர்களது துறைகளும் குறிக்கப் பட்ட நட்சத்திரங்கள் நெடுகிலும் புதைக்கப் பட்டிருக்கிறது..... 

சுற்றுலா வண்டிக்காக சைனீஸ் தியேட்டர் வாசலில் காத்திருந்த சமயம் அங்கே கண்ட காட்சிகளில் மனதைக் கவர்ந்தவை...



தரையில் புகழ்பெற்ற நட்சத்திரங்களின் கை விரல்கள் பாதங்கள் சிமெண்ட் தரையில் பதியப் பெற்றிருந்தது,

ஸ்கூட்டரில்  சக உல்லாசப் பயணியாக ஒரு காலில் மாவுக் கட்டுடன் வந்த தனியாக வந்த பெண்மணி...(ஒரு சின்ன மயிரிழை அளவு எலும்பு உடைந்து சேர்ந்ததுக்கே கடந்த ஒன்றே கால் வருடங்களாக அலம்பல் பண்ணிக்கிட்டு இருக்கியே மஞ்சுளா!!)

காதில் ஹெட் ஃபோன் மாட்டி கிளம்பினோம். உடனடியாக வர்ணனை காதில் கேட்கத் தொடங்கியது. நம்முடைய ஊர்தி சிறிய வேன் போலத் தான்.... மேலே மூடி இல்லை.... வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றோம். (சரியா சொல்லணும்னா பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்தாப்ல)

ஒரு மலை உச்சிக்கு அழைத்து சென்றார்கள். ஹாலிவுட் என்ற எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருக்கும் மலை(அதோ பாருங்க எல்லாரும்) மற்றும் அந்த ஊரின் சாலைகளயும் கண்டோம்.

அடுத்து நேராக . சன்செட் புலவா(ர்)ட், பெவெர்லி ஹில்ஸ் பகுதி..... ஹாலிவுட் நட்சத்திரங்களின் குடியிருப்புப் பகுதி.....மலைப்பாங்கான இடம்.... சுற்றிலும் மரங்கள்.. இங்கே ஒவ்வொரு வீடும் பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை...

இதோ .........இது தான் ஆர்னால்ட் வீடு...

(ஒரு சின்ன பையன் தன் தந்தையிடம் :இன்றைய தேர்வில் உனக்கு பிடித்த ஹீரோ(வீரன்) யார் என்று கேட்டார்கள், நான் உங்கள் பெயரை எழுதினேன்.... 

தந்தை :(மகிழ்ந்து போய் )நான் தான் உன் ஹீரோவா இது வரை சொல்லவே இல்லையே... 

மகன் : எனக்கு ஆர்னால்ட் ஸ்வாஸ்னெக்கருக்கு ஸ்பெல்லிங் தெரியாது உங்க பெயருக்குத் தான் தெரியும்) 

இது தான் மைக்கேல் ஜாக்சன் வீடு, இது தான் ....... 

(டாடீ எனக்கு ஒரு டவுட்டு...... வர்ணனை நம்ம காதுல கேட்டுதே அது நேரடி வர்ணனையா இல்லை முன்னாலயே பதிவு செய்ததா? எது யார் வீடுன்னு நமக்கு என்ன தெரியும்?எப்படி சரி பார்க்கறது?)

திரும்பும் வழியில் ரோடியோ டிரைவ்....(Rodeo drive) (பெவர்லி ஹில்ஸின் ஒரு பகுதி)
2 மைல் நீளமுள்ள தெரு...... புத்தக கடைகள், அழகுப் பொருட்கள், துணிமணிகள், நகைகள் என அனைத்தும் விற்கப்படும் இடம்.இந்தத் தெருவின் சிறப்பம்சம் அங்குள்ள மின் பிளக் உட்பட அனைத்தும் வெள்ளியின் நிறத்தில் ..... நட்சத்திரங்களை (வானம் & சினிமா) குறிப்பிடும் வகையில் (உங்க கையில் பையில் சில லட்சங்களாவது இருக்கா..... குறைந்த பட்சம் நிறைய பணம் உள்ள வங்கிக் கணக்குக்கான  செக் புத்தகம், அப்படீன்னா வாங்க கடைக்குள்ள போகலாம்)

மீண்டும் சைனீஸ் தியேட்டர் வாசல். 

அதன் வலப்பக்கத்தில் மேடம் டுசா மெழுகு அருங்காட்சியகம்.
பாடகர்கள், நடிகர்கள், இயக்குனர்கள், விளையாட்டு வீரர்கள்,கதா பாத்திரங்கள்,சின்னத் திரை , பெரிய திரைகளில் புகழ் பெற்றவர்கள் எனப் பல பிரிவினருக்கும் மெழுகினால் ஆன சிலைகள் செய்து வைக்கப்பட்டுள்ளன. 
ஒவ்வொரு சிலையும் தத்ரூபமாக இருந்தது. (ஒரே பிரச்சினை அதில் பெரும்பாலானோர் யார் என்றே தெரியவில்லை...... இப்ப தெரியுமே...கூடுதல் கட்டணம் கட்டி ஹாலிவுட் படங்களை விடாம பாக்கறம்ல?)
புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். யார் என்றே தெரியாத சிலைகளுடன் புகைப்படம் வேண்டாம் என்று நான் மறுக்க ... என் மருமகன் நான் பிறகு 
யார்ன்னு சொல்றேன் என்று சமாதானம் செய்து படம் பிடித்தார் (தேங்க்ஸ் மாப்ளே....)

இந்த அருங்காட்சியகத்தின் சமீபத்திய சேர்க்கை Anne Hathaway .....(Bride Wars, Alice in Wonderland, Les miserables)

பின் குறிப்பு - 1 :ரோடியோ டிரைவ் பற்றி மேலும் புரிந்து கொள்ள "ப்ரெட்டி உமன்" திரைப்படம் பாருங்கள்.....(ஜூலியா ராபர்ட்ஸ்)

பின் குறிப்பு - 2 : Boulevard என்பது இரு பக்கங்களிலும் மரங்கள் நிறைந்த அகன்ற பாதை

பின் குறிப்பு - 3: எங்க கோலிவுட்டு இத வுட சூப்பரா இருக்குமுங்க......(சாலிக்கிராமம் )துரையரசன் தெருவுல விஜய் வூடு, கண்ணம்மாள் தெருவுல விஜய்காந்த் வூடு, அதுக்கு முன் தெருவுல வடிவேலு வூடு , எம் ஜி ஆர் தெருவுல ரம்பா வூடு, இந்திரா காந்தி தெருவுல பாலு மகேந்திரா வூடு, அவரூட்டுக்கு அடுத்தாப்ல நாசர் வூடு... இன்னொரு நாள் நானே உங்களை அங்கெயெல்லாம் அழைச்சிக்கிட்டு போறேன்....









உஸாத்தே.....உஸாத்தே.......



2008 - 2010 சாலிக்கிராமத்தில் சொந்தமாக டியூஷன் சென்டர் நடத்தினேன். வருடம் முழுவதும் மாலையில் ஒன்று முதல் 12 வகுப்புப் பள்ளிப் பிள்ளைகளும் (சீருடை மட்டும் தான் இல்லை இங்கே.... அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் என்று படுத்தி எடுக்கறீங்க மேடம்) காலையில் பெண்களும் (சொந்த கதை சோகக் கதைகளை கேட்டுக் கொண்டே இடையில் படிப்பு சொல்லிக் கொடுப்பது பெரிய சவால்) முதியவர்களுமாக வந்து கற்றுச் செல்வார்கள். 

கோடை விடுமுறையில் ?

நமக்கும் பொழுது போகும் பெற்றோர்களுக்கும் உதவி செய்தது போல இருக்கும் என்று நானும் என் உதவியாளரும் திட்டமிட்டது தான் இந்த கோடை முகாம்.  3.5 - 8 வயதுக் குழந்தைகளுக்கானது. 9.30 - 12.30 என முடிவு செய்தோம். (மகள் திருமணத்திற்கு கூட இத்தனை திட்டமிடல் இல்லை)
தினமும் நாங்களே சிற்றுண்டி கொடுப்பதாக முடிவு செய்தோம்.(பழங்கள், சத்துணவு, எண்ணை பண்டங்கள் இல்லை)

3.5 - 5 வயது குழந்தைகள்.... 

அம்மா............அம்மா............ கதறல்..... செல்லம் ஓடி வா ஓடி வா....... நாம லைட் பாக்கலாம் (அனைத்து விளக்குகளும் சாண்டலியர் உட்பட போடப்படும்) என்ன மாயமோ அழுகை நின்று விடும்..

தினமும் எனக்கு புது க்ரேயான் குடுத்தா தான் வருவேன்...... (சரி வா தரேன்)

தினமும் போன் பேசுவியே ..இன்னிக்கு ஏன் பேசலை? (மகள் அமெரிக்கா சென்ற புதிது குறிப்பிட்ட நேரத்தில் தினமும் 3 நிமிடங்கள் பேசுவார்)

என்னை மட்டும் வெளில போகாதேன்னு சொல்றாங்க , ஆனா அவங்க ஏன் அங்க போனாங்க? (மேடம் ....... உள்ளே வாங்க, இங்க ஒரு விசாரணை நடக்குது உங்க பேர்ல..._என் உதவியாளர்)

சில நாட்களே வந்தாலும் என்னை விட்டு நகரவே மாட்டார் என் சகோதரர் மகன்.......(உஸாத்தே.....உஸாத்தே.......)

இந்த குழுவினர் தினமும் வர்ணம் தீட்டுவார்கள்.

5 - 8 வயது குழந்தைகள்.....
பெண் குழந்தைகள் கொஞ்சம் கூடுதல் சமர்த்தாக இருப்பார்கள். 

ஆண் குழந்தைகள் கைகளை தரையில் ஊன்றிக் கொண்டு கால்களால் கூடம் முழுக்க சுவரில் பல்லி போல நடப்பார்கள்....... ஓடிப் பிடித்து விளையாடுவார்கள்.

யோகா பயிற்சி முடிந்ததும் எல்லாரும் வலப்புறமாகத் திரும்பி எழுந்திருங்க.......(இன்னிக்கு மட்டுமா வாழ் நாள் முழுவதுமா_ ஒரு சுட்டிப் பையன்)

இது யார் தெரியுமா எங்க பெரியம்மா..... (என் சகோதரியின் மகன் 
இப்படி உதார் விட்டு எல்லாரையும் மிரட்டி வைத்திருந்ததாக என் உதவியாளர் கூறினார்)

எல்லாக் குழந்தைகளும் நன்றாக யோகாசனப் பயிற்சிகள், தினம் ஒரு கைவேலை,பாட்டுக்கள் கற்றுக் கொண்டார்கள்.
சமர்த்தாக சாப்பிட்டார்கள். (என்னது ராஜேஷ் வாழைபழம் சாப்பிட்டானா
? எங்க பாப்பா முறுக்கு சாப்பிட்டாளா?)

நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொண்டார்கள். (செருப்பை ஒழுங்கா வெச்சிருக்காங்களே? எங்கள் பிள்ளைகளா?)

தனித் திறமை நேரத்தில் ஒவ்வொருவரும் பாட்டுப் பாடி, நடனம் ஆடி, கைவேலைகள் செய்து காட்டி என எதிர் பாராத வகையில் அசத்தினார்கள்.(எத்தனை திறமைகள்???) கதை நேரத்தில் பல கதைகள் பல செய்திகள் நமக்குக் கிடைக்கும் .

விளையாட்டு நேரத்தில் மட்டும் சொம்போடும் துண்டோடும் நாட்டாமையா நாம் மாறியே தீர வேண்டும்.....(ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா....)

கிளம்பும் நேரம் நாளைக்கு என்ன சிற்றுண்டி என்று மறக்காமல் கேட்டு செல்வார்கள்.( என்னிடம் கேட்க பயம், என் உதவியாளரிடம் கேட்டு செல்வார்கள்) :) :)

கடைசி நாள் மாறு வேட போட்டி, யோகாசனங்கள் செய்தல் , பாடிக் காட்டுதல் என பெற்றோர்கள் அனைவருக்கும் செய்து காண்பித்தார்கள்.

காத்திருக்கிறேன்.............

பெரிய காதுகளுடன்..........





Friday, 12 September 2014

OOPS…..The Hot Java…..


May 8, 2000  ….

First day…. SSI Vadapalani, Chennai….  Java 2.0 (Sun) Course…..
Totally new to computer language…though I knew few packages (Fox pro, VB, Oracle, D2K)….. fish out of pond.

 Our faculty Ms.Ramya started teaching how to write objects and classes with flower braces used as parenthesis, immediately upon which I started getting nightmares filled with {{{{{{ }}}}}} which terrified me. (Sleepless in Saligramam ??)

Settled down to understand the basics with the help of my batch mates ( Engineering Junior guyzz…)

In a short while, got to know  a batch mate who happened to be  from my neighbourhood who knew programming as well as  riding a car &  two wheeler :D …….. (Raji Sriram)

Promptly attended the theory and practical classes ….Life went on smoothly until it was “ARRAYS”….. Leaving in choice the  Matrix multiplication question during school days ,always had  its toll on me :D

Meanwhile we registered in the SSI library  and explored  JAVA  in depth to  take up  online exams (almost once in a week, at times it was twice too ) conducted by the www.brainbench.com.

Learned very many concepts like HTML,Java script,Internet fundamentals,Perl, CGI,Corba,RMI,Serve lets , Java Beans and what not….The classes proved to be immensely interesting….70 of us thronged Ms.Ramya for her expertise in teaching  the Java concepts.. (cannot avoid thinking of the Objects,classes,multi threading  programs at the sight of progress (status) bar , or the server status appearing at the bottom of the window while clicking on a  hyperlink …)

We (Me & Raji ) chose to do a project for final evaluation on “SIMULATION OF EMAILS” & in a single day , learnt from my sister Vijaya Ramesh (who was a faculty with Raman computers, Mysore then) to develop a web page using class files[.css]  It was about “OLYMPIC PERSPECTIVE” which I submitted to SSI for HTML project. [Lance Armstrong got medal in that Olympics]

We put lot of effort  on our project day and night ,to get the output as desired ,with none to guide us or no previous project samples in the library……(Would have contacted Mr.Sabir Bhatia, no time to spare amidst  our busy schedule ) When I got a favourable output I rushed to her house and vice versa…
Hurrah…. Using String function , we could extract what we wanted……at last one fine moment….

We were the first to submit the project for evaluation .

public class MyJavaClass {
   public static void main(String []args) {    
       system.out.printIn (“ECSTASY - ENDLESS”) ;
 }
}
 COFFEE DAY(S)..  ..Indelible…..



அதே மணம்... அதே குணம் ...... அதே ருசி..... (வருடங்கள் பல கடந்தும்)


17 வயதில் திருமணம், சமையல் சுமாராக செய்யத் தெரிந்தாலும் மாமியார் உடன் இருந்ததால் நடைமுறைப்படுத்த வாய்ப்புக் கிடைக்கவில்லை....(கிட்டிய  பிறகு என்ன செய்தாய்என்று  கேட்காதீர்கள்)

முதற் கட்டம் :

இஞ்சி துவையல், வற்றல், தச்சி மம்மு தான் என் முதல் விருந்தினருக்கு நான் செய்த சமையல். அடுத்த விருந்தினருக்கு சுண்டைக்காய் வற்றல் குழம்பு, வேப்பம்பூ ரசம், பாகற்காய் பொரியல் (அன்று வீட்டில் வெல்லம் stock இல்லை) 
இன்று வரை மீண்டும் அவர்கள் இருவரும் என் வீட்டிற்கு வரவே இல்லை...

இரண்டாவது கட்டம் :

புத்தகத்தை பார்த்து சமைக்க பழகிய காலத்தில் சகோதரி விஜயா எங்கள் இல்லம் வந்திருந்தார். புது மாதிரியான அடை செய்தேன். 
அரிசி, துவரம் பருப்பு, ராகி, கோதுமை எல்லாவற்றையும் ஊற வைத்து (ஆட்டுரலில் நான் ஏழு மாத கர்ப்பத்துடன் ஒரு அடி தள்ளி அமர்ந்து  மாவை தள்ள சகோதரி  குழவியை சுற்ற ..) அரைத்து செய்தது.
என் சகோதரி: மாமா அக்கா எத்தனை கஷ்டப்பட்டு செய்திருக்கார், நீங்க எதுவுமே சொல்லலையே....
மாமா : எல்லாம் சரி தான்..... ஒவ்வொரு சமையல் குறிப்புக்கு கீழேயும் "தயிரில் தோய்த்து விழுங்கவும்" என  உன் அக்காவை எழுதிக்க சொல்லு  என்றார்.

மூன்றாவது கட்டம் :

என் சகோதரர் என்னுடன் தங்கி இருந்த நாட்களில், அக்கா......கிரீன் டைகர்....... என்று கூறி விட்டு பள்ளி செல்வார்..(குழம்பு பச்சை புளி வாசனை மாறாமல் இருக்கிறது நீ சாப்பிடும் முன்பு மீண்டும் கொதிக்க வைத்து எடு என்பது அதன் பொருள்) சுமாராக செய்யத் தெரிந்த புளிக் குழம்புக்கே இந்த விமர்சனம். சற்றே வயதான பிறகு, என் மகனிடம் அடேய்..... எதுவும் சொல்லாம சாப்பிட்டுடலாம்டா..... அடுத்த வேளை சாப்பாடு எப்படி இருக்குமோ? என்பார். 

நான்காவது கட்டம்:

ஒரு நாள் காலை ...கீழ் வீட்டில் குடியிருந்த மாமி , இன்னைக்கு உங்க வீட்டுல கேரட் பொரியல் தானே என்றவாறு மாடிக்கு வந்தார்.
ஆமாம் உங்களுக்கு எப்படி தெரியும் என கேட்க, உங்க வீட்டுல என்ன பொரியல்னு எனக்கு தினமுமே தெரியுமே..... உன் மகள் காலையில் நான் தலை வாரும் நேரம் தினமும் என் தலையில் தானே தூக்கி வீசுகிறாள் என்றார்.
மாலையில் என் மகன்: அம்மா........ (அலறல்) அக்கா இன்னைக்கு காயை சைக்கிள் ரிக்சால வரும் போது தான் சாப்பிட்டாள் (அ) தூக்கி வீசிட்டாள்
மகள் : அம்மா....... அவன் காயை தொடவே இல்லை. அப்படியே திருப்பிட்டான்.....

ஐந்தாவது கட்டம் :

நான் சாம்பார் பொடி அரைத்த விதம் சரி இல்லியோ என்று பக்கத்து வீட்டு அக்காவின் டப்பாவிலிருந்தே எடுத்து போட்டும் செய்து பார்த்தேன்.
(எப்படிம்மா வருஷம் முழுவதும் ஹோட்டல் போல ஒரே மணம் குணமா சமைக்கறே  - என் தகப்பனார்)

ஆறாவது கட்டம் :

(1)ஒரு நாள் அலுவலகம் முடிந்து இரவு திரும்பும் நேரம் மகனுடன் பேசினேன்.
மகன் : அம்மா டின்னர் தயாரா இருக்கு
நான் : (மகிழ்ச்சியுடன்) காலேஜ்லேர்ந்து வந்து சமைச்சியா?
மகன்: காலைல நீ செய்தது தான்.
நான்: (வருத்தத்துடன்)குண்டான் குண்டானா சமைச்சு வெச்சிட்டு போறேன் நீ இப்படி பண்றியே கண்ணா.....
மகன்: அளவு முக்கியம் இல்லை..... அது சாப்பிடற மாதிரியும் இருக்கணும்மா........
(2) என் மகன் : அம்மா.நீ அடுத்த ஒரு வாரத்திற்கு எந்த இரண்டு காயையும் சேர்த்து சமைக்க மாட்டேன்னு வாக்குறுதி கொடு

ஏழாவது கட்டம் :

(1).அமெரிக்காவில் 3 வாரங்கள் கால் உடைந்ததில் என்னால் மகளுக்கு பத்தியம் செய்து போட முடியாததை ஈடுகட்ட அடுத்த 3 மாதங்கள் பத்திய சமையல் தான் (வள்ளுவர் இதைத் தான் கொல்லாமை வேண்டும்னு சொல்லியிருப்பாரோ)
(2).சில நாட்கள் என் மருமகன் நான் தட்டில் சாப்பாடு போடும் போது கண் கலங்குவதை கண்டிருக்கிறேன். (மாப்ஸ் ....... நீங்க கண் கலங்கினது இந்த  அம்மா சாப்பாட்டை நினைத்தா  புஷ்பா அம்மா சாப்பாட்டை நினைத்தா? Please clarify 
(3).என் மகளின் தோழி தொலைபேசியில் ஒரு நாள், அம்மா பீர்க்கங்காய் தோலை எப்படி துவையல் செய்வது என்று கேட்டார். எனக்கு தெரிந்த பக்குவத்தை சொன்னேன்.(இன்றளவும் அது எப்படி இருந்தது என்று கேட்கவில்லை...) நமக்கு பீர்க்கங்காய் உள்ளே இருப்பதையே எப்படி சமைப்பது எப்படி என்பது  தெரியாது என்ற தகவல் அவருக்கு எப்படி தெரியும்?
(4).என் மகள் தொலைபேசியில் என்னிடம் சொன்னது : அம்மா...... நீ கிளம்பிய  பிறகு உன் மருமகன் இனிமேல் புதினாவே வாங்காதே என்று சொல்லி விட்டார் 

சமீப காலங்களில் :

(அ)என் மகன் : அம்மா இன்னைக்குக் காலையில் என்ன சாப்பாடு?
இதை மூன்று  விதமாக அர்த்தம் செய்து கொள்ளலாம்.
1.பல் கூட விளக்காமல் அதிகாலையில் Facebookல என்ன வேலை?
2. பசி வந்திருக்கும்
3.நிஜமாவே அம்மா சாப்பாட்டை மிஸ் பண்ணி இருக்கலாம், அமெரிக்கா போய் ஏழு மாதங்கள் ஆகி விட்டன ...(இது என்னுடைய அல்ப ஆசை)
(ஆ) என் மகள்: அம்மா பச்சை மிளகாய் ஊறுகாய் எப்படி போடறதுன்னு பெரியம்மாவை கேட்டு சொல்லு...(ரொம்பத்தான் தெளிவா இருக்காய்ங்கப்பா...)
(இ)என் மாமியார் எனக்கு பசிக்கவே இல்லைன்னு சொல்லி  விடுகிறார்  அனேக நாட்கள்

முக நூலில் விதம் விதமாக சமைத்து படம் பிடித்து போடுவதை பார்க்கும் போது எனக்கும் அப்படி எல்லாம் செய்து பார்க்க ஆசை 1/100 வினாடிகள் வருவதென்னவோ உண்மைதான்.......

பிரபல நிறுவனம் நடத்திய மகளிர் தினத்தை ஒட்டிய  ஆன்லைன்
போட்டிக்கு ஒரு ஸ்லோகன்  எழுதி அனுப்பி இருக்கோம்ல?
I love cooking because................
(சமைக்க சொன்னாத்தான் பிரச்சினை ... எழுத இல்லையே.....)

பின் குறிப்பு : எங்கள் சித்தி எப்போதும் சொல்வது: நன்றாக சமைத்துப் போட்டால் தான் நம் கணவருக்கு நம் மேல் "பியார்"(Affection, Love) வரும்.

வரூ(ம்) ஆனா வராது.......




WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...