Thursday, 11 September 2014

கண்டி கதிர்காமக் கந்தா.........



இலங்கை என்கிற ஸ்ரீலங்கா பற்றிய என் நினைவுகள் அவை  அறிமுகமான வரிசையில்.........

1.இலங்கை வானொலியில் தினமும் காலை 7.15 ~ 7.20 க்குள் ஒலிபரப்பாகிய ஸ்ரீதேவி வரம் கேட்கிறாள் என்ற பாடல்
 (என் தங்கை விஜயா அதை கேட்காமல் நகர மாட்டாள்.)

2. ஏழாம்  வகுப்பில் அறிய நேர்ந்த இனப் போராட்டம்
  (அன்னிக்கு பள்ளிக்கு விடுமுறை விட்டாங்கப்பா...)

3. சுராங்கனி சுராங்கனி ........ என்ற பாடல்
  (மாடி வீட்டு மச்சானுக்கொரு மாதிரியா ஆசை மதுரவீரன் சாமி போல
  ஆட்டு கிடா மீசை, வயசு வந்த பெண்ணை பாத்து ஏங்குறாரு பேச
  வம்பு செய்யுற மாமனுக்கு காத்திருக்கு பூசை என் போகும் அந்த  பாடல்)
  

4. கோவை அவினாசி லிங்கம் பள்ளியில் படித்த சக மாணவி ரதி சிவபாதம்.
  அவரின் தந்தை திரு சிவபாதம்.ஓபரெசன் மானேஜர்(அதாங்க... ஆபரேஷன்    மானேஜர்) பணியில் இருந்தார்.
  சிங்களத் தமிழுக்கு அறிமுகமான காலகட்டம்.
  நீங்கள் வடிவா இருக்கீங்களப்பா என்று என் தமிழறிவை சோதித்தார்.
  சிரிலங்கா எண்டு கதையுங்கோ எண்டு (மன்னிக்கவும்) என்று கதைக்க 
  சொன்னாவர்.(மீண்டும் மன்னிக்கவும்)
  (எங்கே இருக்கிறீங்கள் ரதி?)

5.எல் டீ டீ இ தலைவரும் அவரது நண்பர்களும் எங்களில் சென்னை சாலிகிராமம் குடியிருப்புக்கருகில் தான் தங்கி இருந்தார்கள். தெருவில் துப்பாக்கி சூடு துரத்தல் எல்லாம் நடந்தது. பத்மனாபா படுகொலை கூட பக்கத்தில் தான்.திலீபன் மரணம் அப்போது தான்.

6. இந்த அலைவரிசையில் ஒளிபரப்பாகும் அந்த அலைவரிசையில் ஒளிபரப்பாகும் என்றெல்லாம் அறிவிக்கப்பட்ட ரூப வாஹினி நிலைய நிகழ்ச்சிகள் திரையில் அலை அலையாக வரிசை வரிசையாக அவர்கள் சொன்னபடியே தெரியும். (இமான் அண்ணாச்சி குங்குமம் இதழில் சிலமாதங்கள் முன்பு சொல்லி இருந்தார், ரொம்ப சரி.. குத்து மதிப்பா ஒரு பாக்கியராஜ் படம் பார்த்த நினைவு இன்னும் இருக்கிறது)

 7. என் மகனுக்கு வாய்ப்பாட்டும் எனக்கு வயலினும் வாய்ப்பாட்டும் கற்றுத் தந்த எங்கள் குரு மறைந்த திரு. பி ஏ சிதம்பரனாதன் அவர்கள் இலங்கையில் 7 வருடங்கள் குருகுலம் போல வயலின் படித்தவர்கள்.அவரிடமும் இலங்கை தமிழின் சாயல் இருந்தது எனக்கு
நல்லா ஓர்மை இருக்குங்க... (ஓர்மை - நினைவு)

8  சங்கீத வகுப்பில் அறிமுகமான சகோதரி எண்டு நாங்கள் கண்டி கதிர்காமர் 
கோவில் தெருவில இருக்கற எங்கட வீட்டுக்கு போவம் என்று கண்கலங்கினார்.

9.அடுத்ததாக வருகிறார் எங்கட மனச கவர்ந்த தெ...........னா...........லீலீலீலீலீலீலீ
 அவருக்கு டேஷ் வந்தது என்றும், எனக்கு பயம் டொக்டர் என்றும் , எங்கட பெட்டைகள் இஞ்சாருங்கோ எண்டு சொல்வாங்கள் என்றும், அங்கே பள்ளம் பாருங்கோ என்றும் ஓமம் என்றும் மொழியின் அழகை நினைவில் நிற்கும் வண்ணம் சொல்லப்பட்ட படம்......
கூடவே இனப்போரின் வலிகளும்......

 10. அம்மா நீங்களும் எங்களோடு வந்துடுங்க என்று கெஞ்சி அவர் போராட்டம் முடியாமல் வரமாட்டார் என்று புரிந்ததும், அமைதியான வாழ்க்கை முறை தான் தேவை என்று வளர்ப்புத் தாயின் கன்னத்தில் முத்தமிட்ட அமுதா....

9.கனடா நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ள ராதிகா சிற்சபைஈசன் என் கவனம் ஈர்த்தவர்

10. கடைசியாக , என்னிடம் தற்போது கணினி படிக்கும் திருமதி பத்மினி. சிங்கள மொழியில் தம் கையெழுத்திட்டு என்னை சற்றே அதிர்ச்சிக்குள்ளாக்கியவர்........... (எதிர்பார்க்கலைங்க...., இவர் தான் இப்பதிவை எழுதும் எண்ணத்தை
எனக்கு ஊட்டியவரோ?)

ஆண்டவரே... உம்ம நான் கெஞ்சி கேட்டுக்கிடறது ஒண்டே தான்.. எம் இன மக்கள் வாழ்வு மீண்டும் மலர வேண்டும்,
கண்டி கதிர்காம கந்தா....... அவங்கள உம்முட கண்களை திறந்து பாரும்..... இந்த நிலையே தொடர்ந்தால் அவங்களுக்கெல்லாம் விசறு பிடிச்சுக்கும்.... இதை நீர் ஓர்மை வெச்சுகிடும் ஆண்டவரே...........(விசறு- பைத்தியம்)

பின் குறிப்பு : 

இப்பதிவை எப்படி மாற்றி எழுதினாலும் அது ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைக்க முடியவில்லை
நான் நேரில் கண்ட கேட்ட அனுபவங்கள் தான் அத்தனையும். இப்பதிவின் பின்னணியில் இருப்பவை சக மாணவிகளின் கள்ளுகடை பக்கம் போகாதே காலை பிடித்து கெஞ்சுகிறேன் என்று ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமான காலம் தொடங்கி எப்போது அங்கே போவோம் என்ற கதறலில் முடிகிறது.
கூட்டம் கூட்டமாய் குடும்பம் குடும்பமாய் சுற்றிலும் கண்டிருக்கிறேன். பவானி அகதிகள் முகாமில் கண்டிருக்கிறேன். புலம்பெயர்ந்து தவிக்கும் தவிப்பையும் பார்திருக்கிறேன்.ஷெல்லடிக்கராங்கோ என்ற தெனாலியின் கதறல் அங்கு உள்ள வாழ்க்கை முறையின் பிரதிபலிப்பு....... என் தோழி ரதி போல புலம் பெயர்ந்த ரதிகள் எத்தனை பேரோ??????

Aawwww…Its Hat…. Sorry Hot



The “SUNNY” weather reminds me of a few things ….

(1)The “SUNNY” weather of Chennai as described by Periyar Ramasamy Naickar “Its hotter for 9/12 months and  rest the hottest”

 (2) “SUNNY” reminds me of the Great Little Master Sunil Gavaskar who named his bat as “TONY”

(3) “SUNNY”  reminds me the translated dialogues of a Tamil movie enacted by Prabu deva , an NRI and Mayilsamy , as a slum dweller.
 A meeting is conducted by Prabhu Deva in the slum and Drunken Mayilsamy is the translator (interpreter??)

P.D : Good morning Ladies and gentlemen
M.S : அல்லாருக்கும் வணக்கோம்

P.D : This is a sunny day…
M.S : உச்சி வெய்யில் மண்டய பொளக்குது.

 Within few days of watching this movie..on my way  towards a friend’s house to grieve her mother’s demise , few steps away from the friend’s house, met Mr.Mayil samy face to face ,who resides in our saligramam neighbourhood , on his morning stroll. Next few minutes of mine spent in their house , controlling my emotions , would have got me an Oscar, if noticed by an observer... :D

(4)When I landed in San Francisco during my last trip , a co-passenger greeted me as follows “Hey, welcome to US, It’s a “SUNNY” day …..Have a great trip…”(It was Oct 16,2012). 
I was staggered what was special being sunny around noon (11.30 am ) and why I was greeted for a sunny day  until I disembarked the aircraft.  It was really cold & windy , for the preceding 6 months until I returned back.
(Amma…. Do u ever wash the sweater you wear  _ My son in law)

(5)Last but the least, If the word “SUNNY “ reminds you of the Canadian born porn actor turned Bollywood actress “SUNNY” Leone…….the Management is not responsible for further consequences……. ;)

Awaiting in anticipation , for the “SUNNY” days ahead……  :

எங்கள் வீட்டு யுகாதிப் பண்டிகை.....



எங்கள் ஊர் உங்களுக்கெல்லாம் மிக நன்றாகத் தெரிந்த கர்நாடக எல்லைக்கு அருகிலுள்ள (வீரப்பனால் பெயர் கெட்ட) சத்தியமங்கலம் .
எங்கள் மூதாதையர்களில் பலரும் கர்நாடக மாநிலத்துடன் தொடர்புடையவர்கள். (பெண் எடுத்தல் கொடுத்தல்)
அதனால் உகாதிப் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடுவோம். (என் மாமியாரின் பிறந்த ஊர் மைசூர் அருகிலுள்ள மேல்கோட்டை)
தமிழகத்தில் இது வேலை நாள் என்பதால், நான் அவ்வளவு சிறப்பாகக் கொண்டாடியது இல்லை.( விடுமுறை நாளாயிருந்தால் மட்டும் என்ன என்று என் பிள்ளைகளின் குரல் கேட்கிறது)
 இம்முறை என் கணவருக்கும் விடுமுறை.
மாமியாரும் வயதானவர். (94) அடுத்த வருடம் யார் எப்படி இருப்போமோ, இம்முறை சிறப்பாகக் கொண்டாடலாம் என்று முடிவு செய்தேன்.(மற்றொரு காரணம் வெட்டியா வீட்டில் இருக்கேன், கொஞ்சம் நல்லதா தான் சமைப்போமே?)
வாசலில் பெரிய கோலத்தில் ஆரம்பித்து, பெரிய விசாலமான வீட்டை சுத்தம் செய்து முடித்து(ஹெல்ப் மேட் கிடையாது), வெள்ளரிக்காய் மாங்காய் வேப்பம்பூ கலந்த சாலட், கீரை கடைசல், கடலைப்பருப்பு + பாசிப்பருப்பு சேர்த்த பாயசம், கறிவேப்பிலைத் துவையல் என என் மாமியருக்கு பிடித்த சாப்பிடக் கூடிய வகையில்(உப்பு, புளி, காரம் தூக்கலாக, மெத்தென்று - குறைவான பற்கள்) சமைத்து முடிக்க ஏறக்குறைய 11.30 மணி.(அதற்குள் கடுமையான கால் வலி)
பசிக்குமே என அவரது அறையில் என் கணவர் சாப்பாட்டை எடுத்து வைத்து விட்டு அருகிலுள்ள கடைக்குச்  சென்றார். (என் கணவர் இருக்கும் நேரத்தில் அவர் அறைக்குள் எனக்கு நோ எண்ட்ரி)
சில நிமிடங்களில் காகங்கள் கரையும் சத்தம் என் கவனத்தை ஈர்க்க , அவரது அறையை எட்டி பார்த்தேன்.
4 காகங்கள் ஜன்னலில் அமர்ந்திருந்தன. அங்கே நான் கண்டது....... சாதம் தயிர் சாதமாகி, அதன் மேல் துவையல் , கீரை என ஒரு வித கப் கேக் அமைப்பில் .......
நீங்களே சொல்லுங்க நான் இப்ப சிரிக்கணுமா அழணுமா????
என்னை வெச்சு காமெடி கீமெடி பண்றாங்களோ?

பின் குறிப்பு : நானே காகங்களுக்கு நேரடியாக சாதம் வைத்து புண்ணியத்தை சம்பாதித்திருக்கலாமோ??!!

ஆடி வாங்கலையோ ஆடி ??



இன்றைய தேதிக்கு இந்தியாவில் கூவிக் கூவி விற்கப்படும் ஆடி கார், எனக்கு முதலில் அறிமுகம் ஆனது ஒரு கிரிக்கெட் போட்டிக்கான பரிசுப் பொருளாகத்தான். (1986) யார் மேன் ஆஃப் தி மேட்ச் ஆகிறார்களோ அவர்களுக்கான பரிசு என ஒரு மேடையில் வைத்து சுற்றி சுற்றி காண்பித்தார்கள்.( யப்பா............என்னா அளகு !!?? தக தகன்னு எம் ஜி ஆர் மாதிரி மின்னுனது கண்ணுக்குள்ளயே நிக்குதே)

 (திரு ரவி சாஸ்திரி அதை பரிசாகவும் அதனுடன் சேர்த்து
வரி கட்டாமல் கொண்டு வந்தார் என்ற குற்றசாட்டையும் பெற்ற நினைவு)

அமெரிக்கா வாழ் நாட்களில் சூரிய பகவான் கருணை காட்டும் நாட்களில் நானும் பேரன் கேசவனும் நடைப்பயிற்சி மேற்கொள்வோம் (கொஞ்ச நேரமாவது இவனை எங்கயாவது கூட்டி போம்மா...... லூட்டி தாங்கலை...)
 பல வருடங்களுக்கு முன் என்றோ என் தகப்பனார், நான்  என் மகனை வெளியில் அழைத்து செல்ல சொன்ன போது , என்னால் முடியாதம்மா...உன் மகன் தெருவின் ஒரு பக்கத்துக்கும் மறுபக்கத்துக்கும் சீ (Z) எழுத்து போல நடக்கிறான் என்றார். நம்ம ஆளும் அதே ரகம் தாங்க.......
பொறுமையாக அவரை என்னுடன் நடக்க வைக்க நான் தேர்ந்தெடுத்த உத்தி (வாத்தியார் புத்தி எங்க போகும்??) அந்த குடியிருப்பில் வரிசையில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் கார்களை அவை எந்த நிறுவன தயாரிப்பு என கண்டு பிடிக்க கற்றுத் தர ஆரம்பித்தேன்.
பி எம் டபிள்யூ, ஹோண்டா(ஓதா), யூண்டாய்(ஊதாய்) , ஆடி  என கத்தி(குதித்து)க் கொண்டே வருவார்....

குடியிருப்புக்கு வெளியில் பெரிய சாலை, சாலையை கடந்தால் ரயில் நிலையம் , நடுவில் சிக்னல்...... சிக்னலில் வந்து நிற்கும்
கார்களுக்கு இவர் ஐயர்ன் மேன் கையுறை அணிந்து வந்து பவர் விடுவார்.(தான் பவர் போடுவதால் தான் கார்கள் அங்கே நிற்பதாக அவரது எண்ணம் :)) கையுறை போட்டு வர மறந்த நாட்களில் வெறும் கையால் பவர் விடுவார். (இரு பட்டீ........... பவர் போட்டுட்டு வரேன் )
தற்சமயம் கீழ்ப்பாக்கம் பகுதியில் நிறைய ஆடி கார்கள் தென்படுகின்றன....... (அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே....... நண்பனே நண்பனே.....குட்டி பையனே.....)லேண்டன்ஸ் சாலையும் டெய்லர்ஸ் சாலையும் இணையும் இடத்தில் எங்கள் குடியிருப்பு........ 3 ஆவது தளத்திலுள்ள எங்கள் படுக்கை அறை ஜன்னலில் இருந்து தினமும் காணும் காட்சி...  

ஆடி அசைந்து அவை வலது பக்கம் தெருவில் திரும்பும் அழகே தனி........(செம ஸ்மூத் பர்ஃபார்மன்ஸ்ங்க......)

இது ஆடி கார் இல்லைன்ங்க ..... ஆடாத கார் (நான் ஆடி கார் விற்பனையாளர் இல்லைங்க....... நம்புங்க.......)


விலை உயர்ந்த கார்களை வாங்கிடும் சீமான்கள்
வாங்குவது வண்டியை மட்டுமில்லை -அதன்
பதிவு எண்ணையும் சேர்த்தே தான்.

(எப்பூடி நம்ம கவித?)

பின் குறிப்பு : அலுவலக பணி நிமித்தம் நான் நிறுவனத்திற்கு கார்கள் வாங்கியது, விற்றது, ஃபேன்சி எண்கள் வாங்கியது, ஃபைனான்ஸ் ஏற்பாடு செய்தது,
குறிப்பிட்டவர்கள் காரை என்னிடம் சொல்லாமல் கூட டெலிவரி எடுத்து கொண்டு வெளியூர் சென்றது , டீலர் என்னிடம் அத்தகவலை
குறிப்பிட்டு உங்களுக்கு தெரியாதா என கேட்டது , மாதாந்திர EMI க்கள் தவறாமல் கட்ட ஏற்பாடுகள் செய்தது என பலப்பல நினைவுகள்.......
உடன் என் மருமகன் புது கார் வாங்கிய வைபவமும் இதில் உள்ளடக்கம் (காருக்கு என்ன பேரு மரும்புள்ளே ?  DCDG. COM இல்லைல்ல?!)

Wednesday, 10 September 2014

WINDOWS….. They fascinate me….


My first remembrance is Satyajit Ray movie in which a window is one of the main characters. His heroine’s life is shown through the window of her house.(Madhabi Mukherjee in Film  Charulatha) 
Windows   opened me the world of friendship. (My friend Viji used to mention that she felt really happy when the windows of my house were open,which  meant  my presence)
Windows  whether  they are of bus, tram, train or aircraft… I’d love to watch the beauty of nature.
Daffodils, when seen through the car window reminded me of the poem by William Wordsworth.

When all at once I saw a crowd,
A host, of golden daffodils;
Beside the lake, beneath the trees,
Fluttering and dancing in the breeze.




 At one time I started feeling sad about the missing green light of the Cropley Station (SanJose) for months ,seen through the window. (My grandson called me once to say that the green light is glowing and I could watch it if I visited California the next day)
One silver star seen from my bedroom window makes me  happy amidst my sleepless nights.(My grandson has a different idea of changing the silver star into golden ones which will make the world happy)
Happy to share with you all about my present residence is full of WINDOWS rather than walls and doors ………….
Windows ………… they are my EYES as ever.

ஸா........பா..........ஸா............


திருமணமான புதிது. 17 வயது. என் மாமியார் இசையில் மிகுந்த ஆர்வம் உடையவர், நன்றாக பாடக்கூடியவர்.
(தாமே சுயமாக பாடல்களை இயற்றும் வல்லமை படைத்த முன்னோர்களின் வாரிசு, அப்பாடல்களில் சிலவற்றை நாங்கள் குடும்ப பாடலாக இன்றும் பாடிக்கொண்டிருக்கிறோம்- ஆட்டுகுட்டி ரே ரே பாட்டோ, ஜானகி தேவி ராமனை தேடி பாட்டோ உங்கள் நினைவுக்கு வந்தால் நிர்வாகம்  பொறுப்பேற்காது )
அவரின் வற்புறுத்தலால் பின் தெருவில் இருந்த ஒருவரிடம் சேர்ந்தேன். மதியம் 1 - 2 வகுப்பு நேரம். அவர்களின்
உணவு நேரம் காலை 11 (பிரன்ச் தான் தினமுமே), அதன் பிறகு தூங்கி எழுந்து பின்பு தான் சொல்லி தரமுடியும்
என்று சொல்லிவிட்டார்கள் அவரும் அவரின் மகளும்.
(அப்போதெல்லாம் பால் லாரி தெருமுனையில் வந்து பூத்தில் கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்கள். வீட்டில் குளிர்சாதன பெட்டியும் கிடையாது. இப்போது போல கடைகளில் பால் கிடைக்காது.)

முன் அறிமுகம் போதும்...............வகுப்புக்கு செல்லலாம்......

மாமி : ஸா........பா..........ஸா............
(அவங்களுக்கு பாதி தூக்க கலக்கம் , எனக்கு அப்போது தான் உண்ட களைப்பு.......)
நான்: ஸா........பா..........ஸா............
மாமி : ஸ ரி க ம (ஒவ்வொரு எழுத்தையும் 4 எண்ணிக்கை என்று மனசில் வெச்சுட்டு பாடு)
நான்: சரி மாமி ... ஸ ....... ரி.........(மனசுல பால் வேன் சத்தம் கேக்குதா???)
மாமி : பாடும்மா ......க... ம......
நான்: க..................ம............. (வேன் சத்தமே கேக்கலையே..........)
மாமி: ஸரிகமபதநிஸ்...............
நான் : ஸ்நிதபமகரிஸ (வேன் போற சத்தம் கேக்கறாப்ல இருக்கே)
மாமி: ஸரி ஸரி ஸரி கம........
நான் :ஸரி ஸரி ஸரி கம........ (வேன் தெருமுனை போய் நிற்கும் சத்தம் கேட்கிறது)
மாமி :ஸரிகமபதநிஸ்...... 
நான் : மாமி பால் வேன் வந்துடுச்சு, இப்ப விட்டா பால் நாளைக்கு காலைல தான்..... நான் கிளம்பறேன் மாமி
மாமி : சரி வீட்டுல பிராக்டீஸ் பண்ணிட்டு அடுத்த வகுப்புக்கு வா.....

பாவாடை தாவணி அணிந்த ,குட்டி பெண்தானே .....தெருவில் ஓடி வருவேன்.... என் மாமனார் (என் தாய் வழி பாட்டனார்) இந்தாம்மா பை வேன் வந்துடுச்சு என்பார்..... வாசலோடு பையை வாங்கி கொண்டு தெருமுனைக்கு ஓடுவேன்.
(குட்டி அக்கா போறாங்க என்பார்கள் என் வயதை ஒத்தவர்கள்)

2 மாதங்கள் இது தொடர்ந்து முடிவுக்கும் வந்தது. 

பின் குறிப்பு : பல வருடங்களுக்கு பிறகு , என் மகனுக்கு துணையாக அவனது சங்கீத வகுப்பிற்கு சென்ற போது
எனக்கே ஆர்வம் ஏற்பட்டு  வாய்ப்பாட்டும் வயலினும் கற்றுக் கொண்டேன்.

ஸ........ப.......... ஸ்............ ப..........ஸ............

தகதிமிதா.............


என் தந்தையார் மருத்துவராக பணிபுரிந்த உக்கரம் என்னும் குக்கிராமத்தில் நாங்கள் வசித்த நாட்கள். நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.

எங்கள் பக்கத்து வீட்டில் தன் தாயுடன் வசித்த சின்னம்மா (அவரது பெயரே அது தான்) என்ற பெண்மணி நடனம் ஆட கற்றவர், நிறைய நிகழ்ச்சிகளும் செய்தவர் என்பதை அறிந்த போது எனக்கும் அவரிடம் நடனம் கற்கும் ஆர்வம் வந்தது. இவர் தந்தையாரின் மருத்துவமனையில் செவிலியாக(Nurse) வேலை செய்து வந்தார். 

என் நடன வகுப்பு அவர்கள் இல்லத்தின் பின்புறம் அமைந்த வராண்டாவில் (அரசாங்க குடியிருப்புகளில் தரை வீடுகளில் பின்பக்கம் செல்லவும் கதவு இருக்கும்). அக்காவின் தாயாரைப் பாட்டி என்று அழைப்போம். 

அக்காவிடம் சம்மதம் பெற்று வகுப்பில் சேர்ந்தேன்.

அக்கா முதலில் நடன அசைவுகளிலேயே வணக்கம் சொல்வது எப்படி என கற்றுத் தந்தார்.
 
அக்கா : அரை மண்டி போடு, அப்புறம் கைகளை மடக்கி இடுப்பில் வெச்சுக்கோ

நான்: சரிங்க அக்கா (அதே போல செய்வேன்)

அக்கா: வலது காலை தூக்கி தரையில் டப் என்று சத்தம் வருமாறு தட்டு (இது தாங்க "தை")
அடுத்து இடது காலை தூக்கின் தரையில் டப் என்று சத்தம் வருமாறு தட்டு (இதுவும் "தை" தாங்க)

இதே போல செய்து பழகு. "டப்"புனு நல்லா சத்தம் வராப்ல தட்டணும் சரியா? சுவரைப் பார்த்த படி திரும்பி நின்று பயிற்சி செய் கண்ணு.

நான் : சுவரைப் பார்த்து கொண்டே  வலது காலால் ஒரு டப், இடது காலால் ஒரு டப் (தை தை )
  
பாதம் வலிக்க தொடங்கும். திரும்பி பார்த்தால் அக்கா இருக்க மாட்டார்.

நான் பத்மினி, ராகினி, பத்மா சுப்பிரமணியம் போல ஒரு நாட்டிய தாரகையாகும் பேரார்வத்துடன் (ஆர்வக்கோளாறா வயசுகோளாறா???) பாதம் வலித்தாலும் தொடர்ந்து "தை தை" போட்டு கொண்டே இருப்பேன்.

சிறிது நேரத்தில் பாட்டி வாயில் வெற்றிலையை மென்ற படி அந்தப் பக்கமாக வருவார். 

பாட்டி : நான் ஆடுவதை அங்கீகரித்து ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ...என்பார். ஹாலிவுட் ஸ்டைலில் போல சொன்னால் You are doing great என்பது போல ஒலிக்கும் அந்த ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நான் : (தீனமான குரலில் ) பாட்டி...பாட்டி...அக்கா எங்கே பாட்டி?

பாட்டி : வருவாங்க வருவாங்க, நீ ஆடிட்டு இரு சாமி (சாமி என்பது கோவை மாவட்டத்தில் சிறு பிள்ளைகளை செல்லமாக அழைக்கும் சொல்)

நான்: மறுபடியும் தை தை...

சிறிது நேரத்தில் பாட்டி மறுபடியும் ஏதோ வேலையாக வருவது போல வந்து மேற்பார்வையிடுவார்.

நான் : (முன்பை விட மிகவும் தீனமான குரலில்) ...பாட்டி அக்கா எங்கே பாட்டி?

இம்முறை என் தீனக் குரல் கேட்டு அது வரை வாசல் பக்கமாக நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த அக்கா தான் குடித்துக் கொண்டிருந்த  டீ டம்ளருடன் உள்ளே வருவார், .

நான் : அக்கா , முடித்து விட்டேன். அடுத்த அசைவை சொல்லி கொடுங்கள்.

அக்கா: (டீ குடித்து கொண்டே) நான் நடனம் கற்க சென்றபோது 6 மாதம் இதே பயிற்சி தான், சலிக்காமல் செய்த பிறகே என்னுடைய குரு அடுத்தடுத்த பயிற்சிகளை சொல்லி தந்தார் என்பதாக ஒரு மிக நீண்ட லெக்சர் கொடுப்பார்.

நான்: சரிங்க அக்கா ...(மீண்டும் தை தை...) 

ஒரு மாதமாகியும் தினமும் அதே "தை தை", அதே லெக்சர் என தொடர்ந்தது.

அரை மண்டியிட்ட நிலையில் கையை மடக்கி இடுப்பில் வைத்த படி தை தை போட்டவர்களுக்கு இதன் அருமை பெருமைகள் புரியும்.

6 மாதங்கள்  "தை"க்க எனக்கு பொறுமை இல்லாத  காரணத்தால் நடனபயிற்சி வகுப்பு நிறைவுற்றது. 

இன்றளவும் Salsa, Zumba போன்ற நடனங்களைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் உள்ளது என் மனத்தில். 

அந்த காலத்துல நாங்க ஆடாத ஆட்டமா? :) :) :) 

மொழி........



பன்மொழிகள் கற்கும் ஆர்வம் எனக்கும் என் மரபணு மூலம் வந்ததுதான்.
நான் தமிழ் ஆங்கிலம் தவிர மற்ற மொழிகள் எதுவும் கத்துக்காம இருந்தா எப்படி?

1.ஹிந்தி
6 ,7 ஆம் வகுப்பு ஆண்டு இறுதி விடுமுறையில் எழுத படிக்க  கற்றேன்.
 என் சமவயது தோழர்களுடன் கபடி, கிட்டிபுள்,கோலி குண்டு,மரத்தில் ஏறி ஒளிந்து விளையாடுதல், பம்பரம் விடுதல் ,டென்னிகாயிட் விளையாடுதல், வீட்டு
வேலைகளுக்கு உதவுதல் (இது கடைசிதான்) என பல்வேறு வேலைகள்.
ஆசிரியையாக வேலைக்கு சேர்ந்த புதிதில் ,திருமதி உஷா அவர்கள் நான் சொல்லிதரேன்பா கண்டிப்பா வாங்க என்று அன்போடு வரவேற்றார்.
மே அந்தர் ஆ சக்தீ ஹூ ஜி ? ( அதாங்க நம்ம எச்சூஸ்மீ)
உள்ளே வந்தாச்சு..... எனக்குத்தான் படிக்கத் தெரியுமே என்பதால் பாடம் ஆரம்பம்.
ஹம் பாஜார் கே லியே ஜா ரஹா ஹை ஔர் சாவல் , தால் ,ஸப்ஜியோங்க் கரீத் ரஹே ஹை (நாம் கடை வீதிக்கு
செல்கிறோம் அங்கே அரிசி, பருப்பு, காய்கறிகள் வாங்குகிறோம்)
முதல் நாளே இத்தனை சாமான்களை கடைவீதியிலிருந்து தூக்கிட்டு வர முடியலைங்க.... ஹிந்தி புத்தகத்தையும்
அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன்.

2. சமஸ்க்ருதம் (தேவர்களின் மொழி)
ஹிந்தி ,சமஸ்க்ருதம் இரண்டு மொழிகளுக்கும் பொதுவான எழுத்துரு தேவனாகரி.
பாரதீய வித்யா பவன் போய் புத்தகம் வாங்கி வந்து(சமஸ்கிருதம் - ஆங்கிலம் பதிப்பு, அது தான்
கிடைத்தது) தெரிந்த ஒரு ஆசிரியரிடம் நானும் என் சகோதரியும் சேர்ந்தோம்.
(ஒருமை, பன்மை, இருமை என பல மைகள் ..... பாலாஹா க்ரீடாங்கணே மே க்ரீடதி(சில்ட்ரென் ஆர் ப்லேயிங்க் இன் தி கிரௌண்ட்)
(பாலா - ஒருமை, பாலாஹா - பன்மை, ஆமாம் இருமைக்கு என்னங்க?)
ஜனனீம் ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்கதபி கரீயசி - பாரதியார் சொன்னாப்ல சொன்னா பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும்
நனி சிறந்தனவே)

ஒரே மாதத்தில் ஒரு தேர்வுக்கான பாடங்களை படித்து தேர்ந்து விட்டதால் இரண்டாவது தேர்வை நேரடியாக எழுதச் சொன்னார் 
ஆசிரியர்.
முதல் பாடமே இலக்கணம் ராமோ ராமஹ ராமேதி...... என தொடங்கி வேற்றுமைகளை சொல்லி தந்தார்.
சம்மேடிவ் க்லாஸ், அசர்டிவ் க்லாஸ் என
அதற்கு ஈடாக ஆங்கிலமும் படிக்க வேண்டி இருந்தது (எங்கள் நேரம் தமிழ் பதிப்பு தீர்ந்திருந்தது)
தேவலோகத்துக்கான சாட்டிலைட் சிக்னல் சரியாக கிடைக்காத காரணத்தினால் இன்று வரை
தேவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை

(தமிழில் ஒன்று முதல் ஏழு வரை - ஐ ஆல் கு இல் அது கண், எட்டாம் வேற்றுமை விளி வேற்றுமை (உ - ம்) கண்ணா என என்றோ
படித்தது இன்றும் நினைவில் இருக்கிறது, தாய் மொழி வழி கல்வியின் சிறப்ப்ப்ப்பை அன்று தான் உணர்ந்தேன்) 

3. பிரஞ்ச்
 மகனை கற்று தர சொன்னேன்.(எனக்கே தெரியாது) அவனது ஆசிரியையிடம்
கேட்டேன். (நேரமே இல்லை)அலையன்ஸ் பிரன்சே போய் படிப்பதாக சொன்னேன். அதற்கு அவர், அங்கே வயதானவர்கள் படித்தால் கிண்டல்
செய்வார்கள் என்றார். அவருக்கு போட்டியாக வந்து விடுவேன் என்ற பயம் தான் அடிப்படை காரணம்.( அந்த காலகட்டத்தில் நான்  டியூஷன் சென்டர் ஒன்றை வெற்றிகரமாக நடத்தி கொண்டு இருந்தேன்)

(www.mangolanguages.com)மேங்கோ லாங்குவேஜஸ் . காம் இலவசமாக சொல்லி கொடுத்த காலம்.
குட் மார்னிங் - பாஞ்சூர் , மேடம் - மதாம் ,தாங்க் யூ - மெர்சி , ஹௌ ஆர் யூ - கொமொன் தொலே வூ,யெஸ் - உயீ
இதை  கத்து முடிக்கறதுக்குள்ளேயே
 அது பணம் கட்டி படிக்கும் வெப் சைட்டாகி விட்டது

4.ஸ்பானிஷ்
குட்டி பேரனுடன் கோ டியாகோ கோ (சொல்ல மறந்துட்டேனே.. 
இந்த டியாகோ நம்ம டோரா இல்ல அவளோட கசின்) பார்த்தும் அவனிடமிருந்தும் கடைகளில் பார்த்தும் கேட்டும் இம்மொழி கற்கும் ஆர்வம் ஏற்பட்டது. செப்டம்பரே, அக்டோபரே, நவம்பரே, டிசம்பரே.... எனேரோ, ஃபிப்ரேரோ என தொடராமல் கேசவின் வார்த்தைகளில் ஜனவரியே.......ஃபிப்ரவரியே.... மார்ச்சே என தொடர்ந்தது.
friends - amigos ,good bye - adios , thank u- gracia ,bird - pajaro ,water - agua  (டியாகோ பார்த்த பலன்)
nada - nothing - ஹாலிவுட் உபயம்
5.சைனீஸ்
கேசவுடன் கை -லான் கதை மூலம் கற்று கொள்ள ஆரம்பித்தோம். கை - லான் நம்ம டோரா போல ஒரு கதாபாத்திரம்.
சைனீஸ் அமெரிக்க பெண் , யே யே அவளின் தாத்தா
hai di ho -  பிடித்து இழுங்க, ni hao- ஹலோ , xie xie - நன்றி ,BAA - 8 ,SHI- 10
(நாங்கள் இந்த வார்த்தைகளை சொல்லி பழகி கொண்டிருந்த போது எங்களை கடந்து சென்ற என் மருமகனின் முகபாவனையை
இன்றளவும் மறக்க முடியவில்லை.......இவங்களுக்கு என்னவோ ஆயிடுச்சுன்னு நினைச்சாரோ??)
இவை தவிர மலையாளம் , தெலுங்கு கற்று கொள்ள ஆரம்பித்து நடுவில் விட்டு விட்டேன்.....கன்னடம் சொல்ப சொல்ப
கொத்து நன்கே ........... சைகை மொழியையும் விட்டு வைக்கவில்லை

ADIOS AMIGOS.....!!!!!!!!!!!!!!!

பின் குறிப்பு :சான் ஹொசேவிலிருந்து  இந்தியா திரும்புவதற்கு சில நாட்கள் முன்பு தான் வட அமெரிக்காவில் வசிப்பவர்கள்
தங்களுடைய நூலக அட்டையின் மூலம் இந்த www.mangolanguages.com இணைய தளத்தில் பதிவு செய்து கொண்டு இலவசமாக
பல்வேறு மொழிகளை கற்கலாம் என்று அறிந்தேன்.
(இல்லைன்னா மட்டும் படிச்சிருக்கவா போறாய்னு நீங்க கேக்குறது எனக்கும் கேக்குதுங்க)

அன்று வந்ததும் இதே நிலா ............ இன்று வந்ததும் அதே நிலா........ல ல லா..........


பல வருடங்களுக்கு முன்பு,என் கணவரது
அலுவலகம் மூலமாக கிடைக்கும் எல் டீ சீ (விடுப்புடன் கூடிய சுற்றுலா செல்லும் சலுகை)யில் அவரது அலுவலக நண்பர்கள் குடும்பத்துடன் புவனேஸ்வர்,கல்கத்தா ,டார்ஜீலிங்க் வழியாக தபால் கட்டுக்கள், மீன் வறுவல், சாக்கடை மணம், மண் குடுவை தேனீர், கடுகு எண்ணெய் பூரி என மணம் குணமாக கேங்க்டாக் சென்றடைந்தோம்.
கஞ்சன் ஜங்கா மலை , ட்சாங்க்போ ஏரி , சீன எல்லை என பார்த்து முடித்த பின் அங்கிருந்த ஒரு புகழ்பெற்ற செல்வ செழிப்பான (பணக்கார மடாலயமுங்கோ)புத்த மடாலயத்திற்கு சென்றோம்.
சுற்றிலும் ராணுவ வீரர்கள் கையில் ஏகே 47 ரக துப்பாக்கியுடன். (நமக்கு தான் ராணுவம் , காவல் துறை சேர்ந்தவங்களை பார்த்தாலே வெடவெடக்குமே.. இப்போதும் அப்படி தான் ( நாம என்னவோ நிழல் உலக தாதாக்கள் அல்லது சர்வதேச கிரிமினல்கள் போலன்னு
நினைப்பு... கையில் விலங்கை மாட்டி வீதியில் இழுத்து போய் சிறையில் போட்டுடுவாங்கன்னு பயந்தேனப்பூ)
அந்த மடத்தில் 4 வயது முதல் 90 வயது வரையிலான புத்த பிட்சுக்களை காண நேர்ந்தது. தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு எங்களை பார்த்ததும்(கேட்டதும்??)ஒரே மகிழ்ச்சி. அவர்களின் துணையுடன் மடாலயத்தை சுற்றி பார்த்தோம் [இததே(ன்) ராணுவ மரியாதைன்றாங்களா??]
என்ன காரணமாக ராணுவம் அங்கே குவிக்கப்பட்டிருக்கிறது என்று விசாரித்த போது , அங்கே இருந்த புத்த பிட்சுக்கள் இரு குழுக்களாக பிரிந்து இருப்பதாகவும், வரும் புத்த பௌர்ணிமாவை எந்த குழு எடுத்து நடத்துவது என்பதில் அவர்களுக்குள் பிரச்சினை என்றும் என்னேரமும் அங்கே கலவரம் ஏற்படலாம் என எதிர்பார்த்து அரசாங்கம்
ராணுவத்தை அங்கே குவித்திருப்பதாகவும் அறிந்தோம். (என்ன கொடுமை சரவணன் இது???)

இதை கேட்டதும் என்றோ படித்த இந்த கவிதை  என் நினைவுக்கு வந்தது...........
"ஆசையே துன்பத்திற்கு காரணம் 
புத்தர் சிலை அதிக விலை......"

புத்தம் சரணம் கச்சாமி!!!!!!!!

சொர்க்கமே என்றாலும்........


நேற்று மோர்மிளகாய் வற்றலும் சுண்டைக்காய் வற்றலும் வறுத்தபோது, என் கடந்த வருடத்திய அமெரிக்க பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவத்தை நினைவுகூறாமல் இருக்க முடியவில்லை...

ஒவ்வொரு முறை வற்றல் வறுத்த போதும் மகளோ மருமகனோ
ஒரு துண்டோ கெட்டி அட்டையோ விசிறியோ கையில்
தயாராய் வைத்து நிற்க, புகை கண்டறியும் கருவி ஒவ்வொரு முறையும் அலற, அதற்கு அவர்கள் சாமரம் வீச , அப்போதும் சில நாட்கள் அது விடாமல் அலற எண்ணை சட்டியை எடுத்துக் கொண்டு வாயிற்கதவைத் திறந்து கொண்டு நான் திறந்த வெளிக்கு ஓடியதும் உண்டு..... அப்போது நான் நினைத்தது ராமராஜன் அவர்கள்

ஒரு படத்தில் பாடிய சொர்க்கமே என்றாலும்........பாடலைத்தான்........

Tuesday, 9 September 2014

The History of Geography!!!


Timeline ……… 1976 – 1977


On the evening of the last examination (annual) , came this high school  junior of mine promptly to collect my books which she would use … She was really happy to receive my geography book which was neatly covered, no pencil mark, no dog ear , no folds in the edges…. Yeah……. As you all guess , it was completely untouched by my hands. Such was my passion for Geography.

Timeline ………. 1992

During my B.Ed., I had to be an intern for 21 days  in any school. I joined so, where higher secondary education was introduced only in that year . I got  7 + 7 periods for commerce and book keeping  and the balance 14 periods for the week were allotted to teach Geography for 6 to 8 classes. (Sure , the person who discovered sorry invented .. that commercial law and corporate accounting are inter related with geography be recommended for Nobel Prize ….)

 Started learning about estuaries , deltas,valleys …Prairies, Steppes, Downs ( Grassland plains  without trees ) Prairies – North America, Steppes – South America, Downs – Australia……(Real nightmare..) Always seen with Maps of various continents, magnifying glass, Atlas …looking into the maps ………( God knows where those places are in the map)…. To top my miseries….. I was always mentioned as “Geography Miss” by all the kids , teachers & management invariably……..It really bothered…..

Slowly I started to understand the logic magic of the pattern of lessons for each continent, which ultimately triggered my interest to learn more about the landscape patterns (Political features, Physical features, Flora & fauna(Vegetation), Industry , Transport & Trade ).

Timeline ………..2010

It was a clear sunny day and our flight was from the West coast to the East coast of North American continent. 30,000 ft from the ground……..( San francisco to New York)
The landscape was clearly seen from  the air craft which included the yellow, green and red signal lights ….. (trust me…..)

While gazing through the window, I noticed the landscape beneath………. It was breathtaking …… Starting from the San francisco bay, brick colored neveda desert (Grand canyon?!) , a  river for miles and miles , vegetation around the river, great lakes and finally comes the Hudson Bay (New York)…..(just before the landing the Brooklyn bridge )exactly what I had read and noticed in the physical features map of North America…..Amazing……
Gosh….I missed to take a pic of the Grand Canyon! Better luck next time ……….(Selfie wish, Huh?)










Monday, 8 September 2014

நீல நிறம்.......வானுக்கும் கடலுக்கும் மட்டும் இல்லை..........

கடந்த வருட அமெரிக்க வாசத்தில் ....... தேங்க்ஸ் கிவிங்க் டே வை ஒட்டிய வார இறுதியில் 4 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு வந்த திங்கள்.
மதியம் 3 மணியளவில் குட்டீஸ் மற்றும் மகள் உறங்கிக் கொண்டு இருந்தார்கள்.

பெரிய பேரன் தூங்கும் நேரம் எனக்கு ரொம்பவே முக்கியமான நேரம்ல? அப்பத் தான் டீவி , இணையம் எல்லாம்........

அப்போது, ஒரு தொலைபேசி அழைப்பு....சான் ஆண்டானியோவில் வசிக்கும் என் மகளின் நாத்தனாரிடமிருந்து........ (ஆண்டர்சன் அத்தை)
இந்த முனையில் யார் இருக்கிறார்கள் என்று கூட கவனிக்காமல், ஹலோ கூட சொல்லாமல்.......

ரம்யா  : மன்னீ........... சீக்கிரம் ஸ்கைப் வாங்க..... (அலறல்)
நான் : நான் உன் மன்னியின் தாயார் பேசறேன்.... என்னம்மா ஏன் பதறுகிறாய்?
ரம்யா: மாமீ........ என் மகளோட தொல்லை தாங்கலை (10 மாத குழந்தை)..... அண்ணாவை பாக்கணும்னு அடம்..காலைலேர்ந்து அட்டகாசம் தாங்க முடியல........ இதுக்கு மேல என்னாலயும் தாங்க முடியலை.... என் கணவர் வர இன்னும் 5 மணி நேரம் ஆகும்.....
நான் : இப்ப தான் ரெண்டு வாண்டுகளையும் தூங்கப் போட்டுட்டு உன் மன்னியும் தூங்கறாங்க...... இங்கேயும் அதே அட்டகாசம் தான்
தூங்கி எழுந்ததும் பேசுவோம்....

விடுமுறை நாட்களில்  தகப்பனுடன் இருப்பதால், திங்களன்று அவர் வேலைக்கு சென்றவுடன், தகப்பன்களுக்கு கொண்டாட்டம் (??!) தாயார்களுக்குத் திண்டாட்டம்..... (மொத்தமே அங்கே குடும்பத்தில் இரண்டே பெரியவர்கள்....... விடுமுறைன்னா கூடுதலாக ஒரு ஆள் வீட்டிலிருப்பார்.)

குட்டீஸ் வரைக்கும் எதுக்கு போகறோம்? எனக்கே ஒவ்வொரு திங்களும் நீல நிறமாகத் தான் இருக்கு இப்பவெல்லாம்.........

பின் குறிப்பு :
Blue Monday (Noun)
Meaning  : a Monday regarded as a depressing work day in contrast to the pleasant relaxation of the weekend.

Welcome Friends ...

Hi friends ...

Welcome to my Blog!

As suggested by my Dear Son , I've created this Blog to post my little write ups ...

Prompted  by friend Varun Chathurvedi and insisted by son Vivek Muralidharan...