Thursday, 13 November 2014

மல...ஏளு மல......

என் கணவர் ஒரு முறை வீட்டிலிருந்த படுக்கை விரிப்புகளை எடுத்து மலைக்கு கொடுத்துட்டேன் என்றார்.

யாருக்கு அண்ணா மலைக்கா? - மைத்துனர் மகன்
உண்ணா மலைக்கா? - மகள்
தண்ணீர் மலைக்கா? - நான் 
இல்லை இல்லை ஏழு மலைக்கு - என் கணவர்.

[ஏழு மலை எங்கள் அடுக்கு மாடி குடியிருப்பின் காவலராக சேர்ந்த புதிதில்]

ஏழு மலைக்கு [திருப்பதி] செல்லும் பேறு 5 வருடங்களுக்குப் பிறகு கடந்த 11 ஆம் தேதி கிடைத்தது. வழக்கமாக அங்கே வாலண்டியராக சேவை செய்ய செல்லும் குழுவினருடன் சென்றோம். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இப்போது அந்த சேவை தடை என்பதால் தரிசனம் மட்டுமே.

சப்தகிரி எக்ஸ்பிரஸ், காலை உணவு, திருச்சானூர் தாயார் தரிசனம், வேனில் திருமலை.
திருச்சானூரில் கூட்டம் மிக அதிகம். சில நொடிகளே தாயாரை தரிசிக்க முடிந்தது [நீங்க அம்மாவைப் பார்க்கணும்னு அவசியம் இல்லை பக்தர்களே, அம்மா நீங்க எங்க இருந்தாலும் உங்களை பார்ப்பா..._ சன்னதியில் இருந்த ஒரு கைடு பெண்மணி ஜருகண்டியை இப்படி நாசூக்காக தமிழில் சொன்னார்]
திருமலையில் கோவிலுக்கு மிகவும் தொலைவில் கிட்டத் தட்ட ஊருக்கு வெளியே தங்குமிடம்.

மாலை 5 - 6 தரிசன நேரம் என ஆன்லைன் பதிவின் படி 4 மணிக்கே கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினோம். பல இடங்களில் கடும் செக்யூரிடி சோதனைகள் கோவில் வாசல் உட்பட.[ தேவுடு ஓடியா போக போகிறார் இங்க இருந்து , அமைதியா செக்யூரிடி செக்கிங் முடிச்சுட்டு போங்க - கோவில் ஊழியை]

கோவில் வாசல், அங்கிருந்து ஆர்ஜித சேவா நுழைவு வாசல், உள்ளே வரிசையில் 1.30 மணி நேரம் நடை என 4 - 6.45 தொடர் நடைக்குப் பின் கடவுளை தரிசித்தோம். [10 வினாடிகள் நல்ல தரிசனம் சற்றே உயரமானவர்களுக்கு மட்டும்.] மற்றவர்களால் அதற்கும் குறைவான வினாடிகளே ஏழுமலையானை தரிசிக்க முடிந்ததாக கூறினர்.

                                          காணவில்லை

1. கோவில் வாசலில் பக்தர்களின் கால்கள் நனையும் வண்ணம் நீர் வந்து கொண்டே இருக்கும். 
2. திருப்பதி என்றாலே குரங்குகள்.
3. வரிசையில் நிற்கையில் கேட்கும் பக்தர்களில் ஏடு கொண்டலவாடா வெங்கட் ரமணா கோவிந்தா கோவிந்தா என்ற குரல்கள்
அதிகம் கண்டது
4. டிரடீஷனல் வியர் என சொல்லப் படும் நம் பாரம்பரிய ஆடை வகைகள் [ டிசைனர் ரவிக்கைகள், டிசைனர் ஆடைகள், ஹை ஹீல் செருப்புகள், ஜீன்ஸ் பேண்ட்டுகள், செஃபீக்கள்- காலம் மாறி போச்சா இல்லை எனக்கு வயசாயிடுச்சா?? ரெண்டும் தான் ] 
5. திருப்பதி என்றாலே மலைகளும் கோவிலும் தான். தங்கி இருந்த இடத்திலிருந்து இவைகள் பார்வைக்கே  படவில்லை.சென்னையில் இருப்பது போன்ற தோற்றம்]
6. நவம்பர் மாதத்தின் நடுக்கும் குளிர் . விடியற்காலையில் கூட வெது வெதுப்பான கால நிலை

மகிழ்ச்சி
1. மலையில் உள்ள மரங்கள் வெட்டப் படவில்லை
2. புது நண்பர்கள்
3. மலை சுற்றுப் பயணம் - மனதில் திக் திக், வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி, யாராவது அருகில் பேசினால் , என்ன சொன்னீங்க?? காது அடைப்பு,
  மைசூர் மலை பயண நினைவுகள் நெஞ்சில், இன்னும் சற்றும் குறையாத வயிற்றைப் புரட்டும் உணர்வு
4. திருப்பதியில் கால், தலை வலிக்க வலிக்க நடை
5. தாயின் கர்ப்பத்துக்குள் தூங்குவது போன்ற பாதுகாப்பான உறக்கம்
6. திருப்பதி பீமாஸ் காலை உணவு, சப்தகிரி எக்ஸ்பிரஸ் ஏசி கோச் பயணம்
7. குழுவினருடன் கலந்துரையாடல் [அந்த காலத்துல ... 20 - 50 வயதுக்குள் மிக சிலரே] அந்த காலத் திருமலைக்கும் இன்றைய நிலைக்கும் உள்ள வித்தியாசங்களை அறிய முடிந்தது. 

ஆற்றாமை
வருத்தம் என்று சொல்ல முடியாது, ஆயினும் விடவும் முடியாது..... என் கணவர் மட்ட்ட்ட்டும் அதிகாலையில் ஜீயருடன் செல்லும் குழுவினருடன் சேர்ந்து சென்று ஏழுமலையானை ஆர அமர தரிசித்து வந்தார். பெண்டிருக்கு அந்த வாய்ப்பு அளிக்கப் படுவதில்லை.
மொத்தத்தில் மிகவும் எதிர்பார்க்கப் பட்ட , 1 1/2 வருடங்களுக்கு பிறகு ஊருக்கு வெளியே சென்ற இனிமையான நிறைவான ஒரு பயணம். 
[மேற்கே செம்பரம்பாக்கம் (சம்பந்தி வீடு) , தெற்கே செம்பாக்கம் (சகோதரர் வீடு) தான் என் எல்லை.] 


ஏடு கொண்டலவாடா வெங்கட்ரமணா கோவிந்தா கோவிந்தா!!!!

பின் குறிப்பு :

எங்கும் எப்போதும் வீட்டை விட்டு வெளியில் வேலைக்கு போகும் பெண்களே மற்றவர்களுடன் [ஆண் பெண் புதியவர்கள் என்ற வித்தியாசம் பார்க்காமல்] பழக முன்வருகிறார்கள். மற்றவர்கள் தங்களுக்குள்ளேயே பேசிக் கொள்கிறார்கள். புதியவர்களுடன் அறிமுகப் படுத்திக் கொள்ளவே தயங்குகிறார்கள்.ஏன்??????



No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...