Wednesday, 5 November 2014

ஆண்டியான அத்தை.....


சிறு வயதில் எங்களுக்கு கற்றுத் தரப்பட்ட முக்கியமான நல்ல பழக்கம் , அனைவரையும் மரியாதையுடன் உறவு முறை சொல்லி அழைக்க வேண்டும்.

அண்டை அயலாரை பெரியவர்கள் அக்கா அண்ணா என்றும் சிறுவர்கள் அத்தை, மாமா என்றோ மாமி மாமா என்றோ தான் அழைப்போம். 
(கணவன் மனைவியாக இருந்தாலும், வயதில் சிறியவர்களாக இருந்தாலும் எங்களுக்கு அக்கா அண்ணா தானுங்கோ)
தோட்டம் சுத்தம் செய்பவர், மரம் ஏறி தேங்காய் பறிப்பவர் என யார் வந்தாலும் வாங்க போங்க தான் ... அதனால் அவர்களும் என்னிடம் (எங்களிடம்)மிகுந்த பிரியத்துடன் சின்னம்மா வாங்க போங்க என்றே அழைப்பார்கள். 
இங்கே வந்த புதிதில் எங்கள் ஹெல்ப் மேட் .தே.... இங்க வா என்று தான் என்னை அழைப்பார். 4 நாட்களில் அவரை வேலையை விட்டு நிறுத்தி விட்டேன்.(இந்த தே... பழக பல வருடங்கள் ஆனது)
என் மகள் சிறு வயதில் வாசலில் நின்று கொண்டு அனைவரையும் உறவு முறை சொல்லி அழைப்பார்.... பாட்டீ, தாத்தா , அக்கா, மாமா, அண்ணா என்று அவர்களின் வயதை மனதில் கொண்டு உறவு சொல்லி அழைத்து அசத்துவார். அதனால் இவரிடம் நின்று பேசி விட்டுச் செல்வார்கள். (வீட்டு உரிமையாளர் கண்ணா யாரையும் பாட்டீன்னு சொல்லாதே மாமி இல்லைன்னா அத்தைன்னு சொல்லு...எதுக்கு வம்பு. )உடனே இவர் .நாயுடன் வரும் பெண்மணியை நாய் மாமீ என்பார். இன்றளவும் அந்த பெண்மணி உன் மகள் எப்படி இருக்கிறாள் என்று விசாரிக்காமல் இருப்பதில்லை....
மாமா, மாமி என்று அழகாக அழைத்து வந்த சிலர் இப்போது ......ஆன்டீ  அங்கிள் என்று அழைக்கிறார்கள்..... (நம்மை ஆண்டியாக்கிட்டாங்களே.... )
சமீபத்திய ஹெல்ப் மேட் எங்கள் குழந்தைகள்.தன்னை தன் பெயருடன் சேர்த்து அக்கா என்று அழைப்பதை விரும்புவார். (ஷியாமளா அக்கா) தற்சமயம் என் பேரனும் அக்கா என்று அழைக்க. எத்தனை வருஷம் என்னை அக்கான்னே கூப்பிடுவீங்க..... ஆயான்னு கூப்பிடு செல்லம் என்பார். இவரும் அன்பாக.ஆயா என்று அழைத்துப் பேசுவார்.
எப்போதும் நான் நினைத்து வியப்பது...... ஆண்கள் தாத்தா என்று கூப்பிடுவதை உடனே ஏற்றுக் கொள்வது போல பெண்கள் என்றும் ஏற்றுக் கொள்வதே இல்லை. ஏன்??????????? ஏன்???????? ஏன்??????????
பாட்டி என்பது அழகான உறவு முறை இல்லையா? அம்மா, அம்மம்மா, க்ரேண்ட்மா, டேடிம்மா, மம்மிம்மா ..ஒய் மா?
(பாட்டி பாட்டி, பப் பப், பா...., பட்டீ, பாப்பி பாப்பீ, பப் பப் பாப்பீ...... இதெல்லாம் கேட்கவே நிறைவா இல்லை?)
ஒரு முறை என் பேரன் கேசவ் அமெரிக்காவிலிருந்து வந்து இறங்கியவுடன் அவரை வரவேற்க சென்ற எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் உறவு முறையை பெயருடன் சேர்த்து அச்சு அத்தை, உசா பட்டீ, முரளி தாத்தா, கோவிந்தன் தாத்தா, சுப்பா பட்டீ, பாலா மாமா... என சொல்லி அசத்தினார். (உபயம் : ஸ்கைப் சாட்)
அமெரிக்க வாசத்தில் அனைவரும் உறவு முறை சொல்லி அம்மா, அப்பா, தாத்தா , பாட்டி என்றே அழைத்தார்கள்.
சில நாட்கள் முன்பு பூ விற்கும் பெண்மணியின் ஒரு வயது பேரன் அவர் இடுப்பிலிருந்தபடி என்னை பார்த்து "ஆயா" என்று அழைத்தார்....... அவர் 
ஆன்டீன்னு கூப்பிடு என்று சொல்லித் தந்தார்.... ஆயாவை ஆயான்னு கூப்பிடுவது தான் அழகு மாத்தி சொல்லித் தராதீங்க என்று சொன்னேன்.
சரி தானே நட்பூஸ்?
இன்றும் நான் பேசுவதைக் கேட்டு நீங்கள் கோவையை சேர்ந்தவர்களா என்று கேட்கிறார்கள்..... (உங்களுக்கு நான் சொல்லாமலே புரிஞ்சிருக்கும் என்னுடைய முக நூல் குறிப்புகளில் நிறைய அக்கா, அண்ணா தென்படும்.)

பின் குறிப்பு : உறவுகள் தொடர்கதை........... சில நாட்கள் முன்பு என் மகனிடம் நான் பல முறை அழைத்தும் நீங்கள் தொலை பேசவே இல்லையே ஏன் என்று கேட்டதற்கு , அம்மா அப்போது அனந்த் அண்ணா வந்திருந்தார் என்றார். உடன் யார் வந்திருந்தார்கள் ? சுபா அக்கா ..... 
(இதெல்லாம் ரத்ததுலயே வாரதுங்கோ, எங்க போனாலும் மாறாதுங்க்ணா.......)

No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...