Thursday, 27 September 2018

சின்னச் சின்ன .....


கதைகள் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் சிறுவயது முதலே தன் பங்களிப்பை தொடங்கி விடுகிறது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது சிறுகதைகளுக்கு சால பொருந்தும்.

சிறுவயதில் என் சித்தி சொல்லிய Cinderella  மற்றும் Snow White, பாட்டி கூறிய புராணக் கதைகள் தொடங்கி புத்தகங்களில் படித்த பல சிறுகதைகள் பலவும் என் நினைவில் நிற்கின்றன . 

என் வாழ்க்கையை வழிநடத்திய இரு சிறு கதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதை தொடர்ந்து சில சிறந்த சிறுகதைகளை அறிமுகப்படுத்துகிறேன் .

முதலாவதாக , திரு இறையன்பு IAS அவர்கள் கூறிய(எழுதிய ) கதை .

பட்டுப்பூச்சி (butterfly)  தட்டான்பூச்சியும்(Dragonfly)  தான் கதாபாத்திரங்கள். தட்டான் பூச்சிக்கு பட்டு
பூச்சியின் அழகையும் பொலிவையும் பார்த்து பொறாமை. 

தட்டான் பூச்சி : பட்டாம்பூச்சியே நீ மட்டும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறாய்?

பட்டாம்பூச்சி :  நான் அழகற்ற  கம்பளிப்புழுவாய்த் தான்  இருந்தேன். பிறகு ஒரு கூட்டுக்குள் 14 நாட்கள் உணவு தூக்கம் இன்றி சிரமத்துடன் அடைந்து கிடந்தேன். வெளியுலகை காண வரவே இல்லை. 15 ஆவது நாள் நான் வெளியில் வந்த போது இது போன்ற அழகிய தோற்றத்துடன் இருந்தேன் .

நீதி : தவம் இருந்தால் வரம் கிடைக்கும். உழைப்பே உயர்வு .

இரண்டாவது கதை ஒரு இளம் பெண்ணின் கனவு பற்றியது .

 ஒரு சிறிய ஊரில் ஒரு இளம்பெண் வசித்து வந்தாள் . இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட அந்த பெண்ணிற்கு   பியானோ இசைக்க வேண்டும் என்று ஆசை. யாரேனும் தம்முடைய பியானோவை கொடுத்தால் சில மாதங்களாவது தன்னுடைய வீட்டிற்கு எடுத்து சென்று வசித்து விட்டு, திருப்பி  தந்து விடலாம் என்று நினைப்பாள்.

அவள் தன்னுடைய அலுவலகத்திற்கு தினமும் பேருந்தில் செல்வாள். ஒரு நாள் ஒரு வயதான பெண்மணி தன்னுடைய தோழியிடம் , நான் 6 மாதங்கள் வெளியூருக்கு செல்லப் போகிறேன் என்னிடம் உள்ள பியானோவை வாசிக்காமல் விட்டு வைக்க எனக்கு விருப்பமில்லை யாரேனும் தெரிந்தவர்கள் இருந்தால் கூறுங்கள் நான் வரும் வரை அவர்கள் உபயோகித்துக் கொள்ளட்டும் என்று கூறிக் கொண்டிருந்தார்.

இதைக் கேட்ட இளம்பெண்ணுக்கு மிகுந்த மகிழ்ச்சி. தான் பாதுகாப்பாக வைத்திருந்து திருப்பி தருவதாக சொல்லி பியானோவை தன் வீட்டிற்கு எடுத்து சென்று , 6 மாதங்களுக்கு பிறகு திருப்பித் தருகிறாள்.

நீதி : உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் . கனவுகளை முழுமையாகக் காண வேண்டும். சொந்தமாக பியானோ வாங்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் ??

மனதில் நின்ற சிறுகதைகளில் சிலவை மட்டும் ......

(1)God sees the truth , but waits  - Leo Tolstoy 

பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடம். இன்றும் நினைவில் நிற்க என் ஆசிரியை திருமதி.விமலாவும் ஒரு காரணம். 

ஒரு வழிப்போக்கன் வெளியூருக்கு பயணம் மேற்கொள்கின்றான் .       
வழியில் , ஒரு ஊரில் தங்குமிடத்தில் ஒரு கொலை நடக்கிறது. தவறான சந்தர்ப்ப சாட்சிகளின்படி  வழிப்போக்கன் சிறையில் அடைக்கப் படுகிறான். 26 வருடங்கள் சிறையில்  செய்யாத குற்றத்திற்காக கழிக்கிறான். கொலை செய்தவன் ஒரு திருடன் தன்னுடைய தவறை ஒத்துக் கொள்கிறான். மறுநாள் வழிப்போக்கனை விடுதலை செய்ய அதிகாரி  வரும்போது ,அவன் ஏற்கனவே இறந்திருப்பான்.

(2)ஏறக்குறைய சொர்க்கம் - திரு சுஜாதா 

மிகச் சிறந்த எழுத்தாளர். பல துறைகள் பற்றியும் எழுதியுள்ளார்.  Electronic Voting Machine இல் இவரது முக்கியமானது. 1965 ஆம் ஆண்டு எழுதியவைகள் கூட இன்றைக்கும் புதுமையாகவே உள்ளன. 
இரண்டு நாட்கள் முன்பு, நூலகத்திலேயே அமர்ந்து அவரது "கணையாழியின் கடைசி பக்கங்கள் " புத்தகத்தின் சில கட்டுரைகள் படித்தேன். அவரது நகைச்சுவைக்கு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

நடுத்தர வர்க்க குடும்பம். ஒரு தம்பதி . அழகான மனைவிக்கு திரைப்படத்தில் நடிக்க ஆசை. கணவனின் விருப்பத்திற்கு மாறாக நடிக்க செல்கிறாள். மனைவியைப் பிரிய விரும்பாத கணவனும் உடன் செல்கிறான் . உதவியாளர் போல செயல்படுகிறான். மனதை தேற்றிக் கொண்டு பணம் தரும் சுகங்களை அனுபவிக்க பழகிக் கொள்கிறான்.
நண்பர் ஒருவர் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்பார். அதற்கு இவரின் பதில் ....

 "ஏறக்குறைய சொர்க்கம்"

(3)Gift of Magi - O.Henry 

இதுவும் பள்ளிப் பாடம்தான் . இது உலகின் மிகச் சிறந்த சிறுகதைகளுள் ஒன்று .

O.Henry மிகச் சிறந்த ஆங்கில சிறுகதை எழுத்தாளர். இவரது கதைகள் குதூகலமாக ஆரம்பித்து மெல்லிய சோகத்துடன் முடியும்.

ஒரு தம்பதியின் அன்பை உணர்த்தும் கதை. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ஒருவருக்கொருவர் பரிசு வழங்கும் பழக்கம் மேலை நாடுகளில் உண்டு. 
நீண்ட கூந்தலுடைய தன் மனைவி விரும்பிய மர  சீப்பினை தன்னுடைய கடிகாரத்தை விற்று பரிசாக வாங்கி வருவான் கணவன். 
அவன் மனைவியோ , கணவன் நீண்ட நாட்களாக அணிய விரும்பிய கடிகாரத்திற்கு தன்  நீண்ட கூந்தலை விற்று strap வாங்கி வருவான்.


எண்ணங்களே வண்ணங்களாக ......

No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...