Wednesday, 27 December 2017

Your kind attention please!!

Have you ever noticed "Ladies and gentlemen, your kind attention please!" over the public addressing system during your wait in the railway station or an airport?

Our attention is sought before making an announcement since attention is the action of dealing with or taking special care of someone or something.

For the past few months, I had been conducting "Story telling" sessions in the Government district libraries of Chennai city. The sessions lasted for 2 hours and the participants were children aged 5-15.
 
As observed the children were very inattentive and got distracted even for a trivial thing, though majority of them were adult children. I had to plan the subsequent sessions with various activities in between, which actually led to a break every 10 minutes for a certain activity related to the story narrated.

According to the psychologists, the attention span of children lasts from 5-20 minutes maximum. The general cut off is 5 minutes for the children and 20 minutes for older children and adults. [Dear Managers, keep your meetings short or with breaks please. Dear parents, let your advice session to your children be short and sweet]

And I observed that the retention of attention in children was really challenging even though they were extrinsically motivated with special gifts at the end of the session for their groomed behavior, attention and retention skills. Intrinsic motivation of getting inner satisfaction and recognition by others alone can boost up the morale of the children to develop their attention span to the maximum. [This can be achieved by displaying their art work or drawing, making them sing or dance etc]

Extrinsic motivation is currently used as stimuli as in Pavlov's theory. According to the Russian psychologist Ivan Pavlov's greatest Nobel winning theory, learning can be conditioned with external stimuli. By constantly training the children with proper stimuli, the attention span can be increased and the learning can be improved. [Practice maketh perfection with a good external stimulus. The stimuli may be play time, tv time or reading time]

Learning can be developed by fulfilling the low level needs - physiological, safety, belongingness, self esteem which will automatically lead to the high level need of self actualization, as per Maslow's hierarchy of needs. For this the parents should take the initiation at home and the teachers at school. When the basic needs are eliminated, higher things can be achieved. [Start with reading out books for the children, tell bed time stories]

When we stop talking, we start hearing what others talk and what is happening around us. [Parents can guide the children to observe things, people, flora, fauna etc during travel, accompanying to the library]

Learn to be attentive and attentive to be a learner!!

Thursday, 14 December 2017

Beauty (un)limited !!

MIGHTY HIMALAYAS 
VALLEY FILLED WITH SMOG

RIVER BEAS AT HER BEST COLOR 

SMOG



SIMLA - HIGH RAISED BUILDINGS

SOLANG VALLEY @ 6 PM

BRIDGE OVER BEAS

SUNSET AT SOLANG VALLEY

Saturday, 16 September 2017

கடைக்கு போலாம் கைவீசு .....

பல வருடங்களுக்கு முன்பு .....

வெளிநாட்டில் வசிக்கும் உறவினர் மற்றும் நண்பர்கள் , ஊருக்கு வரும் போது பரிசுப் பொருட்கள் வாங்கி வருவார்கள். வெளிநாடு என்பது அரேபிய நாடுகள், இலங்கை, பர்மா ,மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து என கோபால் பல்பொடி range தான் அதிகம் இருக்கும். அமெரிக்காவெல்லாம் மிக அரிது . அமெரிக்காவென்றால் அதிக பட்ச அன்பின் வெளிப்பாடாக ஒரு picture postcard அனுப்புவார்கள்.

அரேபிய நண்பர்கள் perfumes (ஒரு விதமான மணத்துடன் இருக்கும்) மற்றும் சேலைகள் வாங்கி வந்து பரிசளிப்பார்கள். மற்ற கிழக்காசிய நாடுகளில் இருந்து chocolates , ரொட்டி மிட்டாய் என்றழைக்கப்படும் wafers , சிறு  பிள்ளைகளுக்கு ஆடைகள்.   Kit kat chocalate bar  முதன் முதலில் சிங்கப்பூரில் விற்கப்பட்ட போது நிறைய வாங்கி வந்து தந்தார்கள். ஆசையுடன் அக்கம் பக்கத்தாருக்கு கொடுத்தது இன்னும் மறக்கவில்லை.

சரி ...flash back போதும்........

இப்போதெல்லாம் அமெரிக்கா வந்து செல்வது என்பது வாசலுக்கும் கொல்லைக்கும் நடப்பது போல ஆகிவிட்டது. (அனைத்து கண்டங்களுக்கும் இது பொருந்தும் )

ஊரின் அமைப்பு பற்றிய ஒரு சிறு அறிமுகம் முதலில் ....

அமெரிக்காவில் வீடுகள் ஒரு பகுதியிலும் கடைகள் பல மைல்கள் தள்ளி வேறு பகுதியிலும் இருக்கும். இந்தியா போல பெட்டிகடை, முக்கு கடை, நாடார் அண்ணாச்சி கடை, நாயர் டீக்கடை ,கையேந்தி பவன் எதுவும் இல்லை. கடைகளும் சிறிய அளவில் இல்லை. பெரிய பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் தான்.

Wholesale - Cotsco , உணவு பொருட்கள் - Safeway , சாப்பாடு - subway , McDonald , General goods -Target , Walmart , Stationery - Staples , Art and Crafts - Michaels   உதாரணத்திற்கு சில .
அவை தவிர இந்தியன் ஸ்டோர்ஸ், Saravana bhavan,aappa kadai, anjappar ஆங்காங்கே உண்டு. இந்தியர்கள் உண்ணும்  காய்கறிகள் ,பழங்கள், கீரைகள், மளிகைப் பொருட்கள் , உணவுப் பொருட்கள், சாட் உணவுகள் என கிடைக்கும். இதே போல சீனர்கள் ஜப்பானியர்கள் என அவரவருக்கு ஏற்ற கடைகளும் உண்டு.

கடை எல்லாம் சரிதான். ஏதேனும் பொருள் வாங்கணும்னா எப்படி போவது ?  போக்குவரத்துக்கு அவரவரே கார் ஓட்டி செல்ல வேண்டும். மகளா மருமகனா?  சஸ்பென்ஸ் !! (patti, don't you know driving? press the accelator with one leg, brake with another leg, hold the steering wheel with one hand ..._ Niece's 3 year old son)

வாரம் முழுவதும் தேவையான பொருட்களின் லிஸ்ட் தயாராகும். வார இறுதியில் பால் ,தயிர் என லிஸ்டில் இருக்கும் பொருட்களை வாங்கி வந்து வைக்க வேண்டும்.

ஒவ்வொரு பொருள் ஒவ்வொரு கடையில் கிடைக்கும். அநேகமாக standard size . Deal வரும் சமயம் பலரும் ஒரே நிற ஆடைகள் அணிந்திருப்பார்கள். ஜூலை 4th  அன்று ஒரு பூங்காவில் பல  பல ஆண் குழந்தைகள் என் பேரன்கள் அணிந்திருந்த சிவப்பு நிற கட்டம் போட்ட சட்டையில் இருந்தார்கள். அநேகமாக online purchase தான். (உபயம் google express, amazon)

ஒரு பொருள் வாங்க பல நாட்கள் ஆகும் சமயத்தில் .
கடந்த முறை கூபர்டினோ வந்தபோது , என் மகனுக்கு ஒரு bike  (நம்ம bicycle தாங்க) வாங்க வேண்டி இருந்தது. Walmart  சென்று பார்த்த போது ஸ்டாக் இல்லை. ஆர்டர் போட்டு விட்டு வந்து விட்டார்கள். ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு பிறகு , கடைக்கு பொருட்கள்  வந்த  பிறகு அதை assemble செய்து விட்டு , ஈமெயில் அனுப்பினார்கள். மருமகனும் மகனும் SUV யில் சென்று அந்த bike ஐ வீட்டிற்கு எடுத்து வந்தார்கள். (கடைகள் பல மைல் தொலைவில் என்பதை நினைவில் கொள்க )

ஒரு உபரி தகவல் இங்கே.

சென்னையிலிருந்து இயங்கும் கருட வேகா கூரியர் சேவையில் வேலை செய்யும் ஒரு பெண்மணி அமெரிக்காவின் பல ஊர்களுக்கும் இந்தியாவிலிருந்து மாதாந்திர மளிகை சாமான்கள் அனுப்பப் படுவதாகக் கூறினார். ஒவ்வொரு பொருளும் 2  கிலோ அனுப்பலாம். காரணம் கேட்டபோது அவர் சொன்னது, பல ஊர்களில் கடைகள் 2  மணி நேரப்பயணத்தில் உள்ளதால் , நேரம் பணம் அலைச்சல் எல்லாம் இதனால் மிச்சப்படுவதாக கூறினார். குறிப்பாக East Coast . Silicon valley மாம்பலம் , மைலாப்பூர் போல. கடைகள் மிக அருகில் ,  மைல் தொலைவிற்குள் உள்ளன .

ஊருக்கு வேண்டிய பொருட்கள், பரிசுப் பொருட்கள் வாங்குவது இன்னும் சிரமமான வேலை. பள்ளி அலுவலகம் செல்லும் போது உடன் செல்ல  முடியாது , திரும்பி வரும் நேரம் (ஒவ்வொரு பேரனுக்கும் ஒவ்வொரு dispersal time .) பயல்களுக்கு பசி வந்துடும். ஷாப்பிங் போனால் அதகளம் தான்.  இரவு 8 மணி வரை ஏதேதோ வகுப்புகள். ஏற்றி இறக்கி ....
இடையில் கிடைக்கும் 10  நிமிடத்தில் நம்மை உடன் அழைத்து சென்று , சீக்கிரமா வாங்குங்க என்பார் மகள். அவ்வளவு பெரிய கடையில் நமக்கு வேண்டிய பொருள் எங்கே இருக்கிறது என்பதை கண்டு பிடிக்கவே 10 நிமிடம் போதாது , எங்கே வாங்கறது? எதற்கு போனோம் என்பதே மறந்து போகும் அநேகமாய் .

தற்சமயம் இங்கே uber இல் செல்ல முடியும் என்றாலும் தொலைபேசி இல்லாத காரணத்தால் தனியாக அனுப்ப மாட்டார்கள். (whatsapp  wifi  புண்ணியத்தில் )     நம்  கைப்பணத்தை செலவு செய்ய விடமாட்டார்கள். அவர்கள் card தான். எந்த கடையில் என்ன discount , deal , எந்த கூப்பன்(கூப்பன் இல்லே அது கூப்பான் ) எதற்கு செல்லும் , யாமறியோம் பராபரமே ! (பண்டிகை கால விற்பனை சமயத்தில் சலுகை விலையில் கிடைக்கும் அம்மா , வாங்கி வைக்கிறேன்)

துணிகள் நன்றாக இருப்பதாக எண்ணி எடுத்து பார்த்தால் Made in India .

எந்தக் கடையும் நடந்து செல்லும் தூரத்தில் இல்லை .....

 மிக சில இடங்களுக்கு எப்போதாவது ஒரு பேருந்து அல்லது ரயில் செல்லும். நமக்கு தேவையான கடைகள் அந்த பகுதியில் இருக்காதே ...

(இங்கு வந்து செல்லும் அனைத்து பெற்றோருக்கும் இவைகள்  பொருந்தும்.)

4 மாதங்கள் இருக்க போகிறோம் என்றால்  எப்போதெல்லாம் கடைகளுக்கு அழைத்து செல்கிறார்களோ அப்போதே ஒவ்வொன்றாக வாங்கி வைக்கணும். ஒரு கடை இல்லைன்னா மறறொரு கடை என்ற பேச்சே இல்லை.

கடைசி நிமிட ஷாப்பிங் என்பது சொல்லில் அடங்காத சிரமத்திற்கு உரியது. பச்சை நிறத்தில் கோடு  போட்ட வெள்ளை சட்டை, 7  ஆம் number செருப்பு .... என்பதெல்லாம் வேலைக்கே ஆகாது. (ஹ்ம்ம்ம் ....ஒரு செருப்பு , அதை கூட வாங்கி வர முடியலை) 10 மைல் பயணித்து கடைக்கு போனாலும் கடையில் இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம். வேறொரு branch க்கு பயணித்துக் கொண்டிருந்தால் விமானம் நாம் இல்லாமலே கிளம்பி விடும் .

பல பிரச்சினைகளுக்கு இடையில் நாங்கள் வாங்கி வைத்து தரும் chocalate க்கு கிடைக்கும் கமெண்ட் : இதெல்லாம் இங்கே தெரு முனை கடைலையே கிடைக்குது எதுக்கு சிரமப்பட்டு தூக்கிட்டு வந்தீங்க
Food preserving / freezer  boxes : கல் உப்பு போட்டு சமையல் மேடையில் அடுப்புக்கு அருகில் வீற்றிருக்கும் நாம் அடுத்த முறை பார்க்கும்  போது
முத்து பவழம் etc : நீ குடுத்த strand ஐ எங்கே வெச்சேன்னே நினைவில்லை ( எங்கு எப்போது bead show நடைபெறுகிறது என்று பார்த்து ,போக வர 120 மைல்கள் பயணம் செய்து வாங்கி வந்தது யாருக்கும் தெரியாது)

வார இறுதி நாட்களுக்காகக் காத்திருக்கிறேன் ....
Shopping செய்ய அழைத்து செல்வார்கள் என்ற நம்பிக்கையுடன் ...வார இறுதி நாட்களும் பிஸியான நாட்களே ... கோவில், பாட்டு வகுப்பு, சமஸ்க்ருத வகுப்பு, குமான் வகுப்பு, தமிழ் வகுப்பு, ஸ்லோக வகுப்பு,பிறந்த நாள் பார்ட்டிகள் , பள்ளி விழாக்கள், பெற்றோர் ஆசிரியர் கழக மீட்டிங்குகள் ........

ராமரும் கிருஷ்ணரும் விநாயகரும் தம் பிறந்த நாளைக் கொண்டாட வார இறுதி நாட்களுக்காகக் காத்திருக்கும்போது நானெல்லாம் எம்மாத்திரம் ??

அமெரிக்கவாழ் உறவினர்களே நண்பர்களே ....

Tulsi  brand  California Prunes எங்கே கிடைக்கும் ?

என்னவென்று சொல்வதம்மா

சென்னை மாநகர வாசிகளால் உனக்கென்னப்பா வெய்யிலுக்கு தப்பி அமெரிக்கா போறே என்ற பொருமல் எந்த தேவதையின் காதில் விழுந்ததோ ....

வெயிற்காலத்தில் முதல் முறையாக அமெரிக்க பயணம்.  .

மே மாதம் முதல் வாரம். வந்திறங்கியதும் பிரிட்ஜ் உள்ளே  இருப்பது போன்ற அந்த குளுமை காணவில்லை .ஒவ்வொரு முறை சான்பிரான்சிஸ்கோவில் விமானம் தரை இறங்கியதும் சக அமெரிக்க பயணிகள் Its sunny.Have a  great  day என வாழ்த்துவார்கள். இம்முறை யாரும் வாயே திறக்கலை அப்பவே நான் சுதாரிச்சிருக்க வேணாம்  ...ஹ்ம்ம்ம்

வசந்த காலத்தின் இறுதி கட்டமாக எங்கெங்கும் பச்சை பசுமை . கத்தரிப்பூ நிறத்தில் பூக்கள்.  ஒவ்வொரு பருவ நிலைக்கும் மாறுபட்ட நிறங்களில் பூக்கள் பூக்கும்
எங்கெங்கும் ராஜாக்களும் செம்பருத்தியும் விதம் விதமான நிறங்களில்.

ஜூன்  ஆரம்பம் .  வெய்யிலின் தாக்கம் ஆரம்பம். குடிக்கும் தண்ணீர் உடம்பில் ஒட்டாமல் வெளியேறும். இந்த ஊர் மக்கள் சொல்வது போல சொன்னால் its weird (இவங்களுக்கு எல்லாமே weird தான்றது வேறு விஷயம் )

இங்கே 80  டிகிரி க்கே சென்னையின் 100 டிகிரிக்கு சமமான வெப்பம். அவ்வப்போது வியர்வை. இரவுகளில் அய்யகோ.... குளிர்கால உடைகளை பெட்டியின் அடிப்பாகத்தில் வைத்து நம்ம ஊர் ஆடைகளை அணிய ஆரம்பித்தேன்.... இப்படி சில நாட்கள்.

பள்ளிகளுக்கு  ஜூன் 10 - ஆகஸ்ட் 13 விடுமுறை. வெய்யில் காலத்தில் வெளியில் விளையாட முடியாது என்பதால், நூலகங்களில் நாங்கள் A /C போடுகிறோம் அனைவரும் இங்கே வாங்கன்னு அழைப்பு மேல் அழைப்பு விடுக்கிறார்கள்.

அடுத்த சில நாட்களில், குளிர ஆரம்பித்தது. வெய்யில் 68 -70 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் .  பெட்டிக்கு அடியில் போன ஆடைகள் மீண்டும் மேலே.

அடுத்த சில நாட்கள் காற்றுடன் கூடிய மிதமான வெய்யில். கடைக்குச் சென்று shrug எனப்படும் லேசான கம்பளி ஆடை வாங்கி அணிய ஆரம்பித்தேன்.

ஜூலையில் வெய்யில்  ஆரம்பித்தது. . மேலே உயரே உச்சியிலே ....102  டிகிரி பாரன்ஹீட் வெப்பம் .  Northern hemisphere வெய்யில் . மதியம் 3 - 7 தான் உச்சத்தில் இருக்கும். 8 .30 க்கு அஸ்தமனம். 10 மணி ஆனாலும் வெளிச்சம்.  மீண்டும் 4 மணிக்கே விடியத் தொடங்கும். ( பாட்டி இன்னும் sun மறையவே இல்லை , எதுக்கு தூங்க சொல்றீங்க _ சின்ன பேரன் )

ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் twitter மற்றும் பல பத்திரிக்கைகளில் "summer is about to end " என்று சோக கீதம் பாடி இருந்தார்கள். ஆங்கில இலக்கியத்தில் படித்த பல கவிதைகள் நினைவுக்கு வந்தன. குளிர் நாடுகளில் வெய்யிற் காலம் என்பது மகிழ்ச்சியைக் குறிக்கும்  metaphor குளிர் காலம் என்பது துக்கம் , இறப்பு , சோகம் எனக் கொள்ளப் படுகிறது.

செப்டம்பர் 1 மற்றும் 2  தேதிகளில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கூபர்டினோவில் . வருடம் முழுவதும் கம்பளி ஆடைகள் இல்லாமல் இருக்க முடியாத சான் பிரான்சிஸ்கோ நகரில் ௧௦௨ டிகிரி பாரன்ஹீட் வெப்பம்  .
ஹீட் wave alert , red alert என்று செய்திகள் அலற, வீட்டிற்குள் பிள்ளைகள் கதற ...
aircon , 4 table fans .... எதுவும் உரைக்கவில்லை. Asphalt சுவர்களும் கண்ணாடி ஜன்னல்களும் கதவுகளும் சூட்டை உள்ளே வாங்கி வெளியே விடாமல்.... (இவ்வகை வீடுகள் குளிர் நாட்களுக்கு, நாடுகளுக்கு  மட்டுமே ஏற்றவை )

முக நூலில் 106 என்று ஸ்டேட்டஸ் போட்டேன் (அப்போது 107 டிகிரி போகும் என்று நினைக்கவில்லை )  சென்னையில் மழை , சிங்கப்பூரில் குளிர்சாதனப் பெட்டியே உபயோக படுத்தாத அளவுக்கு இரவுகள்,east coast மக்கள் இங்கே குளிர் அப்படின்னு comment போட்டு என்னை மேலும் சூடாக்கினார்கள்.

பின்புறம் உள்ள பூங்காவில், உச்சி வெய்யில் மண்டையைப்  பிளந்து கொண்டிருக்கும் வேளையிலும் பிள்ளைகள்  மிகுந்த உற்சாகத்துடன் கால் பந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள்.பல மக்கள் handphone , laptop சகிதம் இருப்பார்கள். சில மக்கள் மல்லாந்து படுத்துக் கொண்டு  வெய்யில் (குளிர்??) காய்ந்து கொண்டிருப்பார்கள், இதெல்லாம் எங்களுக்கு ஜகஜமப்பா ரீதியில். பிறந்த நாள்  விழாக்களுக்கும் potluck விருந்துகளுக்கும் பஞ்சமே இல்லை. (நண்பர் ஒருவரது comment : முதல் நாள் சமைத்து வைத்ததை வரும்போது microwave அடுப்பில் சுடவைத்து டப்பாவில்   போட்டு கொண்டு வருவார்கள்)

வியட்நாம், சீனா நாடுகளை சேர்ந்த வயதில் மூத்த ஆண்களும் பெண்களும் இசைக்கு ஏற்ப நடனம் (உடற்பயிற்சி ) செய்து கொண்டு இருப்பார்கள். மாலை 5 ஆனதும் தென்னிந்தியர்கள் , வடஇந்தியர்கள் , சீனர்கள் என பல குழுக்கள் நடைப் பயிற்சி மற்றும் பேச்சுப் பயிற்சி (தமிழ், தெலுங்கு, கன்னடம் ,இந்தி , ஆங்கிலம் என பல மொழிகளும் கலந்து கட்டி அனைவருக்கும் புரியும் படி பேசும் பயிற்சி ). சிலர் இந்த வெய்யிலுக்கு ஸ்வெட்டர் சால்வை சகிதம் வருவார்கள்.

weather .com மிக சரியாக கணிக்கிறது. 7  மணிக்கு drizzling  என்றால் கண்டிப்பாக லேசான தூறல் இருக்கும்.(என் சொந்த அனுபவம்)

மீண்டும் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் குளிர், கைகால்கள் விறைத்துப் போகின்றன . பகலில் cloudy . IRMA வின் புண்ணியத்தில்.
புளோரிடா மக்கள் வெவ்வேறு ஊர்களுக்கு வெளியேறி ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் , இந்த குளிரையும் அனுபவிக்க மனமில்லை.

இலையுதிர் காலம் ஆரம்பிக்கிறது. அதிகார பூர்வமாக செப்டெம்பர் 22 முதல்.
maple மர இலைகள் நிறம் மாறாத தொடங்கி விட்டன .. ஆயினும் weather.com  இல்  80 + தான்

மக்களுக்கான என் நேற்றைய ஆசீர்வாதம் : நீண்ட ஆயுளுடனும் குறிப்பாக summer இல் மிகுந்த ஆரோக்கியத்துடனும் இருங்க ....

வெய்யில் தாங்கலை.... ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா....

சொர்க்கமே என்றாலும்...... நம்ம ஊரில் A/C கொஞ்சமாவது உறைக்குமே










Friday feelings

9/9/99 -----முதன்முதலாக வலைத்தளத்துக்குள் நான் நுழைந்த நாள். Hotmail கணக்கு ஆரம்பித்து , படிப்படியாக பலவும் கற்றுக் கொண்டேன். கொண்டிருக்கிறேன் .

Social media எனப்படும் Twitter , Facebook போன்றவை பிரபலமாகாத காலகட்டம்.

 ஒரு ஆர்வக்கோளாறில் ட்விட்டரில் கணக்கு ஆரம்பித்த அதே நாளில் அதிக options இல்லாததால் ,அன்றே  அந்தக் கணக்கை delete செய்து விட்டேன்.  முதல் 4 வருடங்கள் Facebook இன் பயன்பாடு என்னவென்றே பிடிபடவில்லை . instagram,shtyle,yahoo, Google +,Linked In, Pinterest  ....  எங்கே புதுக்கணக்கு தொடங்கினாலும் அங்கே நம்ம  பழைய நட்பு வட்டம் தான் இருந்தது, இருக்கிறது . கடைசியாக ஒரு முடிவுக்கு வந்து, Facebook மட்டும் தொடர்ந்து பயன்படுத்த முடிவெடுத்தேன்.

கடந்த வருடத்தில் நடந்த பரபரப்பான பல சம்பவங்களைத் தொடர்ந்து, நண்பர் ஒருவரின் சிபாரிசின் பேரில்  மீண்டும் twitter.பரபரவென பலவிஷயங்கள் வந்து கொட்டுகிறது. பல புது options. புரிந்தும் புரியாமலும் வந்து போகும் பதிவுகள் பகிர்வுகள்.
முகநூலிலும் பலப்பல பதிவுகள்.  மாற்றங்கள் நம்மை வியக்க வைக்கின்றன. ( நம் நண்பர்கள் பட்டியலில் இருக்கும் அனைவரது பதிவுகளும் தற்போது வந்து போவதில்லை, நமக்கு தேவையானதை நாம் தேர்வு செய்து கொள்ளலாம் , நமக்கு தேவையே இல்லாததை Facebook தானாகவே கொட்டுதே ?)
Whatsapp , /You tube .....

இந்தியாவில் இருந்தவரை எல்லாம் நல்ல விதமாக இருந்தது. அமெரிக்கா வந்த பிறகு , மேற்கண்ட நிலையில் நிறைய மாற்றங்கள்.

Twitter நான் தேர்வு செய்து தொடருபவர்களை இங்கே தொடர விடுவதில்லை. தானாகவே அமெரிக்காவில் நடக்கும் நிகழ்வுகளை Trending ஆக்குகிறது. சில  சுவாரசியமான தலைப்புகளும் வரும்.

நம்ம ஊர் கமல்ஹாசன், சுப்ரமணியம்ஸ்வாமி , மோடிஜி போன்றோர்  என்ன பதிவிடுகிறார்கள் ??? சீமான் என்ன சொல்றார்? இரோம் ஷர்மிளாவிற்கு திருமணம் முடிந்து விட்டதா ? அவர்களின் தொடர்பு எல்லைக்கு வெளியே நான் தற்சமயம் .

ட்விட்டரில் சர்வ சகஜமாக இங்கே நான் காணும்  trending தலைப்புககளிலிருந்து சில ....

Sunday memories,monday musings,tuesday thoughts,wednesday wordings,thursday ......., friday ....... saturday ..... என வாரம் முழுவதும் ..... trending headings
4 words about Mr.x , 5 words about how to eat , thoughts about your date ....
சினிமா நடிகர்களின் பிறந்த நாட்கள், தினமும் ஏதாவது அவார்டு , டிரம்ப், KISSING DAY,PANCAKE DAY,HISPANIC HERITAGE MONTH,நான் இது வரை கேள்விப்பட்டிராத பல பிரபலங்கள், நம் ஊர்  கண்ணம்மாபேட்டை vs கொருக்குப்பேட்டை கிரிக்கெட் போட்டிகள் போல கால்பந்து போட்டிகள் என பல தலைப்புகள் .... எப்போதாவது மோடி

IRMA IRMAன்னாங்க ரெண்டு நாள் , அது புளோரிடாவை தாண்டக் கூட இல்லை, அதை குருமாவாக்கிட்டு  Apple event,Apple park,Steve Jobs என மூன்று தினங்களாயும் trending still ...

அமெரிக்காவில் இருக்கும் வரை twitter என்னுடன்  ஒட்டார் என்பது புரிந்து விட்டது.
முகநூலின் முகம் புதைக்க நினைத்தால் , முன்பக்கத்தில் ஒரு உலக வரைபடம் இருக்குமே, அதுவும்  இங்கே வந்தவுடன் அமெரிக்கா கண்டத்தைதான் காட்டுகிறது.

(எந்த கண்டத்தில் இருக்கிறோமோ அந்த கண்டம் தெரியும்.  Facebook பக்கத்தின் அட்ரஸ் பாரில் உள்ள முகவரியுடன் /4  என சேர்த்தால் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் அவர்களின் பக்கத்திற்கு கொண்டு செல்லும். அவரை unfriend பண்ண முடியாது , அதனால் நான் அவரை என் friend ஆக்கிக்கவே இல்லை, தற்சமயம் இவர்களது அலுவலகம் இருக்கும் (Menlo park) இடத்தில் இதற்கு முன்னால் SUN JAVA நிறுவனம் இருந்தது  என்பதெல்லாம் சில கூடுதல் தகவல்கள்)

 முகநூலில் வரும் பதிவுகள் பல விதம்.

குறிப்பாக அடுத்தவர் பதிவிட்டதை அப்படியே repost செய்வது தான் இங்கே வழக்கம். அடிக்கடி காண நேரும் சில வகைப் பதிவுகள்

ஆமென் என type அடிங்க, ஆண்டவன் அருள் பெருகும் , ............ படத்தை உற்றுப் பாருங்கள் என்ன உருவம் தெரிகிறது, 8 என type அடித்து விட்டு படத்தையே பாருங்கள் , இந்த படத்தை கண்ட 12 நொடிகளுக்குள் (இதென்ன 12 நொடி கணக்கு?? புரியவே இல்லை) 10 நண்பர்களுக்கு private messageல forward பண்ணுங்க (ஏன் public ஆக பண்ண கூடாது?)

Paleo diet (வெண்ணையும் காலிபிளவரும் நிறைய சேர்த்துக் கொள்ள சொல்லி ஒரு டயட் சார்ட் பார்த்தேன்), எட்டே நாட்களில் தொப்பையைக் குறைக்க என்ன வழி, எலுமிச்சம் பழத்தின் பயன்பாடுகள்( இதே வேகத்தில் போனால் தலையில் தேய்த்துக் கொள்ள நேரலாம் ) , பாட்டி வைத்தியம் , ABS exercises (தினமும் ஒரு புது பதிவு , இதில் எதை பின்பற்றினால் ஏஞ்சலினா ஜோலி போலவோ தீபிகா படுகோனே போலவோ  ஆகலாம்?)

யார் எந்த ஹோட்டலுக்கு சென்று உணவருந்துகிறார்கள் , எந்த கோவிலுக்கு சென்றார்கள் ... யாருக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கு, யாருக்கு கல்யாணம் ஆயிடுச்சு.  இடையில் sarahah வேற ... Will you marry me ன்னு ரெண்டு நாள் முன்னால் நிச்சயதார்த்தம் ஆகி post போட்ட ஒரு பெண்ணின் கேள்வி ... அதுக்கு தானே நிச்சயதார்த்தம் ?? பையனிடமிருந்து பதிலே காணோம் :) இன்று வரை.

ரயில்  நிலையம், பேருந்து நிலையம், மருத்துவமனை, முக்கு டீக்கடை, காவல் நிலையங்களில் என காணாமல் போய் ,  யாராலோ கண்டு பிடிக்கப்பட்டு செய்தியாக பரப்பப் படுபவை. இது போல செய்திகள் மீண்டும் மீண்டும் .

இந்த குழந்தைக்கு cancer ஒரு like போடுங்க , இந்த பாப்பாவோட அப்பா 10 ,000 லைக் கிடைச்சா ஸ்மோக்கிங் விட்டுடுவாராம் , எனக்கு யாருமே இல்லை Happy Birthday சொல்லுங்க ...

சமையல் குறிப்புகள் .. சென்னையில் இருந்தால் இந்திய சமையல் இங்கே கேக் , muffin , salad

நேற்று ஒரு மருத்துவ குறிப்பு படித்தேன் . Bay leaves (பிரிஞ்சி இலை) ஐ வீட்டில் வைத்து எரித்தால்  மனஅழுத்தம் குறையும். உடனே எனக்கு மனதில் தோன்றியது ... அமெரிக்காவில் அட்டை கட்டை வீடுகள் . வீட்டினுள்ளே எரித்தால் fire alarm அடித்து ஊரைக் கூட்டி , 911 க்கு தகவல் போய், போலீஸ் வீடு தேடி வருவார்கள். சும்மா இல்லைங்க அவங்க சேவைக்கு ஒரு முறைக்கு $1000  கட்டணம் தரணும்.  Bill வீடு தேடி வரும்.
இப்போ சொல்லுங்க மனஅழுத்தம் கூடுமா குறையுமா ??

நம்முடைய நண்பர்கள் பட்டியலில் இருப்பவர்கள் வாடகைக்கு வீடு தேடினால்,  holidayக்கு அலாஸ்கா போனால் , நமக்கும் அது தொடர்பான பதிவுகள். (செம algorithm,ஆனால் நமக்கு அனாவசியமான தகவல்)  Big brother is watching all of us!!

மீம்ஸ்களுக்கு பஞ்சமே இல்லை.
சமீபத்தில் படித்த ஒரு ஜோக் .
இன்ஜினியரிங் கல்லூரி தலைவர் : இங்கே புதிதாக ஒரு கோர்ஸ் ஆரம்பித்துள்ளோம் , நிறைய சேர்க்கை
நண்பர் :என்ன கோர்ஸ்?
இன்ஜினியரிங் கல்லூரி தலைவர் : மீம்ஸ் இன்ஜினியரிங்

யாரும் சொந்தமாக யோசித்து எந்த புது விஷயமும் பதிவிடுவதில்லை என்று நண்பர் ஒருவர் குறைப்பட்டுக் கொண்டார் . True.
Twitter is better.Twitter ஒரு தகவல் களஞ்சியம் , அதன் அருமை அதன் நிர்வாகத்திற்கு புரியவில்லை என்பது போல ஒரு கட்டுரை படித்தேன்.

சோசியல் மீடியாவில் நன்மைகளும் உண்டு. இவைகள் தகவல் களஞ்சியங்கள் என்பதில் ஐயமில்லை ஆயினும் கட்டற்ற சுதந்திரம் சமயத்தில் சலிப்படைய செய்வதென்னவோ உண்மை.  நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வது நம் கையில்.

Whatsapp தகவல்கள் ஒரு விதம். குரூப் மெசேஜ் பல சமயங்களில் ...அய்யகோ ...

இந்த படத்தை பார்த்தவுடன் 10 பேருக்கு அனுப்பு, இல்லைன்னா ரத்தம் கக்கி சாவாய் ......இங்கும் உண்டு. ( சிறுவயதில் நிஜமென்று நம்பி நானே என் கைப்பட எழுதி அனுப்பி இருக்கிறேன் ;) )
போஸ்ட்கார்டு இன்று smartphone ஆக பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது அவ்வளவுதான்.

தினம் ஒரு DP இங்கே சகஜம் . DP க்கள் பலவிதம் .

யாராவது மாற்றித் தரும் வரை அதே படம், தினத்திற்கு 3 படம், நடிகர்கள், சாமிகள், கோவில்கள், குழந்தைகள்,பூக்கள், இயற்கை காட்சிகள் ...
அவர்கள் குழந்தையா இருந்தப்போ எடுத்தது, கும்மிருட்டில் உருவமே தெரியாமல் எடுத்தது, முதுகு தெரிய எடுத்தது (கண் திருஷ்டி பட்டுடும்ங்க)...நண்பர் ஒருவரின் DP யைப் பார்த்தாலே அடுத்த தெருவில் ஆரம்பித்து ஆர்டிக் அண்டார்டிக் வரை யார் இன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
[உங்க necklace சூப்பர், வைரமா ? எங்க வாங்கினீங்க ? _ பெண்கள்
அமெரிக்கால இருக்கீங்களா இல்லை இந்தியா? aeroplane  படம்  DP போட்டிருக்கீங்களே ? _ஆண்கள் ]
Whatsapp ல் Statusன்னு வேற புது வசதி. அதிலும் மக்கள் படம், பொன்மொழிகள்னு போட்டு கொளுத்திடறாங்க.  Bitmoji கார்ட்டூன்ஸ் வேற ... playstore போனாலே 100 app .

you tube பக்கம் போனால் அங்கே வேறு மாதிரி ....

Daily trending videos .....

ஜஸ்டின் பைபர் பாடிய  Despacito பாடலுக்கு நம்ம மக்கள் நடனம் ஆடி, கர்நாடக இசையின் ஸ்வரங்களை சேர்த்துப் பாடி, Cello வில் வாசித்து, தெலுங்கு  கன்னடம் தமிழ் என அதனுடன் கலந்து பாடி .... விதம் விதமான விடீயோக்களை பதிவிட்டிருக்கிறார்கள். . Ed sheeran பாடிய Shape of you வும் மக்கள் கையில் கிடந்து பாடாய் படுது.

நம்மிடம் இல்லாத இசையா நடனமா?
மலர்கள் கேட்டேன் .... நல்லை அல்லை ...  கிடார் நோட்ஸ் , கர்னாடிக் நோட்ஸ் ,பியானோ நோட்ஸ் , பலரும் வேறு பாட்டுக்களுடன் பாடி ஆடி .....மக்கள் எதையும் விட்டு வைப்பதில்லை .

IDEA short films (5 ,10 ,15 நிமிட குறும்படங்கள்)  , கருத்துள்ள விடீயோக்கள் என சென்னையில் பார்ப்பேன். தற்சமயம் அவைகள் trendல் இல்லையா அல்லது நான் trendல் இல்லையா ?

ஜிமிக்கி கம்மல் ......

Saturday, 19 August 2017

Blue blood


 Extra job to the existing
 Gets the name as moonlighting!

 Seeking attention by showing off
Goes its way as show boating!

Disagree, disorder and confusions
You are now in sixes and sevens!

Excellent professional achiever
And you are now the rain maker!

No more service want to be did
Hence be considered 86'ed!

An old issue not of importance
Is like water under the bridge!

Cant be a Jane Doe I promise
As I am no more fictitious!!


P.S: Effect of watching the American Soap "Blue bloods"
** New words learnt with the meaning framed as a poem



இது வேறு உலகம் தான்...


பின் தூங்கி முன் எழும் பத்தினி போல சூரியனார் 5 மணிக்கே உதயமாகிறார். ஓவனிலிருந்து எடுத்த அடுத்த நொடியே காப்பி ஆறி விடுகிறது. ஜன்னல் வழியே தெரியும் பின்புறம் அமைந்த பூங்காவும் மலைத்தொடரும் ஒரு இனிய காலையினை உணர்த்துகின்றன . லேசான குளிருடன் தொடங்கும் நாட்கள்.

இயற்கையின் கொண்டாட்டமாக சொல்ல வேண்டியது பச்சை பசுமை புல்வெளிகள், மரங்கள், கொத்துக் கொத்தாய்ப் பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண ரோஜாக்கள், மலைபிரதேசத்திற்கே உரிய மலர்கள் . கொள்ளை அழகு. 

ஒவ்வொரு முறை வரும்போதும் வெவ்வேறு அனுபவங்கள். வருட இறுதி என்பதாலும் கோடையின் தொடக்கம்  என்பதாலும் பல வித நிகழ்வுகள் விழாக்கள் கொண்டாட்டங்கள்.

பேரன்களின் பள்ளி விழாக்கள் (மொதெரஸ் டே, ஓபன் டே), சமஸ்க்ருத பாரதி நடத்தும் வகுப்புகளுக்கான ஆண்டு விழா , ப்ரக்ஞா எனப்படும் ஸ்லோக வகுப்புகளுக்கான ஆண்டு விழா , சான் ஜோஸ் ஸ்டேட் யூனிவர்சிட்டி யின் பட்டமளிப்பு விழா, தமிழ் மொழி கற்பிக்கும் பள்ளியின் ஆண்டு விழா, இன்ஸ்ட்டா கானா நடத்தும் பாட்டு நிகழ்ச்சி என பல நிகழ்வுகளுக்கும் சென்று வந்தேன். (இன்னும் செல்வேன் ;) சின்ன பாப்பா க்ராடூயட்டின் லாம் இருக்கே )

பள்ளி வகுப்புகளின் அமைப்பும் பயிற்றுவிக்கும் முறைகளும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமும் அருமை.அரசாங்கம் நடத்தும் பள்ளி. வருடம் முழுவதும் மாணவர்கள் செய்த , படித்தவைகளை  பார்வைக்கு வைத்திருந்தார்கள். அருமையோ அருமை. ஒவ்வொரு வகுப்பிற்கு சென்று பார்க்க அனுமதித்தார்கள்.

சம்ஸ்க்ருத பாரதி (இது பற்றி முன்பே பதிவிட்டுள்ளேன்) ஆண்டு விழாவில் பல்வேறு நிலை வகுப்புகளுக்கான பரிசுகள் அளிக்கப்பட்டன. காலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பார்வையாளர்களாக வந்திருந்த பெற்றோர்கள் தவிர அனைவரும் அனைத்தும் சமஸ்க்ருதத்திலேயே தான். வம்பு உட்பட (உத்தவான் ஆகதவான்_  அவன் வந்திருந்தேன் என்று சொன்னான் )
கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் சமஸ்க்ருத்த்திலேயே.(ஏகஹ ஷ்ருகாலஹ வனம் கச்சதி ....) 

ஸ்லோக வகுப்பு ஆண்டு விழா ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த நாளை ஒட்டிய நிகழ்வாக இருந்தது. நிகழ்ச்சிகள் ஆங்கிலத்தில். SHREE RRAAMAANUJAACHAARRYA  என ஆங்கில ஆக்ஸன்ட்டுடன்... பரிசுகளும் காலை நிகழ்ச்சிகளும் ..... அனைவரின் உழைப்பும் அதில் தெரிந்தது 


இன்ஸ்டா கானா என்பது பொது மக்கள் அனைவருக்கும் மேடையில் பாடுவதற்கான ஒரு களம் .
பாடத்தெரிந்த யாரும் பாடலாம். 


மக்கள் எப்போதும் போல சங்கீதம், சமஸ்க்ருதம், கராத்தே, கணக்கு, ஓவியம், காவியம், சுலோகம் ,தமிழ், Base ball, foot ball, பியானோ, வயலின், ஸ்கைப் மூலம் பலவித வகுப்புகள் என குறுக்கும் நெடுக்கும் காரில் சென்று கொண்டிருக்கிறார்கள். கடந்த முறை வார இறுதியில் தான் ..இப்போது வாரம் முழுவதுமே .

கோடை விடுமுறை நெருங்கி கொண்டிருக்கிறது. இருக்கவே இருக்கு... சம்மர் கேம்ப் ...  

வெய்யில் 80 டிகிரி போனாலே மக்கள் ஐயோ வெய்யில் என்கிறார்கள். ( பூமியின் இந்தப் பகுதி போலெ க்கு அருகில் அமைந்திருப்பதால் 80 டிகிரிக்கே வெய்யில் காயகிறது 100 டிகிரி போல. 
இங்குள்ள மக்களுக்கு வெய்யில் என்பது அரிதான ஒன்று என்பதால் , மண்டையைப் பிளக்கும் உச்சி வெய்யிலில் நடைப் பயிற்சி , கால்பந்து பயிற்சி என பூங்காக்களில் கொண்டாட்டமாக இருக்கிறது.( மக்கள் வசிக்கிறார்கள் என்பதற்கு சாட்சி. மற்றபடி எங்கும் எப்போதும் அமைதி )


 எங்கிருந்தோ வந்து வால்கோ மாலில் (Valco) சினிமா பார்த்தோம் , JC Pennyயில் துணிகள் வாங்கினோம். தற்சமயம் நடந்து செல்லும் தொலைவில் வசித்தும் , அங்கே செல்ல முடியாது. ஆப்பிள் நிறுவனம் விலைக்கு வாங்கி அலுவலகங்களாக மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
வீட்டின் பின் புறம் அமைந்திருக்கும் பூங்காவில் பிரதி வெள்ளியன்று சந்தை கூடுகிறது. நேற்றுப் பறித்த கீரை, ஸ்ட்ராபெர்ரி , நம்ம ஊர் திருவிழாவில் விற்கும் பொடித்த ஐஸில் கலர் விட்டு கப் ஐஸ் , காய்கறிகள் பழங்கள் .. கிராம சூழ்நிலை. பள்ளிப் பிள்ளைகளை field trip அழைத்து வந்து காண்பிக்கிறார்கள்.

என் மகள் சொன்னது  "" உன்னுடைய கடந்த வருட பயணத்திற்கும் இந்தப் பயணத்திற்கும் இடையில் அதிகம் வித்தியாசம் எதுவும் இல்லை அம்மா...

அட்டையும் கட்டையும் ....


என் கருத்தை கவரும் பல விஷயங்களில் ஒன்று வீடுகள். 

அதன் சுற்றுச் சுவர் அமைப்பு , வெளிப்புறக் கதவின் வேலைப்பாடுகள், ஜன்னல்கள்  எனப் பலவும்  என் கவனத்தைக் கவரத் தவறுவதில்லை. 

செங்கல் , கான்க்ரீட் கொண்டு கட்டப்பட்ட வீடுகளையே பார்த்துப் பழகிய எனக்கு, முதன் முதலாக அமெரிக்க வந்தபோது இங்கிருந்த அட்டை  வீடுகளை பார்த்து பிரமிப்பாக இருந்தது.

ஜிப்சம் (asphalt)  சுவர்கள், மரத்தாலான தரைகள் மற்றும் கூரைகள், கடையில் தயாராய் விற்கப்படும் சமையல் மேடை, Oven னுடன் கூடிய அடுப்பு மற்றும் அலமாரிகள், குளியலறைக்கான washbasin,  bath tub என readymade ஆக வாங்கி வந்து அப்படியே பொருத்தப் பட்ட வீடுகள்.  கண்ணாடி ஜன்னல்கள். 

(ஜிப்சம் அட்டைகளை இந்தியாவில் false ceiling அமைக்க பயன்படுத்துவார்கள். குறிப்பாக அலுவலகங்களில். ) மரக்கதவுகளின் மேல்பகுதி கண்ணாடி. தாழ்ப்பாள் flimsy. ஒரு கதவுக்கே 5 தாழ்ப்பாள் போட்டுப் பழக்கப் பட்டவர்கள்  நாம். சொந்தவீட்டுக்காரர்கள் burglar alarm, cctv வைத்துக் கொள்கிறார்கள். 

வாடகை வீடுகளுக்கு ???

எல்லாம் வல்ல  இறைவனே துணை. 

இவ்வகை வீடுகள் நிலநடுக்கம் மற்றும் குளிரைத் தாங்கும் வகையில் insulated materials கொண்டு கட்டப் பட்டவை. இரண்டு அடுக்குகள் வரை தாங்கும் வல்லமை படைத்தவை இத்தகைய வீடுகள். (அடுக்கு மாடி வீடுகளுக்கு frame மட்டும் இரும்புக் கம்பிகளை உபயோகித்து காட்டுகிறார்கள்.) அலுவலகங்களில் நோட்டீஸ் போர்டில் குத்தப் பயன்படும் பின்களே இங்கே ஆணிகள். ( :) )

இவ்வகை வீடுகளில்  எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்பு மிக அதிகம் என்பதால்  எல்லா county யிலும் தீயணைப்பு நிலையங்கள் இருக்கும். மக்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் தப்பிப்பது எப்படி என்று கற்று தருவார்கள். பள்ளிகளில் Stop, Drop, Roll என பாட்டாக சொல்லி தருவார்கள். Field trip என அருகிலிருக்கும் தீயணைப்பு நிலையங்களுக்கு அழைத்து சென்று கற்றுத் தருவார்கள். [தீயணைப்பு வண்டிகள் பார்க்கவே பளபளவென அழகாக இருக்கும். அதில் 500 காலன் தண்ணீர் மட்டுமே இருக்கும். கட்டிடங்களுக்கு அருகிலேயே தீயணைப்பு வண்டியுடன் இணைக்கும் வண்ணம் பெரிய குழாய்கள் இருக்கும்.]

Heater/cooler  இருக்கும். பருவ நிலைக்கேற்ப பயன்படுத்தலாம்.

Studio, Hallway, Apartment, Townhome, Single Family Home (independent house),Condominium, Bungalow  எனப் பல தரப்பட்ட வீடுகள். எல்லாமே அட்டை கட்டை வகைகளே. விலை மட்டும் பல மில்லியன் டாலர்கள். 100 வீடுகள் இருக்கும் ஒரு அபார்ட்மெண்ட்டுக்கு மிகச் சிறிய  பரப்பளவில் பூங்கா . condo வீடுகள் என்பது gymnasium  மற்றும் நீச்சல் குளம் உள்ளவை.ஆனால் பல வீடுகளுக்கு ஒரு ஜிம் ஒரு நீச்சல் குளம் . (எங்கேயோ பார்த்தது போல இல்லை ??)

இந்த முறை சொந்த வீடு(தனி வீடு) என்னும் வகையில் அமைந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளைக் காணும் வாய்ப்புக்கு கிடைத்தது.

1. இரண்டு   ஹால் (ஒன்று விருந்தினர் பகுதி, மற்றது  fire place , தொலைக்காட்சிப் பெட்டி என ஒரு  குடும்பத்துக்கானது
2. சமையலறையை ஒட்டினாற்போல் ஒரு பக்கம் breakfast பகுதி, மற்றது ரெகுலர் டைனிங் ஏரியா 
3. எங்கிருந்து பார்த்தாலும் கண்ணாடி ஜன்னல்கள் வழியே தெரியும் இயற்கை
4. வீட்டை சுற்றிலும் அமைந்த புல்வெளி மற்றும் பின்பகுதியில் அமைந்த தோட்டம் (persimmon, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை ,எலுமிச்சை மரங்கள் மற்றும் வண்ண வண்ண ரோஜா செடிகள், அதிலும் குறிப்பாக அடுத்தவர் வீட்டு மரத்தின் காய் பழம் பூக்கள் நம் பக்கம் இருப்பது ...இன்னும் super)
5. சிறு பிள்ளைகள் விளையாடும் ஊஞ்சல், பாஸ்கெட்பால் பகுதிகள்
6. சுற்றிலும் இயற்கை காட்சிகள் (மலையை குடைந்து குடைந்து வீடு கட்டிட்டாங்கம்மா)
7. எங்கெங்கும் அலமாரிகள், பார்த்துப் பார்த்துக் கட்டி இருக்கிறார்கள்
8. இங்கே குளியலறைகள் 1, 1 1/2, 2 1/2 என்பது போல கட்டுகிறார்கள். ( same now available in Chennai too)
1 1/2 பாத்ரூம் என்பது குளிக்கும் வசதியுடன் கூடிய ஒன்றும், குளிக்கும் வசதி இல்லாத ஒன்றும் எனக் கொள்ள வேண்டும். (I grew up in a house with 8 bedrooms and 3 bathrooms என ஒரு வசனம், நான் பார்த்த ஒரு ஆங்கிலப் படத்தில்)
9.  இரண்டு  கார்கள் நிறுத்தும் வகையில் வாசலின் முன்புறம் garage. சில வீடுகளில் அதன் உட்புறம் மிக அற்புதமாக stereo , டிவி , Overhead loft , சுலபமாக சுத்தம் செய்யும் வகையில் அமைந்த தரை என அமைத்திருந்தார்கள்
10.வீடுகளுக்கு சுற்றுச் சுவர் இல்லை. அப்படி தேவைப்பட்டவர்கள் மரத்தினால் அமைத்துக் கொள்கிறார்கள்.


ஐரோப்பிய வீடுகள் வேறு மாதிரியானவை. பழமையுடன் இணைந்தவை.Combination of art and architecture. ஆங்காங்கே சிற்பங்களுடன் அமைந்த கட்டிடங்கள். நேர்த்தியான வேலைப்பாடுடன் கூடிய முகப்புகள்.

நான் கண்ட அனைத்து ஐரோப்பிய நகரங்களிலும் முக்கிய பகுதிகளில்  அனைத்து கட்டிடங்களும்  ஒரே அமைப்பில் இருந்தன. நகரங்களின் முக்கிய பகுதிகளில்  4-5 அடுக்குகள் மட்டுமே. வெளித்தோற்றம் ஒரே மாதிரி உள்ள வண்ணம் அமைக்கப் பட்ட கட்டிடங்கள்[common façade] . புறநகரில் தான் அடுக்கு மாடிக்கட்டிடங்களுக்கு அனுமதி. லண்டனில் பிரபலமான கடையான Harrods இன் முகப்புத் தோற்றமும் மற்ற கட்டடங்களை போலவே தான் இருக்கும். உள்பகுதி அவரவர் விருப்பம்.

United kingdomல்  புறநகர் மற்றும் கிராம பகுதிகளில் விக்டோரியன் வீடுகள். அகலமான ஜன்னல்களை கொண்டவை. இரும்பு ஜன்னல் கதவுகளில் அருமையான வேலைப்பாடுகள். 
குளிர் அதிகமான Switzerland போன்ற பகுதிகளில் அமெரிக்கா போல மரத்தாலான வீடுகள். கிராமப் புறங்களில் சிறிய  செங்கற்களால் ஆன வீடுகள்.அருகருகில் நெருக்கமான சிறிய கட்டிடங்களில் இயங்கும் வங்கிகள். இங்கேயா பல கோடி பணம் புழங்குது என்ற வகையில் .

ஆம்ஸ்டர்டேமில் அடுக்கு மாடி வீடுகளின் 3/4 ஆவது தளங்களில் ஒரு பெரிய்ய ஜன்னல். வாசல் கதவு சிறியதாக உள்ளதால் அந்தப் பெரிய ஜன்னல் மூலம் பொருட்களை வீடுகளுக்குள்ளே கொண்டு செல்கிறார்கள். பல வண்ணங்களில் வீடுகள் காணப்பட்டன.

வெனிஸ் நகரில் தண்ணீருக்குள் வீடுகள். சாலைகளுக்கு பதிலாக கால்வாய்கள். கடந்து செல்ல  பாலங்கள், படகுகள். சிறு சிறு செங்கற்களால் ஆன கட்டிடங்கள்.

இந்தியாவிலும் தற்சமயம் gated community, gate இல்லாத community என வீடுகள் கட்டப்படுகின்றன. மேலை நாடுகளை  போல ஒவ்வொரு வீடு கட்டும் போதும் செடி கொடிகளை நாட்டுப் பராமரிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லை. [ கர்நாடக மாநிலத்தில் மட்டும் பின்பற்றுகிறார்கள்]

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல நம் நாட்டில் தற்சமயம் பருவ நிலைகளுக்கேற்ப வீடு /அலுவலகங்களைக்  கட்டாமல்  கண்ணாடிக் கதவுகளும் ஜன்னல்களும் இருக்குமாறு அமைத்தது விட்டு ஐயோ சூடு அம்மா சூடு என்று ஏர் கண்டிஷனர்களைப் பயன்படுத்தி, அன்னை பூமியை சூடாக்கி விட்டு, வார இறுதியில் ...பக்கத்து கிராமத்தில் மரம்  நடுகிறார்கள். தம் ஊழியர்களை கொண்டு பள்ளிப் பிள்ளைகளுக்கு கணினி கற்றுத் தருகிறார்கள். Corporate social responsibility!!(CSR)

வீடுகள் ... நம் எண்ணத்தின் வெளிப்பாடு !! 





















நீலச்சாயம் வெளுத்து போச்சு .....


அமெரிக்கா  போன்ற குளிர்ப்பிரதேசங்களில் துணி துவைப்பதென்பதே ஒரு அனுபவம் .

ஆய கலைகள் 64 க்கு பிறகு 65 ஆவது கலையாக துணி துவைப்பதை  சேர்த்துக் கொள்ளலாம்.

அட்டை கட்டை வீடுகளை நினைவிருக்கிறதா? குளியலறையில் மரத்தாலான தரைப் பகுதி.  எங்கும் தண்ணீர் வெளியேற வசதி இல்லை. எல்லார் வீட்டிலும் bathtub  இருக்கும்.

இங்கே துணிகளைத் துவைக்க 4 options உண்டு.

(1)துணிகளைத் துவைக்க இயந்திரங்களைத் தான் பயன்படுத்த வேண்டும். சில வீடுகளில் இடவசதிக்கு ஏற்ப வீட்டிற்கு உள்ளேயோ வெளியேயோ துணி துவைக்கும் இயந்திரத்தை வைத்திருப்பார்கள்.(கார் கராஜ், நடைபாதை, அறை)
(2)சில வீடுகளில் 3-4 வீடுகளுக்கு சேர்த்து  ஒரு பொது இடத்தில் வைத்திருப்பார்கள். யாருக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
(3)பெரிய்ய bedsheet,comforter போன்றவைகளை துவைக்க அருகிலிருக்கும் laundromat செல்ல வேண்டும். மிகப் பெரிய அளவிலான இயந்திரங்களை பொதுவான ஒரு இடத்தில் வைத்திருப்பார்கள்.
(4) பாத் டப் உள்ளே கையால் துவைப்பது.


இந்தியாவில் dry cleaning கடைகளில் இருப்பது போல பெரிய்ய washer (washer ஒரு முறை துவைத்து முடிக்க 20 நிமிடங்கள் ), பக்கத்தில் dryer . துவைத்து முடித்த துணிகளை dryer ல் போட்டால் ஒரு மணி நேரத்திற்குள் காய வைத்து தரும். சுடச் சுட அப்பளம் போல ...  அப்படியே மடித்து வைத்துக் கொள்ளலாம்.... ஹார்லிக்ஸ் போல .
முக்கியமான விஷயம் ,பணம் செலுத்தினால் மட்டுமே 4 வீடுகளுக்குப் பொதுவான இயந்திரங்களோ Laundromat இயந்திரங்களோ வேலைசெய்யும்.(machine உடன்  இணைந்தே coin slot இருக்கும் . குவார்ட்டர் நாணயங்களை அதனுள்ளே சொருகி அழுத்தி விட வேண்டும், $1 1/2  per load - 6 quarter நாணயங்களை சொருகி அழுத்தினால் இயந்திரம் இயங்க ஆரம்பிக்கும்) Mr .Bean பூனைக்குட்டியையும் சேர்த்துப்  போட்டுத் துவைப்பாரே , நினைவிருக்கிறதா ?

ஓரளவு ஐடியா வந்திருச்சா ? இப்போ துவைக்கலாம் வாங்க ....

பெரிய அளவிலான washer என்பதால் வாரம் ஒரு முறை தான் துவைப்பது வழக்கம். பிரதி செவ்வாய் மகளது laundry day . (Option 2 இங்கே)
முதல் நாள் இரவே அம்பாரமாய் குவிந்து  இருக்கும் துணிகளை முதலில் வகைப்படுத்தித் தருவார்கள். பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் உடைகள் தனித் தனியாக.
Rule no 1: சாக்ஸ்  பெரியவர்கள் load உடன் சேரணும்
கடந்த 2 மாதங்களாக laundry வேலை என் scope  என்பதால் காலை எழுந்தவுடன் laundry. Liquid soap , laundry room சாவி, அழுக்குத் துணிகள், quarter நாணயங்கள்   சகிதம் கிளம்பி முதல் load ஆரம்பம்.(Rule No 2:  கதவை திறந்ததும் சாவியை கையில எடுத்து வெச்சுக்கோ, கதவுக்கு authomatic பூட்டு) ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு washer load முடியும். உடனே dryer க்கு மாற்ற வேண்டும், quarter சகிதம் தான். (Rule no 3:  fabric  softner  காகிதங்கள் 4/5 ஐ மறக்காமல்  போடவேண்டும்). இல்லையென்றால் துணிகள் வறட்டி போல காய்ந்து விடும்.
(laundry room வீட்டிற்கு நேரெதிரில்).
கடிகாரத்தைப் பார்த்த வண்ணம் 2 மணி நேரங்கள் கடக்கும். (இடையில் மகள் /மருமகனின் குரல் : அம்மா...எதிர் வீட்டு பாட்டிம்மா laundry room பக்கம் போறாங்க )

ஸ்ஸ்ஸ் ..........ஸப்பா .... இந்த வார laundry வேலை முடிஞ்சுது .........

பொறுமை பொறுமை... இனி தான் ஆரம்பமே ....

Laundry basketகள் நிரம்பி வழியும் . (7 நாட்கள் பயன்படுத்திய துணிகள்.) சூடாக இருக்கும் போதே மடிக்க சுலபம் .(அதை விட எனக்கு வேறென்ன வேலை ??)

பெரியவர்களின் துணிகளை மடிக்கும் போது வரும் சந்தேகம். சின்னப்பைய்யா ..இந்த பனியன் அம்மாவுடையதா அப்பாவுடையதா?

பேரன்களின் துணிகள் பலவகை. ஒரு நாளில் 3 set உடைகள். பள்ளிக்கு/வெளியிடங்களுக்கு , வீட்டிற்கு , இரவு உடை என விதம் விதமாக அணிவார்கள்.
பருத்தி, synthetic ,fleece .
அரைக்கை சட்டை, முழுக்கை சட்டை, கையில்லாத சட்டை  
Full  pants , half pants (சின்ன பேரன் : It's so  weird to go in half pants to school)
underwears (vests & briefs),socks
அண்ணண்(8 வயது) ,தம்பி (4 வயது)

மேற்கண்ட வகைகளில் பிரிக்க வேண்டும். இருவரது சட்டையும் ஒரே அளவு போல தோன்றும், சமயத்தில் . (இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது பேரன்கள் இருவருக்கும் இதில் வரும் எல்லா category யும் அத்துப்படி.)

பெரியவன் உபயோகித்து கழித்து, தற்சமயம் சின்னவன் உபயோகிப்பது என்ற category இது .
ஒரு சுமாராக வகைப்படுத்தி மடித்து முடிப்பேன். அடுத்து , யார் laundry baskets ஐ மாடிக்கு கொண்டு செல்வது என்பது .

சரி ....ஒரு வழியாக மேலே கொண்டு சென்றாகி விட்டது. மகள் மீண்டும் நான் மடித்து வைத்த  துணிகளை வகைப்படுத்துவார் .(அம்மா ... இது சின்னப் பயனுடையது , இது வீட்டுக்கு போடறது ...)
அடுக்கி வைக்க நேரமில்லாத நாட்களில் கூடையிலிருந்தே எடுத்தாள ஆரம்பிப்பார்கள் சின்னப் பயல்கள்.(மொத்தத்தையும்  கலைத்து விடுவார்கள் )

இடையிடையே என் துணிகளுக்கான option , as you guess , option 4. நம் ஊர் துணிகள் இங்குள்ள இயந்திரங்களுக்கு ஏற்றவை அல்ல , மிக சிலவை தவிர. சோம்பல் பட்டால் .... கமல் ஹாசன் போல நீலச் சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும் ...பாட வேண்டியது தான் . (என் விருப்ப நிறம் நீலம்)

திரும்பி பார்த்தால் திங்கள் கிழமை .

மீண்டும் laundry day ..............



Sunday, 16 April 2017

*சம்யக் ஆசீத் !!


கடந்த மார்ச் மாதம் 21-31 சம்ஸ்க்ருத பாரதி என்னும் NGO வின் பழைய மாணவிகள் இருவர் நடத்திய சம்ஸ்க்ருத மொழி அறிமுக வகுப்புகளுக்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அதுவும் வீட்டிற்கு மிக அருகில். (கூடுவாஞ்சேரி கிட்டே இல்லை). சம்ஸ்க்ருத மொழியை சம்ஸ்க்ருதம் வாயிலாகக் கற்பிக்கும் , மேன்மேலும் கற்கும் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு முயற்சி மற்றும் வழக்கொழிந்து போன மொழியை உயிர்ப்பிக்கும் முயற்சியும் கூட.


பல வருடங்களுக்கு முன் , கொஞ்சம் படித்தேன். எழுத படிக்கத் தெரியும் ஆனால் தெரியாது. இது என் சம்ஸ்க்ருத அறிவு பற்றிய முன் கதைச் சுருக்கம். இந்த வகுப்புக்களை தூர்தர்ஷன் மட்டும் இருந்த காலத்தில் Zabaahn sambaal ke என்று ஒரு நாடகம் (ஹிந்தி, பின்பு தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டது) மற்றும் சமீப கால உதாரணமாக உதாரணமாக “English Vinglish” திரைப்பட ஆங்கில வகுப்புகளை/மாணவர்களை ஒப்பிடலாம்.


2 ஆசிரியைகள்.(Adroit Angels) ;மாணவமணிகள் :25 7 ஆம் வகுப்பு மாணவர்கள் தொடங்கிப் எல்லா வயதினரும் இருந்தார்கள். சமஸ்க்ருதம் (1). கொஞ்சம் எழுத, படிக்க, பேச (2).எதுவுமே தெரியாமல் (3). இரண்டாவது மூன்றாவது மொழியாக பள்ளியில் (எப்போதோ) படித்தவர்கள் (4).இது போன்ற அறிமுக வகுப்புகளுக்குப் சில,பலமுறை சென்றவர்கள்( 5). எங்கெங்கு சென்னையில் சம்ஸ்குத வகுப்புகள் நடக்கிறதோ அங்கெல்லாம் யாத்திரை போல சென்று வருபவர்கள் (6) என்னை மாதிரி ரெண்டும் கெட்டான்(இது முக்கியம் இல்லையா?) என்ற ரீதியில் மாணவர்கள்.


பள்ளி மாணவர்கள், Home managers, திரைத்துறை சார்ந்தவர்கள், ஆசிரியர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள், கணக்காளர் எனப் பலதுறைகளையும் சார்ந்தவர்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம்(என்னோட தமிழ் கண்ராவியா இருக்கும் மொத்தத்துல எனக்கு ஒரு பாஷையும் சரியாத் தெரியாது என்பார் ஒரு சகோதரி, தன்னடக்கம் தான்) எனப் பல மொழி பேசுபவர்கள், பல மாநிலங்களிலும் வசித்தவர்கள் என கலந்து கட்டிய உற்சாகமோ உற்சாகம் மிகுந்த மாணவமணிகள். மொத்தத்தில் Heretogenous group.


இதில் முக்கியமான விஷயம் ஆசிரியைகள் சம்ஸ்க்ருதத்தில் மட்டுமே பேசுவார்கள். பாடமும் சமஸ்க்ருத்தில் தான். ஆரம்ப நாட்களில் வார்த்தைகள் மற்றும் அபிநயம் . சாதாரண வினைச் சொற்கள் வா, போ, நில், உட்கார். கதைகளும் அப்படியே. Thirsty crow... சிறப்பு அம்சமாக இன்றைய கால கட்டத்தில் என்னென்ன வார்த்தைகள் உபயோகிக்கிறோமோ(contemporary usage) அந்த வகையில் பாடங்களைக் கற்றுத் தந்தார்கள். வாய் வழிக் கல்வி. எழுதி/எழுதக் கற்றுத் தருவதில்லை.(கரதூரவாணி- Handphone, Vyajanam - Fan) சம்ஸ்க்ருத வார்த்தைகள் நம் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கின்றன. ஆசிரியைகள் பேசுவது புரிந்தது. இது என்ன? இது யார்? அங்கே என்ன இருக்கிறது? அவள் யார்? இப்படி சின்ன சின்னப் பாடங்கள். முதல் நாள் வகுப்பு முடிந்ததும் , நாளைக்கும் போகணுமா என்று பயந்தேன். என்னுடைய இயல்பான குணம் முன் வைத்த காலைப் பின் வைக்காதது. மீண்டும் தைரியமாகக் கிளம்பிச் சென்றேன். போகாமல் இருந்திருந்தால்?? மிகச் சிறந்த அனுபவங்களை இழந்திருப்பேன்.


வகுப்பறை அனுபவங்களில் சில:


இரண்டு ஆசிரியைகளும் ஆகச்சந்து சுப்ரபாதம்(வாங்க காலை வணக்கம்) என்று அன்பா...க ஆசையாக அழைப்பார்கள். இன்று என்ன கற்றுத் தருவார்கள் , என்ன கதை சொல்வார்கள் என்ன நாடகம் நடத்துவார்கள் என்ற ஆர்வத்துடன் மாணவர்கள் இருக்க, அவர்கள் இருவரும் மாறி மாறி கற்றுத் தருவார்கள்.


ஒரு concept கற்றுத் தந்தவுடன், கின்சித் யோஜனீயம் கூர்வந்தஹ வயம் ஏக ஏக வாக்யம் வதாமஹ என்பார் ஆசிரியை (கொஞ்சம் யோசித்து ஆளுக்கு ஒரு வாக்கியம் சொல்லலாம் என்பது இதன் பொருள்.) வகுப்பில் முக்கிய கட்டம் இது.(செத்தாண்டா சேகரு..) சிரிப்பு அலை போலப் பொங்கும் நேரமிது.


1.எப்போது , அப்போது.. எப்போது மாதா வருவாரோ அப்போது பாயசம் வரும். (முதல் நாள் வயதில் மூத்த ஒரு பெண்மணி பாயசம் செய்து கொண்டு வந்து தந்தார்) மாதா தினமெல்லாம் பாயசம் கொண்டு வரமாட்டார்_ சக மாணவர்கள்


2.உடன் மகன் அப்பாவுடன் பள்ளிக்குச் செல்கிறான். இது உதாரணம். சுவரில் ஒட்டி இருக்கும் சார்ட் பார்த்து சொல்லுங்க.....(ஆண்பால் வார்த்தைகள் கொண்டது) குட்டிப் பையன் : ஆசிரியர் திருடனுடன் பள்ளிக்குச் செல்கிறார்.


3.இதி (இப்படி/என்று ) "கனவு காணுங்கள்" என்று திரு அப்துல் கலாம் சொன்னார். பலரும் இப்படி சம்ஸ்க்ருதத்தில் Quotation லாம் சொன்னாங்க. என் அருகில் அமர்ந்திருந்த பெண்மணி, கா கா கா என்று காக்கா சொன்னது என்றார். நானும் அதே போல யோசித்து வைத்திருந்தேன். டண் டண் டண் என்று கடிகாரம் ..... (என்ன வினைச் சொல் சேர்ப்பது என்று தெரியவில்லை)


தினமும் படிக்கணும் என்று என் அம்மா சொன்னாங்க வகைல சொன்னால் கூட போதுமாம். மறு நாள் ஆசிரியை விளக்கினார். :)


எல்லாரும் ஒவ்வொரு வாக்கியம் சொல்லணும் இல்லையா? ஆசிரியை அருகில் வந்து LKG குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல் உற்சாகமூட்டி, தைரியமூட்டி, பயப்படாதீங்க தெரியலைன்னா நான் உதவறேன் என்று கூறி முயற்சிக்க வைப்பார். (எல்லோராலும் எல்லா நேரத்திலும் சரியாகச் சொல்ல முடியாது, புது மொழி இல்லையா?). வாக்கியம் சொல்லும் நேரங்களில் புத்தகத்தைப் பாக்காதீங்க காகிதத்தைப் பார்க்காதீங்க , நீங்களே யோசிச்சு சொல்லுங்க என்பார் ஆசிரியை. படிக்கத் தெரியாது பகினி - இது அவரிடம் சொன்னது (பகினி- தோழி) Its already Greek and Latin. Mind voice : It is Samskrutham (samyak + krutham , good language )


மற்றொரு நாள் வகுப்பு. சம வயதினரை பெயரிட்டு அழைக்கலாம் . ராதா என்பதை ராதே... ராகவேந்திரன் என்பதை ராகவேந்த்ரஹ....வயதில் மூத்த ஆண் என்றால் மஹோதயா,வயதில் மூத்த பெண் மாதா,ஆண் என்றால் பவான் ,பெண் என்றால் பவதி,குட்டி பையன் பாலகஹ குட்டிப் பெண் பாலிகா,யூத்லாம் யுவன் யுவதி.


இப்படி 10 நிமிடங்கள் விளக்கினார் ஆசிரியை. பிறகு Brain storming session …. ............. , ............. (தன் அருகில் அமர்ந்திருந்த பெரியவரை சுட்டிக் காட்டி) மாமா இன்னும் சொல்லலை என்று ஆசிரியை பெயரைச் சொல்லி அழைத்தார் ஒரு பெண்மணி. (அலறல் தான் அழைத்தல் எல்லாம் கிடையாது ) போட்டுக் கொடுக்கும் அவசரத்தில் சமவயதினரை எப்படி அழைக்கலாம் என்பதை மறந்துட்டாப்ல :) பின்னணியில் ஒரு குரல் : மாமான்னு சொல்லாதீங்க.. “மாதுலஹ"ன்னு சொல்லுங்க


மற்றொரு நாள் உறவுகள் பற்றிய பாடம். நம்ம வீட்டு உறவுகள் மாதா(அம்மா), பிதா(அப்பா) போல உச்சரிக்க சுலபமாக உள்ளன. In laws வீட்டு உறவுகள் shwastroo (மாமியார்),swashtraha (மாமனார்), நனந்தி- நாத்தனார் தேவரஹ : மச்சினர். இந்தப் பகுதியே சிரமமாக இருக்கே....( சிலரது முணுமுணுப்பு) பின்னணியில் ஒரு குரல்: இந்தப் பகுதி மொத்தத்துக்கும் சேர்த்து ஒரு வார்த்தை இருக்கு. "சத்ரு"


ஆரம்பம், நடுவில் கடைசியில் என தினமும் மூன்று பாடல்கள் (புத்தகத்தைப் பார்த்துப் பாட அனுமதி உண்டு).


ஒரு ஆசிரியை கிஞ்சித்(கொஞ்சம்) சீரியஸ் ஆகப் பாடம் சொல்லித் தருவார். இவரது குரல் வீட்டிற்கு வந்த பிறகும் ஒலிக்கும். (உச்சைஹி வதந்து- சத்தமா வாய் விட்டு சொல்லுங்க, பயப்படாதீங்க வெட்கப்படாதீங்க)


மற்றொருவர் நகைச்சுவையாகப் பாடம் சொல்லித் தருவார். கதைகள், நாடகங்கள் அனைத்திலும் பாடத்தில் வந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி சொல்வார்கள்/செய்வார்கள். அருமையான நேரங்கள். அவரது முக பாவனைகள் இந்த நிமிடமும் சிரிப்பை வரவழைக்கிறது. அந்தக் கதைகளை மற்றொரு சமயம் பகிர்கிறேன்.[ சிரிக்காமல் நாம் பேசி மற்றவர்களை சிரிக்க வைப்பது, கதை சொல்வது என்பதெல்லாம் தனித் திறமை.] கசப்பு மருந்தை இனிப்பில் தோய்த்துக் கொடுக்கும் உத்தி இது.


என்று எப்போது எப்படி இவர்கள் அபிநயம் மூலம் பாடம் சொல்லித் தருவதை நிறுத்தினார்கள் என்றே தெரியவில்லை. சாதாரணமாகப் பேசி interact செய்தோம் . சம்ஸ்கிருதம் மிகச் சுலபமான மொழி. நாம் நினைப்பது போலக் கடினம் இல்லை. பேச்சு வழக்கில் இல்லாத எந்த மொழியும் அழிந்து போகும் என்ற நியதிப்படி அம்மொழி தற்காலத்தில் பயன்படுத்தப் படுவதில்லை. இலக்கணமும் மிகச் சுலபமாக உள்ளது. நான்(ம்) நினைத்திருந்தது போல இல்லை.


தினமும் வீட்டிற்கு வந்த பிறகு அன்றைய பாடங்கள் என்னவென்று பார்ப்பேன். சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய் போல நிறைய சொல்லித் தந்திருப்பார்கள். (அனைத்தும் ஸம்ஸ்க்ருதத்திலேயே) Cryptology போல அதை decode செய்வேன். குறைந்தது 2 மணி நேரங்கள் ஆகும். ஒரு நாள் 24 மணி நேரங்கள் ஆனது என்னவென்று புரிய. கற்றுத் தந்த பாடங்களின் அடிப்படையில் நானே லகு(எளிமையான) கட்டுரை, வாக்கியங்கள் என்று அமைத்து எழுதிச் சென்று காட்டுவேன். சம்யக் அஸ்தி (நம்ம good தான்) என்று எழுதித் தருவார் ஆசிரியை. LKG குழந்தைக்கு தப்பிருந்தாலும் ஊக்கம் தர Star போட்டுக் தருவது போல.


வாட்சப்பில் சந்தேகங்கள் கேட்கலாம். பதில்கள்?? இரவு 8 மணிக்கு அனுப்பப் பட்ட பதில்கள் நடுராத்திரி புரியும். அச்சச்சோ .. டீச்சர் இப்படி எழுதி இருக்காங்க நாம் பதில் போடலையே.. மரியாதைக் குறைவாச்சே என்று அந்த நேரமே பதில் அனுப்பி விட்டு மீண்டும் தூங்கச் செல்வேன். (என்ன பெரிய பதில் , நமக்கு தெரிஞ்ச ஒரே வார்த்தையான தன்யவாதஹ தான்- Thank you)


நிறைவு நாளன்று நாம் கற்ற வித்தைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. கவிதை(அடியேன்), ஓரங்க நாடகம்(அடியேன் எழுதி வேறிரண்டு தோழிகள் படித்தார்கள்), பக்தி நாடகம், ஓரங்க நாடகம், பாடல், கட்டுரை, நகைச்சுவை நாடகம், கதை, செய்யுள் வடிவில் விடுகதை எனப் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள். அனைத்தும் சம்ஸ்க்ருதத்தில், திக்காமல் தயங்காமல், சொதப்பாமல். வெளியிலிருந்து வந்திருந்த Evaluator உங்கள் மாணவர்கள் 10 நாட்களில் இப்படி அசத்திட்டாங்களே என்று வியக்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் இருந்தன. ஆசிரியைகளின் திறமைக்கு, உழைப்புக்கான பலன்.


சம்ஸ்க்ருதம் கற்க இனம் , மதம் , மொழி, வயது, பால் எதுவும் தடையில்லை என்பதற்கு இதை விடச் சிறந்த சான்று வேறில்லை.


4 நாட்களுக்கு முன்பு எளிமையான வாக்கியங்கள் அமைத்து ஒரு கதை எழுத/சொல்ல சொன்னார் ஆசிரியை. நேற்றுக் காலையில் தான் அந்தக் கதைக்கான முதல் வாக்கியம் (lead) கிடைத்தது. மஹாகாவியம் எழுத lead கிடைச்சாப்ல புல்லரித்து போயிட்டேன். அதுவும் பூர்வ காலே .. என முற்காலத்தில் என்ற வார்த்தை கிடைத்ததும்... ஆஹா..காளிதாசர் போல ஒரு feel... அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.


பூர்வ காலே ஏகம் வனம் ஆசீத்....(Long ago there was a forest)


பின் குறிப்பு : கடந்த வருடம் அமெரிக்கா சென்றிருந்த சமயம் , பேரனை சம்ஸ்க்ருத பாரதி நடத்தும் வகுப்பிற்கு அழைத்துச் செல்லும் போது உடன் சென்றிருக்கிறேன். நானும் சங்கி காஷ் போறேன் என்று 3 வயதுப் பேரன் ஒவ்வொரு சனிக்கிழமையும் அழுவார்.


*சம்யக் ஆசீத் - நன்றாக இருந்தது

காரே கருணை இராமானுசா!!

காந்தியன்னை பெற்றெடுத்த சாந்தமூர்த்தி நீர்தானே!
கற்பகமாய் வந்துதித்த இளையாழ்வார் நீர்தானே!
கல்வியிலே சிறந்துநின்ற சிகரம் நீர்தானே!
கற்பித்தோனை மிஞ்சிநின்ற  சீடர் நீர்தானே!

பெருங்குணங்கள் நிரம்பிநின்ற பேராளன்  நீர்தானே!
பெற்றவர்தாம் பெருமைப்பட்ட பேரானந்தம் நீர்தானே!
வரதனுக்கு வாஞ்சையான இராமனுசன் நீர்தானே!
வரமாய் வந்துதித்த இலக்குமணன் நீர்தானே!

முனிவர்க்கு முனிவனான யதிராசன் நீர்தானே!
மூத்தோரின் குறிப்புணர்ந்த கூர்மதியாளன் நீர்தானே!
அரங்கனே தகுதிசொன்ன உடையவர் நீர்தானே!
அவன்கோவில் சீர்மிகு மேலாளன் நீர்தானே!

எட்டாச்செய்தி  எமக்களித்த பாஷ்யக்காரர் நீர்தானே!
எட்டெழுத்து  ரகசியம்சொன்ன எம்பெருமானார் நீர்தானே!
கீழ்ப்படிதல் குணம்கொண்ட கோமான் நீர்தானே!
கீழிருந்து மேல்செல்லும் வழிசொன்னவர் நீர்தானே!

வேதத்தின் சாரம்சொன்ன வேதாந்தி நீர்தானே!
வாதம்புரிந்து வாகைசூடிய வேதவித்து நீர்தானே!
அடியாரின் அன்புக்காகத் தமருகந்தவர் நீர்தானே!
ஆண்டாளின் சொல்காத்த கோதாக்ரஜன் நீர்தானே!

சரணாகதி தத்துவத்தை சொன்னவர் நீர்தானே!
சமத்துவத்தின் மகிமைதனை உணர்த்தியது நீர்தானே!
பூதூரில்  தானுகந்த  பூதபுரீசர் நீர்தானே!
புண்ணியத்தில் பங்களித்த புருஷோத்தமன் நீர்தானே!

பார்த்தன்போல் எட்டாவதாய்ப் பிறந்தது நீர்தானே!
பரமனின் படுக்கையான ஆதிசேஷன் நீர்தானே!
நவரத்தினங்களை உலகுக்களித்த மாமேதை நீர்தானே!
நாநிலம் நலம்வாழத் தானானவர் நீர்தானே!

வாழி நின்புகழ்! வாழிய வாழியவே!!

Tuesday, 7 February 2017

யார் இவன்???


ஆலிலைப் படுக்கை
அசத்தல் புன்னகை
இடுப்பில் அரசிலை
கண்ணன் கைக்குழந்தை


தயிர்ப் பானை
வாயில் வெண்ணை
கண்ணில் குறும்பு
கண்ணன் பாலகன்


யமுனை காளிங்க நர்த்தனம்
ஆநிரை மானிடர் சூழ
விரல் நுனியில் கோவத்தனகிரி
கண்ணன் காவலன்


பட்டாடை, கையில் குழல்
மேனியில் சந்தனம்
ஆயர்களுடன் கூடல்
கண்ணன் காதலன்


குருக்ஷேத்ர போர்க்களம்
தேரில் அர்ஜுனன்
எதிரியாய் உறவினர்
கண்ணன் சாரதி


துவாரகை அரியாசனம்
மன்னனாய் புடைசூழ
அவலுடன் சுதாமன்
கண்ணன் நண்பன்


பலப்பல உருவங்கள்
பலப்பல உவப்புகள்
பக்தர்கள் மயக்கம்
கண்ணன் மாயாவி


பிரளய காலம்
மீனின் வடிவம்
வேதங்கள் மீட்பு
கண்ணன் வேதசாரம்


பிருந்தாவன நர்த்தனம்
கோபியருடன் ஆடல்
ஜீவாத்மாவுடன் கூடல்
கண்ணன் பரமாத்மா.


அவனா இவன்?
இல்லை
இவனா அவன்??

LIMERIKRISHNA, Huh??


Who shines like a diamond in the sky
Whose presence we need to identify
Where to get the deem of HIM
Why to think than MAYOORAM
When HE awaits for us to dignify!!


P.S: This verse is in Limerick form

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...