Thursday, 30 October 2014

Golden Rules of Book Keeping ......

 புத்தகம் வைத்து தங்க விதிகள் - கூகிள் இப்படித்தாங்க சொல்லுது

நீங்கள் ஒரு பொருளாதார நிபுணராக ஆக வேண்டுமா? 

அப்ப வாங்க  அதற்கு உண்டான ஆதார விதிகளை கற்று கொள்ளலாம்........

மூன்றே மூன்று விதிகள் தான் .இதனை அறிஞர்கள் தங்க விதிகள் என்று கூறுவர்

1.DEBIT WHAT COMES IN , CREDIT WHAT GOES OUT

வந்ததை வரவில் வைப்போம், கொடுத்ததை செலவில் வைப்போம் 

(எல்லோரும் கொண்டாடுவோம்_ நாகூர் ஹனீஃபா)

2.DEBIT THE RECEIVER, CREDIT THE GIVER

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் 
(படகோட்டி படப்பாடல்)

யாருக்கு கொடுத்தார்னு அவருக்கே தெரியலை பாருங்க

அதனால யாருக்கு கொடுத்தோம்னு குறிச்சு வைங்க(GIVER)
அதே போல யாரிடம் வாங்கினோம்னும் குறிச்சு வைங்க (RECEIVER)

3.DEBIT ALL EXPENSES AND LOSSES, CREDIT ALL INCOMES AND GAINS

வரவு எட்டணா செலவு பத்தணா மீதி ரெண்டணா கடைசியில் துந்தனா துந்தனா - இந்த துந்தனா தான் நஷ்டம் ( LOSSES)

வரவு பத்தணா செலவு எட்டணா  அதிகம் ரெண்டணா தந்தனா தந்தனா - இந்த தந்தனா தான் லாபம் ( GAINS)

(பாமா விஜயம் படப்பாடல்)

மொத்தமாக சொல்ல வேண்டுமென்றால்

ASSETS = CAPITAL + LIABILITIES
ASSETS - LIABILITIES = CAPITAL

முதல் (CAPITAL) போட்டு சொத்துக்களை(ASSETS) வாங்கி தொழில் செய்தாலும் சரி,கடனுக்கு சொத்து வாங்கி தொழில் செய்தாலும் சரி , வாங்கினவங்களுக்கு திருப்பி தரவேண்டியது உங்களோட பொறுப்பு( LIABILITIES)

மேலே சொன்ன விதிகளை புரிஞ்சுகிட்டவங்க எல்லாரும் ஒரு முறை ஜோரா கைதட்டுங்க பாக்கலாம்...

புரியாதவங்களும் ஒரு முறை ஜோரா கைதட்டிட்டு மறுபடியும் படிங்க....... இப்ப கண்டிப்பா புரியும்......


Monday, 27 October 2014

தாத்தா உம்மாச்சி............

என் மகள் ஒவ்வொரு வருடமும் தன் மகனுக்கு  நவராத்திரி சமயத்தில்  9 நாட்களும் ஒவ்வொரு வித அலங்காரம் செய்து விடுவாள். 

கடந்த வருடம் நான் அமெரிக்கா சென்று சேர்ந்த சில நாட்களில் என் பேரன் தனக்கு அன்றைய அலங்காரமாக தாத்தா உம்மாச்சி வேடம் என்று சொல்லி விட்டு பாலர் பள்ளிக்கு சென்று விட்டார்.(இவர் என்னுடைய நண்பர்ங்க,மரியாதையாவே குறிப்பிட்டுடறேன், கோவிச்சுக்கிட்டா பேட் கேர்ல் கோ அவே, காப் கேட்ச் மை க்ரேண்ட்மா  என்று காவலரை அழைத்து  விடுவார் )

நிறை மாத கர்ப்பிணியாய் இருந்த என் மகள் , அந்த வேடத்திற்கான ஆடை அணிகளை தயார் செய்து வைத்திருந்தார்.(தோம்) மாலை பள்ளியிலிருந்து வந்ததும் , அலங்காரம் செய்து முடிக்கும் தருணம்.

கேசவ் : தாத்தா உம்மாச்சிக்கு இருக்கற மாதிரி எனக்கு காது எங்கே?
என் மகள் : காதா??? எதுக்கு கண்ணா ?
கேசவ்: தாத்தா உம்மாச்சி படத்தை பாரும்மா , அவரோட காது எப்படி நீளமா இருக்கு , எனக்கும் அது மாதிரி வேணும் அப்ப தான் அவர் மாதிரியே இருக்கும்

எங்களுக்கு எதுவும் புரியவில்லை.அப்போது தான் கவனித்தோம். அவரின் காதுகள் நம் மதுரை வாழ் முதியவர்கள் போல வளர்த்த காதுகள் (மடல் நீண்டிருக்கும்) அவர் சொல்லும் வரை நாங்கள் யாருமே அதை கவனிக்கவில்லை......

குட்டி பையனின்  கூர்மையான கவனிப்பு திறனுக்கு முன்னால் பெரியவர்கள் வெட்கினோம். 
அடுத்த முறை காது தயார் செய்து வைப்பதாக வாக்களித்து சமாதானபடுத்தினோம்.


பின் குறிப்பு : தாத்தா உம்மாச்சி (ஸ்ரீ ராமானுஜர் ) பிறந்த திருபெரும்புதூரில் அவர் அவதரித்ததாக கருதப்படும்
மண்டபத்திற்கு மிக அருகில் பல பரம்பரைகளாக அங்கேயே  வசிக்கும், அவருக்கு சேவை செய்யும் குடும்பத்தின் வாரிசு தாங்க இந்த கேசவ் @ கோதாக்ரஜன். இவரது தம்பிதான் நம்ம ராகவ் @ லக்ஷ்மண யோகி (அவனா இவன்???)




Saturday, 18 October 2014

SAY CHEESE….


This is about a studious little girl who was really shy to mingle with people  and hesitated to laugh even during the funniest moments of her growing years.

Yeah…’twas  me who had this  complex about my unevenly aligned tooth during  high school days . Just then my milk teeth were getting replaced by permanent ones …( not fully replaced till date, only  28/32  I have , may be why I haven’t yet developed wisdom )

While in 7th Standard , one fine morning , there was this announcement about the “DENTAL CAMP” the next day ,in our school campus ,by a Dentist who had recently moved to our town Sathyamangalam (a small town in Tamil Nadu)India then and would reward the girls who had healthy tooth.  

We had no idea about  the camp….

The D day arrived.  Upon seeing the arrival of the Dentist, many girls rushed to the wash area with tooth powder, tooth brush, tooth paste , some even brick powder …as contingency measure and had their tooth cleaned.

During our class’ turn , after examining me , while I was moving out , heard the Dentist asking some teaching staff who I was, which I ignored. The camp was over by that evening.

The next day morning after the prayers , our Head Mistress Ms.Sundari announced the names of the prize winners   , as it is customary, with a little pause…..

The first prize goes to…………”S.MANJULA , 7th C “

Wooooooh…..'Twas me…….. surprise ….One of the BIGGEST moments of my life …….. which made me say cheese….

And  the second prize was for my friend and classmate YASMEEN…. (Beautiful & lovable lass …still I remember her face, her handwriting, her polite nature and what not)

We were rewarded with a fountain pen (Rs 11/-) each with a transparent section in the middle of it to monitor the ink level (Brown color) which I used until completion of my high schooling which made me  really proud though it could not eliminate my complex about the tooth alignment until it got settled at 15.

The Dentist befriended my father who was the Medical Officer At Ukkaram ( a small village in Tamil Nadu, India) then. ….Slowly many girls who were prescribed for Braces  started visiting him and his business picked up in a very short span…….Unlike current days it was   a single string for upper jaw over the tooth  attached with a flop which would stick to the upper palate . (Can be removed while brushing the teeth).My father strictly refused to put braces for me hoping that it would get set automatically when I grew up.

The good marketing techniques helped the Dentist  to raise to great heights which led him to start a school by himself headed by his Teacher wife….

Pioneer to Bill Gates, Steve Jobs and Marks, Huh ???

Say CANDY !!  Say DALLAS  !!

P.S : Our daughter’s Maxillofacial Specialist, during one of our visits, told us  that he had been noticing the increase in the number of takers for Braces during the  past 30 years due to the change in the facial structure because of  Evolution factor.. The chin is getting closer by which the jaws are unable to accommodate all the 32 teeth …..(Before fixing the braces, the Dentist would remove minimum 4 teeth to set your face right….know this fact???)


Making of Beauty indeed !!!!!!

Monday, 13 October 2014

Real ……Not reel….

Long long ago….. I know how long ago….. Its 25 years back  … :)


A bright sunny Wednesday…….. National Holiday  on account of Pro Government No Productivity Day…

As you guess , no transport, no postal service , no telegraph..of course no telephone to include in the list….. ( Only a few in each area had telephone in those days and they offered to help the neighbours when they receive any incoming call)

Morning as usual while reading the  newspaper, read the  astrology column which I never read before.  The astrospeak for  my star that day was that  I would receive an important communication.

I was wondering the whole day how I would receive it…….no postal service……no transport……..

Tick…..Tick…..Tick…… The clock struck 7………..Almost the day was over and I proceeded with my chores and kids.

Dringggggg……My door bell rang.

There stood this little boy of my friend to inform me that I would be receiving an overseas call  in a short while then.

Vow…… Who was this??? From where???

Surprise……..

Rushed across  the scary bushes at that time to reach their house in the next street……

Gosh…..its my long time  friend with whom there was no communication for years, since the friend had moved overseas for living.

Yeah….It was time to believe the stars and astrology…

Feeling wonderful till now ……about this yet another memorable moment of my life…..

P.S :  The  day I returned after hospitalization  of  my daughter for some  illness…… to take care of my little son, happened to receive two New Year Greeting Cards(1991) from a friend and my sissy……. that too after few  years of no communication , made me burst into tears. So heart warming and soothing moment which I cherish till date, which we do not get often these days though we have lot of communication modes and we say the world is a village.....





Friday, 10 October 2014

செத்தி மந்தாரம் துளசி...... கணி காணேனம் ...


1982 ஏப்ரல் ........

கோவையில் விடுதியில் தங்கிப் படித்த நாட்களில் கொண்டாடிய புத்தாண்டு நன்னாள்.

சாரலும் தூறலுமாய் பாலக்காட்டுக் கணவாயிலிருந்து குளிர் காற்று வருடம் முழுவதும் வீசிய அருமையான காலகட்டம்.(மின் விசிறிகளே கிடையாது. )

புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு கேரள நாட்டு வழக்கப்படி விடுதியில் ஒரு அறையில் முகம் பார்க்கும் கண்ணாடி முன்பு  பழங்கள் , நகைகள் எல்லாம் வைத்து, கண்ணனின் திரு உருவப் படமும் வைத்து வயதில் மூத்த மாணவியர்கள் வருடப் பிறப்புக்கான பிரார்த்தனை செய்வார்கள். அதன் பின், என் போல 8.30 மணிக்கே தூங்கும் தங்கைகளை அவரவர் படுக்கையில் வந்து தட்டி எழுப்பி அந்தக் கண்ணாடியில் முகம் பார்த்து(நம்ம முகத்தைத் தான்), கடவுளை வேண்டச் சொல்வார்கள்.(அவிங்கல்லாம் நல்ல அக்காங்க இல்ல ??)

என் அருகில் வந்ததும் நான் தூக்கக் கலக்கத்தில் கேட்ட குரல் .." அவளை கண்ணை மூடிக்கிட்டே முகத்தைக் கழுவ சொல்லிட்டு அப்புறமா கண்ணாடில பாக்க சொல்லுங்க ..... பயந்துடப் போறா.."

(என்னுடைய இரவு நேர அலங்காரம் 3 மீட்டரில் தைத்த பூப்போட்ட பாவாடை, ஒரு மாமா கழித்துக் கட்டிய காலர் வைத்த செங்கல் நிற சட்டை, அதன் மேல் மற்றொரு மாமா கழித்துக் கட்டிய கை இல்லாத காலர் இல்லாத நீல வண்ண ஸ்வெட்டர், முகத்தில் அம்மா தன் கையால் உரைத்து கொடுத்தனுப்பிய சந்தனம் ,நெற்றியில் சற்றே பெரிய சிவப்புப் பொட்டு என பல நிறங்களில் .....நம் முகத்தை பார்த்து நாமே பயப்படும் வண்ணம் இருக்கும்)


விடிந்ததும் பிரார்த்தனைக் கூடத்தில் அனைவரும் விடுதித் தலைவியின் தலைமையில் அங்கே அலங்கரிக்கப் பட்டிருக்கும் கண்ணாடியில் முகம் பார்த்து, அவருடன் சேர்ந்து "செத்தி மந்தாரம் துளசி பிச்சக மாலகள் சார்த்தி குருவாயூரப்பா நின்னை கணி காணேனம்" , புதிய காலை உதயமானதே பரிபூரணன் அருளினாலே போன்ற பாடல்களைப் பாடி கடவுளை வணங்குவோம். விடுதியில் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஏற்ற வகையில் உணவு அளிப்பார்கள். (கிருஷ்ண ஜெயந்திக்கு சீடை, ராம நவமிக்கு நீர் மோர் பானகம், கிரிஸ்துமஸ் அன்று கேக் என வீட்டில் இல்லாத குறையே தெரியாது)

Extreme L : Bency , Middle Anli
அடுத்த வருடம் எங்களுடன் வந்து சேர்ந்த பென்சி புது வருட நாளில் பெரிய பொட்டு வைத்து, முண்டு உடுத்தி உறவினர் வீட்டிற்கு சென்று வர அனுமதி கேட்பார். (என் தோழிகளுக்கும் சாப்பாடு கொடுத்தால் தான் உங்கள் வீட்டிற்கு வருவேன் என்று சொல்லி, திரும்பி வரும் போது காளன் ,ஓலன், அவியல், இஞ்சிப் புளி, சக்க பிரதமன் என 5 அடுக்கு கேரியரில் எங்களுக்காகக் கொண்டு வந்து தருவார்). கிரிஸ்துமஸ் வந்தால் வேறு மாதிரியான "மேக் ஓவரில்" ஆன்லியும் பென்சியும் வீடு செல்ல அனுமதி கேட்பார்கள். (ஆன்லியின் தாயார் எங்களுக்காக தனியாக கேக் செய்து அனுப்புவார், உடையாமல் கொண்டு போய் கொடுக்க சொன்னாங்க அம்மா _ ஆன்லி)


மிகுந்த மகிழ்ச்சியான நிறைவான நாட்கள் அவை....










பின் குறிப்பு : குட்டிப் பேரன் குட்டியாய் இருந்த நாட்களில் கண்ணன் பற்றிய பாடல்களை தினமும் பாடுவேன். 
அட..... நமக்கு கூட இத்தனை பாடல்கள் தெரியுதே.......)ஆயர்பாடி மாளிகையில் , தெச்சி மந்தாரம் என ஒரு மணி நேரம் மாலையில், தினமும் மடியில் படுத்துக் கொண்டு அமைதியாகக் கேட்பார். (பாப்பாவின் அப்பா அலுவலகத்திலிருந்து வரும் வரையில்) குட்டிப் பாப்பா புண்ணியத்தில் சில மாதங்கள் தினமும் கண்ணனைத் தொழும் பாக்கியம் கிடைத்தது.......லவ் யூ குட்டிப்பையா......
(அவருக்கு செத்தி மந்தாரம் பாட்டு தான் மிகவும் பிடித்திருந்தது......)

P.S : Click on the link to hear the song : 
 https://www.youtube.com/watch?v=Ch25qcAdlCA



Wednesday, 8 October 2014

கவித கவித..சிவகாமி............


என் எண்ணங்கள்...


(1)சூறாவளி எச்சரிக்கை

மாலை நான்கு மணி
பள்ளி விட்டு வரும்
பத்து வயது சுட்டி மகளின்
வருகை நேரம்

(2)விண்மீன்

இரவுக் காரிகையின்
வைர மூக்குத்தி....
கண்கள்
மனதின் பிரதிபலிப்பு காட்டும்
மாயக் கண்ணாடிகள்..

(3)படம்

படம் பார்க்கப் போவதாய்
படம் எடுத்து அனுப்பி
படம் காட்டி - நம்மை
படம் எடுக்க வைத்த பாப்பா -தாம் பார்த்த
படம் என்னவென்று எப்போது
படம் காட்டுவார்?
படம் : Movie, Photo, Film

(4)மண் வாசனை

மழையின் முதல் தூறல்
முகிழ்க்கும் மணமிதுவே
ரேவதியின் நடிப்பையும் சேர்த்தே
நினைக்க வைத்திடும்
இயற்கையின் இந்த வாசனை...


(5)யாருக்காக இது யாருக்காக?

கண்ணில் தினமும் தென்படும்
கவனம் ஈர்க்கும் ஒரு நிகழ்வு.......
கையில் லாட்டியுடன்
காலை நேர நடைப்பயிற்சியில்
குடும்பத் தலைவிகள்
கள்ளர்களை விரட்டவா?
காலை சுற்றும் நாயை விரட்டவா?
கண்ணெட்டும் தூரத்தில்
காவலர் குடியிருப்புகள்.....

(6)செய்வீர்களா? செய்வீர்களா?

மற்றவரின் தவறுகளை
மறந்து மன்னிப்பதால்
மக்கள் அனைவருமே
மஹாத்மாக்கள்தான்...

(7)இன்றைய அறுவடை

தலை வாரி முடித்தபின்
தரையில் உதிர்ந்த தலைமுடிகள்

(8)கடல்

ஓடிக் களைத்த நதிகளின்
ஒட்டு மொத்த ஓய்விடம்

(9)லஞ்சம்

எங்கும் எதிலும்
நீக்கமற நிறைந்திருக்கும்
கலியுகக் கடவுள்...


(10)எதிர்பார்ப்பு ??

பதினான்கு வருடங்கள் -தசரதனுக்கு
எத்தனை வருடங்கள் -எனக்கு??
பிள்ளைகள் அயல் நாட்டில்....

(11)பஞ்சம்

அன்புக்குப் பஞ்சம்
ஆற்றலுக்கும் பஞ்சம்
இரக்கத்திற்கு பஞ்சம்
ஈகைக்கும் பஞ்சம்
உற்சாகம் தொலைந்து போய்
ஊக்கத்திற்கும் பஞ்சம்
எங்கும் பஞ்சம்
ஏனிந்த மாற்றம்?
ஐயம் தெளியவில்லை
ஒற்றுமைக்கும் பஞ்சம்
ஓய்விற்கும் பஞ்சம்
ஔடதம் மட்டுமே பெருக
தூய நீருக்கும் காற்றுக்கும் பஞ்சம்..
பஞ்சம் தொலைக்கும் நம்
எண்ணங்களுக்குமா பஞ்சம் ?

(12)நட்பு 

இலக்கணங்கள் எதுவும் இல்லாததால்
இதுவும் ஒரு புதுக் கவிதைதான்...


(13)காணோம்... காணோம்... கண்டு பிடி.........

கான்க்ரீட் காடுகளுக்கிடையே
காணாமல் போனது வனங்கள் மட்டுமில்லை
குட்டிப் பிள்ளைகளின் சுட்டி விளையாட்டுக்களும் தான்



படித்ததில் பிடித்தவை.....


(1)முயற்சி

சாண் ஏற முழம் சறுக்கும் மனிதா
நீ ஏன் முழம் ஏற முயற்சிக்கக் கூடாது ?

(2)கறிவேப்பிலை

என்னை நீ சேர்த்துக் கொண்டது
வாசத்திற்குத் தானா
வாழ்க்கைக்கு இல்லையா?

(3)புத்தம் சரணம் கச்சாமி

ஆசையே துன்பத்திற்குக் காரணம்
புத்தர் சிலை அதிக விலை

(4)யார் அங்கே?

நெஞ்சைக் கிழித்துக் காட்ட
நான் அனுமனும் இல்லை
என் நெஞ்சில் இருப்பது
இராமனும் இல்லை........

                                                 **********************

Tuesday, 7 October 2014

மூசு(ரு)ண்டை ????

 சிறு பிள்ளைகளுக்கு சிற்றுண்டி தந்து அவர்களை திருப்திபடுத்துவது இருக்கே...... அதை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுதே, அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுதே.......(லட்டு வாங்க வரிசையில் நிற்காதது ஒன்று தான் குறை, சிவகாமி சிவகாமி)

Little Bro
என் சகோதரர் சிறுவயதில் அம்மா போரடிக்குது , "எதன்" என்பார். அது எதனாக வேண்டுமானாலும் இருக்கலாம், பொட்டுக்கடலை நிலக்கடலையில் ஆரம்பித்து முறுக்கு, வாழைப்பழம் என அவர் எண்ணத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும்.


My kids
என் மகன் , அம்மா ஸ்னாக்ஸ் வேணும் (இதற்கு பின்னணி இசை வேறு...... போரடிக்குது போரடிக்குது கேட்கவில்லையா .......சொட சொட சொட்........) )விடுமுறை நாட்களில் உட்கார விட மாட்டார்........ இவரது விருப்பம் "ரக்கட்டு" எனப்படும் எண்ணையில் செய்த தின்பண்டங்கள். .குறைந்த பட்சமாக அரிசி அப்பளம், அரிசி வடகம்.(என் மாமியார் உன் மகன் ஸ்னேக் அப்படின்றானே... அவன் பாம்பை சாப்பிடக் கேட்கிறானா என்றார் ரகசியமாக என்னிடம், இதுக்கு விளக்கம் வேறூ சொல்லி இவரை திருப்தி படுத்துவது கூடுதல் தமாகா........)


என் தோழியின் மகன் அவரது தாயாருடன் எங்கள் வீட்டிற்கு வந்திருந்த போது , குட்டிப் பையனுக்கு சாப்பிட பிஸ்கட் கொடுக்க முற்பட்டேன். அதற்கு அவர் இப்பத்தான் அவன் மூசு(ரு)ண்டை சாப்பிட்டான் என்றார். (அப்படின்ன எதோ உருண்டை போல இருக்கு என்று நானும் எங்களுடன் தங்கியிருந்த என் இளைய சகோதரியும் எண்ணினோம்)சில நாட்களுக்குப் பிறகு தோழியிடம் , மூசு(ரு)ண்டை செய்வது எப்படி என என் சகோதரி கேட்க , அவர் சிரித்து விட்டு, நீங்க ஸ்னேக்ஸ்ன்னு சொல்வீங்க இல்லையா அதைத் தான் நாங்க மூசு(ரு)ண்டைன்னு சொல்வோம் என்றார்.எதன் போலத் தான் இது , எதனாகவும் இருக்கலாம்.

Grand kids
சமீப காலங்களில் குட்டிப் பேரன், பட்டீ(அ)அம்மா இட்ஸ் போரிங்க் , சாப்பிட ஏதாவது கொடுங்க...... இவர் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை யாருமறியார் பராபரமே........

சேர்ந்தே இருப்பது - போரிங்கும் ஸ்னேக்ஸும்.....
சேராதிருப்பது -பாப்பாவின் எண்ணமும் அம்மா தரும் ஸ்னேக்கும்.......

திட்டு வாங்க  -பாப்பா
கொட்டு வைக்க -அம்மா

அய்யா சாமீ , ஆளை விடுங்க.......



இளமையென்னும் பூங்காற்று..............

பசுமையான மலைகளும் ஆறும் வாய்க்காலும் நன்செய் புன்செய் வயல்களும் ஐதர் அலி திப்பு சுல்தான் ஆகியோர் ஆட்சி செய்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பெரியார் மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியமங்கலம், கோவை மற்றும் சேலம் மாவட்ட சுற்றுப் புறங்களும் தான் என் இளமை கழிந்த நாட்கள்.

என் இளமைக் காலங்களை சற்றே அசைபோட , கிடைத்தவைகள் தான் கீழ்க்கண்ட மலரும் நினைவுகள் ....... ( 3 ~ 6 வயது)

1.கிராமத்து வயல் வெளிகளில் நடந்து விளையாடி அங்கிருக்கும் மரங்களில் உள்ள தூக்கணாங்குருவி கூடுகளைக் கண்டு மகிழ்வோம்(.அப்பாவின் கைபிடித்து  நடந்து சென்று கிராமத் திருவிழாவும், அருகில் செல்லும் தொடர்வண்டிகளையும் கண்ட நினைவுகள் இனிமையிலும் இனிமை... ஒழுங்கா குதிக்காம நடந்து வா...._அப்பா 
)
2. இயற்கையோடு இணைந்த விளையாட்டுக்களான தென்னை ஓலை ஊது குழல், பனை நுங்கு வண்டி, கிட்டிப்புள், கவண்கல் வைத்து விளையாடுதல் மரங்களின் மேலும் அவைகளைச் சுற்றிலும் விளையாடுதல், 

3.அருகிலிருக்கும் வயற்காட்டிற்கு சென்று பம்ப்செட் தண்ணீரில் குளித்தல்,வாய்க்காலில் விடியற்காலையில் குளித்தல், வாய்க்கால் மேட்டில் விழாமல் நடக்கும் போட்டிகள் என கும்மாளம் தான்

4 தெருவோரங்களில் குவிந்து கிடந்த காக்காபொன் (கறுப்பு நிறத்தில் தகதகன்னு தங்கம் போல மின்னுவதால் அந்தப் பெயர்) வைத்து விளையாடுவோம். வெங்காயம் போல் ஒவ்வொரு இழையாக எடுப்போம் (பின்னாளில் அது மைக்கா என தெரிந்து கொண்டேன்- நம்பியூர் என்னும் சிற்றூரில்) 

5.பள்ளியில் அழைத்து சென்ற சுற்றுலாவில் கண்ட கேசவன் என்னும் யானை(உம்மாச்சி பார்த்த ஞாபகமே இல்லை), திருச்சூரில் கண்ட மிருகக் காட்சி சாலை, மலம்புழா அணைக்கட்டு, அங்கு போகும் வழியில் முதன் முதலாக கண்ட ஆலங்கட்டி மழை... கூடவே என் குட்டித் தங்கை (சி ஐ ஏ ஏஜண்ட்- தப்பு பண்ணினா அம்மா கிட்டே போட்டு வேற குடுத்திடும்ல?) ....அம்மா சுட்டு அனுப்பிய இட்டிலி, புளிசாதம் ....என மனசுக்குள் மத்தாப்பூ.......

6.வீட்டின் பின்புறம் இருக்கும் பவானி ஆற்றிற்கு சென்று குளித்தல்,ஆடிப் பெருக்கு, காணும் பொங்கல் தினங்களில் அங்கே சென்று உணவருந்தி மகிழ்தல், கரையில் பூத்திருக்கும் மலர்களை பறித்தல் (இதை பூப்பறிக்கும் நோம்பி - பண்டிகை என்றே அழைப்பார்கள்.)

7.ஒரு புறம் கர்னாடகா மறுபுறம் கேரளம் என எல்லைகள் கொண்ட பகுதி. அவர்களின் பண்டிகைகளையும் கொண்டாடுவோம். உகாதி, புது வருஷ பிறப்பு , ஆயுர்வேத மருத்துவம் , இனிப்பும் தேங்காயும் சேர்த்த சமையல் என எல்லாம் உண்டு. (இல்லி பா வும் , இவிட வரூ வும் சர்வ சகஜமாய் காதில் விழும்) 

8. பண்டிகை நாட்களில் தோட்டத்திலிருந்து வரும் நெல் , நிலக்கடலை, கரும்பு, மஞ்சள், இஞ்சி, வாழை ,துவரை, சிறு தானியங்கள், பரங்கிக்காய்கள் என எல்லாவற்றையும் உற்றார் உறவினருடன் பகிர்ந்து கொள்வோம்.( நானும் என் சகோதரியும் கைவலிக்க சுமந்து போய் கொடுத்திருக்கிறோம்)


9.ஓய்வாய் அமரும் போது, வீட்டுத் தோட்டத்தில் பூத்த பூக்களைப் பறித்துத்  தொடுத்தல், கோலம் போடுதல் , கை வேலைகள், செடிகளுக்கு நீர் விடுதல்  என சின்ன சின்ன வேலைகளை சொல்லித் தருவார்கள்


10. வீட்டின் பின்புறம் மாட்டுக் கொட்டில் ....... 4 மாடுகள். படிபடியாக பாலும், தயிரும் நெய்யும். தெருவே வந்து பாலும் தயிரும் வெண்ணையும் சாணமும்  வாங்கி செல்வார்கள். மாட்டுப் பொங்கல் மிக சிறப்பாகக் கொண்டாடுவோம்(மாமாவுடன் மாட்டைக் குளிப்பாட்ட ஆற்றுக்கு யார் போவது, அதன் கொம்புகளுக்கு வண்ணம் பூசும் போது யார் பக்கத்தில் நின்று உதவுவது என்று சகோதரிகள் எங்களுக்குள் ஒரு குருக்ஷேத்திரப் போரே நடக்கும்)

11. விளையாட்டிலேயே எண்கள் , மாதங்களின் பெயர்களை கற்றோம்..... ஒரு குடம் தண்ணி விட்டு ஒரு பூ பூத்ததாம்..ரெண்டு குடம் தண்ணி விட்டு ரெண்டு பூ பூத்ததாம் என எண்களும் பத்து வரை சொல்லி ஆடுவோம் சுற்றி சுற்றி.......
பூப்பறிக்க வருகிறோம் வருகிறோம் என ஒரு குழு சொல்ல எதிர் குழு எந்த மாதத்தில் என கேட்கும் அதற்கு இவர்கள் சித்திரை மாதத்தில் என ஒவ்வொரு மாதமாக சொல்லிக் கொண்டே முன் நோக்கி நகர்வார்கள், இது மாதங்களுக்கான பாடல் விளையாட்டு

12. நல்ல பழக்கங்களைக் கற்றுத்தரும் பாடல்களைப் பள்ளியில் கற்றோம்..... 

சுத்தம் சுத்தம் சோறு போடும் சுகாதாரம் ஆகுமே , 
நித்தம் இதை மறவாது நேர்மையுடன் வாழ்வீரே,
ஈ மொய்த்த பண்டங்களைத் திங்கவே கூடாது 
எச்சில் கண்ட இடமெல்லாம் துப்பவே கூடாது,
மலஜலம் தூரம் கழித்திட வேண்டுமே 
மாசில்லா நீரை பருகிட வேண்டுமே - (சுத்தம்)

காகித துண்டுகள் காகித துண்டுகள் தரையிலே பார் ,
அசுத்தப் படுத்துது பொறுக்கி எடு என பாடிக் கொண்டே சுத்தம் செய்வோம்

13. சுதந்திர தினம் , குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, குழந்தைகள் நாள் ஆகியவைகளில் பள்ளியில் மிகச் சிறப்பாக விழா நடத்துவார்கள். பிள்ளைகள் கையில் தேசியக் கொடியுடன் ஊர்வலம் செல்வோம். பின்னர் தேச பக்தியை ஊக்குவிக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்(நாங்கள் இல்லாமலா?)

14. கோவில் திருவிழாக்கள், நவராத்திரி ஆகியவைகளில் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொள்வோம். (திருவாதிரை அன்று ஈஸ்வரர் அரச மரத்தை சுற்றி வரும் போது நாங்களும் மகிழ்ச்சியுடன் பின்னாலேயே செல்வோம். அக்கம் பக்கம் வாழ்பவர்கள் பிள்ளைகளை அழைத்து திருவாதிரை களி தருவார்கள்.

மீனாட்சி கல்யாணத்தன்று (இன்றும்) தாய் வீட்டு சீதனமாக மணமக்களுக்கான உடைகள் எங்கள் வீட்டிலிருந்து தான் செல்லும். நம்முடைய உறவினரது திருமணம் போல ஆத்மார்த்தமாய்
கடவுளர்களின் திருமணத்தில் பங்கு கொள்வோம்.

மொத்தத்தில் எங்கள் இளவயது வாழ்க்கை மிகுந்த மன நிறைவுடனும்,  இயற்கையுடனும் இணைந்தே இருந்தது.......... 




Friday, 3 October 2014

3 – IN - 1


Hannah Montana , Room mate, The sisterhood of the travelling pants ……. 3 movies in 1 day…… 

Yesterday….

All 3 plots happened to revolve around girls of 16 or 17 years, their life with single parent,  friends ,  family,  education, new relationships et al.

HANNAH MONTANA   ««««

Deals with the feelings of a little girl who is unaware of what she misses in her life due to her popularity as a singer. Forcefully taken by her father to her grandmother’ s birthday who lives in a farm house, which ultimately changes the attitude of the little girl about life.

 Affection  of a  father to his motherless child and his effort to make her successful is very touching……..Revival of her childhood relationships…… All through music……Melodies, Hip hops……

ROOM MATE «««

A new  entrant joins a teenage girl as room mate. The  girl   , is possessive and over protective about the  new girl who becomes her room mate  and kills whoever the new girl loves from her cat to college professor. When it is known to the new girl,  former tries to kill the new girl…and finally get killed herself……
The scenes though predictable were thrilling to watch….

It ends with  the new room mate telling she does not want any room mate for the time being when offered to move to his room by her boy friend.

THE SISTERHOOD OF THE TRAVELLING PANTS ««««

Unexpected story line. 4 friends  of a small town (all teenage girls ) before moving for their summer vacation for the first time in their lives , happen to shop a Jeans pants which unexpectedly suit all of them. They agree that each girl  wear it for a  week and pass on to the next girl (wherever they are…) and write what happened at the time of wearing the pants….

A native of Greece moves to meet her grandparents in Greece , happened to meet a guy from rival family and finally their love got accepted by their grandparents.

Second girl who takes a documentary film meets a little girl with leukemia who too tries the pants which does not fit her but believes it has done good to her too by making her to meet our girl.As wished by the little girl, she completes her documentary.

Third girl, who visits her father happens to meet her father’s new family and his marriage to the new lady with 2 grown up children. She is frustrated and returns back home..At the end, when she attends the wedding ceremony wearing the pants, she was invited by her father as his family member ,to the dais before he says the oath .

Fourth girl, who joins a sports camp excels in sports, meets a guy there, returns back home sad, followed by the guys arrival on his way to his university that he would wait until she is 20 and still she remembers him and requests her to him a shot.

All is well that ends well…….

MORAL: All movies insisted teens should concentrate in their studies and carrier until they attain the right age to get into any relationship.


Thursday, 2 October 2014

நல்லாக் கேட்டாய்ங்கப்பா (நான்) டீட்டெய்லு..........

அன்றும் இன்றும் [என்றும்???] மாணவர்களைத் துன்புறுத்துவது நான் டீடெய்ல்(Non - Detail) எனப்படும் துணைப்பாடங்கள்.

டீடெய்ல் எனப்படும் பாடங்களை ஆசிரியர்கள் பயிற்றுவிக்க , இந்த துணைப் பாடங்களை நாமே படித்துத் தெரிந்து கொண்டு தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டும்.

(1) தமிழ்

11 ஆம் வகுப்பில் வீரேசலிங்கம் பந்துலு மற்றும் சில கவிஞர்களைப் பற்றிய கட்டுரைகள் அடங்கிய புத்தகம். தேர்வில் ஏதேனும் ஒரு கவிஞரின் பெயரை கொடுத்து கட்டுரை எழுத சொல்லப்படும்.

(வீரேசலிங்கம் பந்துலு தெலுங்கு இலக்கியங்களில் சிறந்தவர். சிறுவர் இலக்கியம் படைத்தவர். )"கோத்தி பெட்டுன தெந்துகுரா கொம்மலு விரிசே தந்துகுரா" என அவர் தெலுங்கில் எழுதியதை அப்படியே தமிழில் அச்சடித்து அதற்கு விளக்கம் வேறு........ மொத்த கட்டுரையும் இரண்டிரண்டு வரிகளுக்கு ஒரு முறை தமிழில் எழுதப் பட்ட தெலுங்குப் பாடல்கள் , அதற்கான விளக்கம் என இருக்கும். அப்படியே மனப்பாடம் செய்து பரீட்சையில் எழுதினேன், (வேறு வழி???) மற்ற தலைப்புக்கள் இதை விட மோசம்..... (மொத்தப் புத்தகமும் இதே நடையில்..... ஸ்ஸ்ஸப்பா….இப்ப நெனைச்சாலும் கண்ணக் கட்டுது.....)

துணைப்பாடம் தான் இந்த கதின்னா, முக்கிய பாடங்களை கற்றுத் தந்த ஆசிரியை  தமிழில் கம்ப ராமாயணத்தையும் அரிச்சந்திர புராணத்தையும் விளக்கி விட்டு, எங்களைப் பார்த்து "தெலிசுதா?? புருசுதா?? என்று கேட்பார்.(தெலுங்கைத் தாய் மொழியாக கொண்டவர்)

12 ஆம் வகுப்பு துணைப்பாடம் ஒரு சிறு கதைத் தொகுப்பு. ராஜாஜி போன்றோர் எழுதியது. சுமார் சுவாரசியமாக இருக்கும். நம்மளைக் காப்பாற்றின கதை வைவா வோஸ் (viva voce). கடந்த 5 வருட கேள்விகளை ஆராய்ச்சி செய்ததில் இந்த கதை நிறைய தடவை கேட்கப்பட்டிருந்தது.

(ஒரு அரசாங்க அலுவலகத்தில் வேலை செய்யும் நபர் ஒவ்வொரு முறையும் டிபார்ட்மெண்டல் தேர்வுகளில் தேர்ச்சி பெற மாட்டார். அதற்கு அவர் சொல்லும் காரணம் எழுத்து பரீட்சையில் தேறிட்டேன் வைவா வோஸ்ல தேறலை.கடைசி வரை அவர் ஆபீசர் ஆகவே மாட்டார்.)

(2) ஆங்கிலம்

ஆங்கில துணப்பாடத்தில் இது போல பிரச்சினை இல்லை.ஒரே கதை.......... எங்கிருந்தாவது ஒரு பத்தி தருவார்கள். அதிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். குத்து மதிப்பா கதை தெரிந்திருந்தாலே போதும்.

11 ஆம் வகுப்பில் Three men in a Boat  by "Jerome K Jerome" ..... இதில் முக்கியமான பகுதி Uncle Podger hangs a picture ( ஆங்கில பாடமாக ஏதாவது ஒரு வகுப்பில் நாம் அனைவருமே படித்திருப்போம்,  Uncle Podger தம்முடைய மனைவி மற்றும் 5 பிள்ளைகளுடன் சேர்ந்து ஒரு படத்தை சுவரில் ஆணி அடித்து மாட்ட அலட்டும் அலட்டலே கதை...கடைசியில் படம் கோணலாக  இருக்கும்) இதை வைத்து சமாளித்தேன். 

[பல வருடங்களுக்கு பிறகு என் தந்தையாரின் சிபாரிசின் பேரில் அந்த புத்தகத்தைப் படித்தேன்(இன்றும் என்னிடம் உள்ளது).  நல்ல காமெடி கதை.. குறைந்த பட்சம் புன்னகையாவது வரும் ...........]

12 ஆம் வகுப்பில் Treasure Island.....by Robert Louis Stevenson. இன்று வரை கதை தெரியாது...... எங்களின் தலைமை ஆசிரியை ஸ்ரீவள்ளி தியேட்டரில் அந்த படத்தை பார்க்க அழைத்து சென்றார். (அப்போதாவது இவங்களுக்கு சுவாரசியம் வந்து படிக்க மாட்டங்களான்னு ஒரு அல்ப ஆசை தான்)
ம்ஹூம்.... 

இது துணைப்பாடம் இல்லீங்கோ........கடைசி வரை துணைக்கே வராத பாடம் ......

பின் குறிப்பு : நானே ஆசிரியை ஆன பின்பு என்னிடம் படிக்க வந்த மாணவர்களுக்கு கற்றுத் தரும் பொருட்டு நான் படித்த துணைப்பாட நூல் Scarlet Pimpernal..... பிரஞ்சு புரட்சி நடந்த கால கட்டத்தில் சிற்றரசர்களையும் பிரபுக்களையும்  கில்லட்டினில் சாகாமல் எப்படி இங்கிலாந்துக்கு கூட்டி சென்றார்கள் என்பது பற்றிய கதை ....... மேரி அண்டாய்னெட்டும், 16 ஆம் லூயி மன்னனும், சர் பெர்சி ப்ளேக்னியும் மார்கரெட்டும், ஷாவலினும் மனதைக் கொள்ளை கொண்டனர்.கடைசி வரை யார் காப்பாற்றுகிறார் என்பதை சஸ்பென்ஸ் ஆக வைத்திருப்பார் கதாசிரியர். 

இன்றளவும் மனதில் நிற்கும் சம்பவங்களின் கோர்வை.....அருமையான கதை......

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...