Sunday, 6 June 2021

ஐரோப்பியப் பயணம் [பகுதி-4] : Brussels - Belgium


April 9, 2016

ஆம்ஸ்டெர்டாம் நகரிலிருந்து 240 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் (Brussels) நகரம்.

European Union தலை நகரம், NATO வின் தலை நகரம், De facto capital of Europe, Economic capital of Western Europe என பல்வேறு வகையிலும் சிறப்பு பெற்ற ஊர்.

என் முதல் அமெரிக்க பயண சமயத்தில் இரண்டு முறை இந்நகரின் விமான நிலையத்தை கடந்து சென்ற அனுபவம் உண்டு என்றாலும் ஊருக்குள் செல்வது முதல் முறை என்பதால் மனதில் excitement இருந்து கொண்டே இருந்தது.

வழியெங்கும் புல்வெளிகள், நீர் நிலைகள் அதிகம் தென்பட்டன. பெல்ஜியம் நாட்டில் சிவப்பு நிற மலர்களும் செர்ரி மலர்களும் நிறைய தென்பட்டன. டூலிப் மலர்களை காணவில்லை. பேருந்து சென்ற சாலைக்கு மிக அருகிலேயே ரயில்களும் (Euro star, Eurail) சென்று கொண்டிருந்தன. ரயிலில் சென்றிருந்தால் வேறு மாதிரியான காட்சிகளை கண்டிருக்கலாமோ என்று வருந்த தேவையில்லை. நாங்கள் சென்ற இடமெல்லாம் அனேகமாக அருகிலேயே ரயில்கள் சென்றன.
தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போதுAntwerp நகரம் செல்லும் மார்க்கம் என கண்டபோது உயர் நிலைப்பள்ளியில் படித்த பூகோள பாடம், பழைய நாட்களில் பெல்ஜியம் வைரத்தை பற்றி வீட்டு பெரியவர்கள் பேசிக் கேட்டது என நினைவுக்கு வந்தது. பிரஸ்ஸல்ஸ் நகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Antwerp [Antwerpen என அவர்களின் மொழியில்] நகரில் தான் உலகிலேயே மிகப் பெரிய அளவில் வைர கற்களை பட்டை தீட்டும் தொழில் நடைபெறுகிறது. Antwerp நகரம் Diamond district என அழைக்கப்படுகிறது.

ஒரு சுவாரசியமான தகவல் படிக்க நேர்ந்தது. The neighborhood is dominated by Jewish, JAIN INDIANS, Maronites Christian Lebanese and Armenian dealers, known as diamantaires. More than 80% of Antwerp's Jewish population works in the diamond trade; Yiddish was, historically, a main language of the diamond exchange. No business is conducted on Saturdays _ Courtesy Wikipedia

பேருந்தின் உட்புறக் காட்சிகளையும் சற்று காணலாமா?

வேலையிடங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தேவை உள்ளவர்கள் அமைப்பாளர்களின் அறிவுரைப்படி சென்னையிலிருந்தே Maxis International Telephone Call Card வாங்கி வந்திருந்தார்கள். சிலர் International roaming வசதியுடன் கைபேசி வைத்திருந்தார்கள்.

எங்கள் இருக்கை பேருந்தின் மேல் தளத்தில் படிக்கட்டை ஒட்டியது. எங்களுக்கு பின்னாலும் முன்னாலும் இருப்பவர்களுடன் என் கணவர் நட்பு செய்து கொள்ள இந்த 3 மணி நேர பயணம் உதவியதுபயணம் தொடங்கி 4 நாட்களாகி விட்ட நிலையில் அலுவலக நேரத்திற்குள் தத்தம் ஊழியருடன் / குடும்பத்தாருடன் பேச ஆவலாக காணப்பட்டார்கள்சார் இந்த கார்டை எப்படி உபயோகிப்பது என ஒருவர் உதவி கேட்கஎன் கணவர் Call card ன் எண்ணை scratch செய்துஅவருக்கு தேவையானவருடன் தொடர்பு ஏற்படுத்தி தருவதை பார்த்த பலரும் உதவி கேட்கஎன் கணவருக்கு பயண நேரத்தில் நன்றாக பொழுது கழிந்தது என்று சொல்லலாம்பயணம் முடியும் வரை இது தினமும் தொடர்ந்தது

நான் வேடிக்கை பார்ப்பதில் பிஸி.

ஐரோப்பாவில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவதால் எங்கெங்கும் தேவாலயங்கள் காணப்படுகின்றன. தேவாலய மணிக்கென தனியாக கோபுரம் (கூண்டு?) அமைத்துள்ளார்கள். [பைசா நகர சாய்ந்த கோபுரமும் ஒரு தேவாலயத்தின் மணிக்கூண்டு தான்]

பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் சென்றதால் மதியம் 1.30 அளவில் ஆம்ஸ்டெர்டாமிலிருந்து கிளம்பிய நாங்கள் 3 மணி நேரங்களுக்குள் Brussels நகரை அடைந்து விட்டோம்.

Mainland ஐரோப்பாவில் right hand driving முறை தான் பின்பற்றப் படுகிறது.

நெடுஞ்சாலையில் (அமெரிக்காவில் Freeway, ஐரோப்பாவில் Auto route என்றும் அழைக்கப் படுகிறது) ஆங்காங்கே வேக கட்டுப்பாட்டை முறைப்படுத்த சாலைக்கு இருபக்கத்திலும் speed monitor கருவி பொருத்தப்பட்டு இருக்கிறது. அதை கவனித்தால் நம் பேருந்து எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது என.காணலாம். எங்கள் பேருந்து ஓட்டுநர் மிக திறமையானவர். 100, 80, 70 என வேக கட்டுப்பாட்டிற்கு தகுந்தாற்போல speed monitor displayயில் துல்லியமாக அதே எண் தெரியும் தெரியும். 15 நாட்கள் பயணத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே பிரேக்கை உபயோகித்தார்.

நகரத்தின் வெளிப்புறத்திலேயே (Outer Brussels) Mini Europe என்னும் சுற்றுலா தலம் அமைந்துள்ளதால் முதலில் அதனை காண சென்றோம்.


இந்த பூங்கா Atom எனப்படும் செல்லின் (cell) மூலக்கூறு போல வடிவமைக்கப்பட்ட பிரசித்தி பெற்ற Atomium என்னும் கட்டிடத்தின் அருகில் உள்ளது. 1958ஆம் வருடம் நடைபெற்ற உலக பொருட்காட்சிக்காக கட்டப் பட்டதுமக்களின் விருப்பத்தின் பேரில் அதை அந்த இடத்திலேயே அவ்வப்போது பழுது பார்த்து அப்புறப்படுத்தாமல் வைத்திருக்கிறார்கள்.

தற்சமயம் அதன் சில பகுதிகள் Exhibition, Fair போன்றவைகளை நடத்த வாடகைக்கு விடப்படுகிறது. ஒரு பகுதி மியூசியம் ஆக உள்ளது. உயரமான sphere ல் நின்று பார்த்தால் Brussels நகரின் Panoramic view தெரியும் என்று சொல்லப்பட்டது. அங்கே எங்களை அழைத்து செல்லவில்லை. கீழிருந்து வேடிக்கை பார்த்தோம். புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

Mini Europe என்பது மூன்று லட்சம் சதுர அடிகளில் கட்டப்பட்ட miniature park. நுழைவு சீட்டுகள், handbook ஆகியவைகள் கையில் தரப்பட்டு உள்ளே சென்று வர வழிகாட்டியால் ஆசீர்வதிக்க பட்டோம். Handbook பார்த்து நாமே சுற்றி பார்த்து கொள்ளலாம். கூடுதலாக அதே ஊரை சேர்ந்த ஒரு இளைஞர் எங்களுடன் வழிகாட்டியாக அனுப்பப் பட்டார்.

உள்ளே சென்றதும் சுற்றுலா பயணிகள் நினைவு (souvenir) எடுத்துக் கொள்ளும் வகையில் வித்தியாசமான Costume அணிந்த ஒருவரும் ஒரு புகைப்படக் காரரும் இருந்தனர். நாங்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். keychainல் போட்டும் வாங்கி கொண்டோம். 20 யூரோ காலி. எங்கள் பயணத்தில் இது போல நாங்களாக அதிக படியாக செலவு செய்தால் மட்டுமே purse  திறக்க வேண்டும்அது என்ன Costume இன்றளவும் என்னவென்று கூட தெரியாது.

பூங்காவின் உள்ளே ஐரோப்பிய யூனியனில் அமைந்துள்ள எல்லா நாடுகளிலும் உள்ள முக்கியமான கட்டிடங்கள், நிகழ்வுகள் போன்றவற்றை 1:25 என்ற விகிதத்தில் (ratio) சிறியதாக அமைத்துள்ளார்கள். 80 நகரங்களில் அமைந்துள்ள 350 கட்டிடங்கள் துல்லியமாக மிகச் சிறப்பாக நகலெடுக்கப்பட்டு இங்கே

காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. Mount Vesuvius எரிமலை, Rocket பறப்பது, விமானங்கள் ஓடுபாதையில் ஓடுவது, படகுகள் கடலில் செல்வது என working modelsம் உள்ளன.

இந்த பூங்காவை சுற்றி பார்த்தாலே ஐரோப்பிய நகரங்களை சுற்றி பார்த்த உணர்வு கிடைக்கும். மாடல் அருகே நாடு மற்றும் பிற விவரங்கள் அடங்கிய போர்டுகள் இருந்ததால் புரிந்து பார்த்து ரசிக்க முடிந்தது. எங்களுக்கு தரப்பட்ட கையேட்டில் அனைத்து விவரங்களும் உள்ளன. (இன்றளவும் நாங்கள் பயணம் செய்த சமயத்தில் தரப்பட்ட எல்லா கையேடுகளையும் வைத்திருக்கிறேன்.)

பொறுமையாக சுற்றி பார்த்தோம். இந்த பூங்காவின் எந்த இடத்தில் எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் Atomium தெரியும். 45 நிமிடங்களுக்கு மேல் சுற்றி பார்க்க சுவாரசியமாக எதுவும் இல்லை. தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்தே பயணம் செய்யும் நேரத்தில் நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ள தரப்பட்ட break என எடுத்துக் கொள்ளலாம்.

நாங்கள் சென்ற தினத்தில் வெய்யில் 12 டிகிரி செல்ஸியஸ் இருக்கலாம். குளிர் இல்லை. வியர்வையும் இல்லை.

நாங்கள் பயணம் செய்த ஏப்ரல் மாதத்தில் ஐரோப்பாவில் நீண்ட பகல்கள் என்பதால். இரவு 8.30 வரை சூரிய வெளிச்சம் இருக்கும். நிதானமாக சுற்றி பார்த்து விட்டு விடுதிக்கு திரும்ப தினமும் இரவு 10 ஆகும்.

அங்கிருந்து கிளம்பி நகருக்கு உள்ளே சென்றோம். மாலை 5-5.30

ஒவ்வொரு ஐரோப்பிய நகரிலும் வாய்க்கால்(canal), ஆறு, ஏரி என நீர்நிலை ஒன்று காணப்படுகிறது. நகரின் நடுவே சென்றாலும் மிக தூய்மையாக பராமரிக்கப் படுகின்றன. ஒரு சிறு குப்பை கூட கண்ணில் படவில்லை.

பிரஸ்ஸல்ஸ் நகரின் மத்தியிலும் வாய்க்காலை கண்டோம். சுற்றுலா பயணியருக்கு ஊருக்குள் படகுப் போக்குவரத்தும் நடைபெறுகிறது.

https://en.wikipedia.org/wiki/Brussels#Water

ஐரோப்பாவில் குடிதண்ணீருக்கு என தனியாக குழாய்கள் எங்கும் இல்லை.

என் முதல் அமெரிக்க பயண சமயத்தில் இந்நகரை கடந்து சென்ற போது கவனித்தவைகள்:

1.விமானம் தரையிறங்கும் சமயம் ஒரே மாதிரியான வடிவமைப்பில் வரிசை வரிசையாக Victorian houses கண்டேன். விக்டோரியன் வீடுகள் என்பவை


விக்டோரியா பேரரசின் காலத்தில் கட்டப்பட்ட வீடுகள். தற்காலத்தில் புதுப்பிக்கப்பட்டவை. நான் கண்ட வீடுகள் Stick style, Folk Victorian style அமைப்பில் தனித்தனி வீடுகளாக இருந்தன. [அதே போன்ற வீடுகளை லண்டனின் புறநகர் பகுதிகளில் காண முடிந்தது.]

மேலும் விவரங்கள் அறிய விரும்புவோருக்கு: https://www.homenish.com/victorian-style-houses/

2.இந்நகருக்கு அருகில் JET விமான தளம் உள்ளது. விமானத்தில் பயணிக்கும் போதே சாலைகளில் பக்கத்தில் வாகனங்கள் செல்வது போல அருகில் விமானங்கள் பறந்து சென்றதை கண்டேன். விமான நிலைய பேருந்தில் டெர்மினல் சென்ற போதும் வானில் புகை கோலங்களை காண முடிந்தது.

3. நியூயார்க் விமானத்தில் பிரஸ்ஸல்ஸ்

நகரில் ஏறிய பயணிகள் வெள்ளை நிறத்தில் நீண்ட அங்கி அணிந்து தலையில் குல்லாய்/ தொப்பி அணிந்து, காதருகே குழல் குழலாய் முடி தொங்கி கொண்டிருக்க சிறுவர் முதல் பெரியவர்கள் வரை வித்தியாசமான தலையலங்காரத்தில், (ஆண்கள்) .வித்தியாசமான உடை மற்றும் தலை அலங்காரத்தில் இருந்தார்கள். அவர்கள் யார் எந்த ஊரை /நாட்டை சேர்ந்தவர்கள் என்று இன்றளவும் தெரியவில்லை (யாரோ அவர் யாரோ என்ன ஊரோ?)

(மேற்கண்ட தகவல்கள் என் முதல் அமெரிக்க பயணக் கட்டுரையின் ஒரு பகுதி)

மேற்சொன்னவைகளை மீண்டும் நேரில் அருகிலிருந்து பார்க்கும் சந்தர்ப்பத்திற்காக ஆவலுடன் காத்திருந்தேன் என்றால் மிகையாகாது.

Brussels நகரம் Central District, Royal District என பல பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது ஊரின் மையப்பகுதியில் (Central District) ஓரிடத்தில் பேருந்தை அதற்கான இடத்தில் நிறுத்தி விட்டு எங்களை நடத்தியே சுற்றி பார்க்க அழைத்து சென்றார் வழிகாட்டி.

நாங்கள் பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட இடத்தில் ஒரு மண்டபம் போன்ற அமைப்பு இருந்தது.(Brussels Stock Exchange கட்டிடத்தின் முன் பகுதி அது) Bannerகள் கட்டப்பட்டு இருந்தன. மொழி தெரியாததால் படிக்க முடியவில்லை. மக்கள் (ஒவ்வொருவராக) "அமைதியாக" வந்து பூங்கொத்துக்களை வைத்து விட்டு சென்றார்கள். அவர்கள் வேறு level.

நாங்கள் 80 பேர் கூட்டமாக அங்கே கசமுசவென்று என்ன ஏது என்று பேச ஆரம்பிக்க, வழிகாட்டி ரகசியமான குரலில், "எல்லாரும் அமைதியாக இருங்கள். மார்ச் 22 ஆம் தேதியன்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு உலகளவில் வருத்தம்/எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இங்கிருந்து முதலில் கிளம்புவோம். Stay together stay safe என்று எச்சரித்து அழைத்து சென்றார் " நாங்கள் சென்ற சமயம் அமைதியாக இருந்தாலும் நிலைமை மாறினால் போலீசார் கண்ணீர் புகை, தடியடி என நடவடிக்கை எடுக்க கூடும் இல்லையா? வழிகாட்டிக்கு அந்த கவலை.

மெட்ரோ ரயில், டிராம், பேருந்துகள், விமான நிலையம் என சிறந்த போக்குவரத்து கட்டமைப்பு உடைய நகரம் பிரஸ்ஸல்ஸ். மார்ச் 22, 2016 அன்று தற்கொலைப் படையினரால் மெட்ரோ ரயில் நிலையத்திலும் விமான நிலையத்திலும் வெடிகுண்டுகள் வைக்கப் பட்டன. அதற்கான எதிர்ப்பு போராட்டம் தான் நாங்கள் மேலே கண்ட நிகழ்வு. [ முதல் பகுதியில் இது பற்றி குறிப்பிட்டுள்ளேன்]

அங்கிருந்து கிளம்பி முதலில் நாங்கள் கடந்து சென்றது ஒரு முக்கியமான கடை தெரு.

நம் நாட்டில் காணப்படுவது போல சிறு சிறு கடைகள், சிறிய உணவகங்கள் வரிசையாக.நிறைய தென்பட்டன. நம் T. Nagar Pondy Bazaarல் நடப்பது போலவே இருந்தது. குறுகலான ஆனால் போக்குவரத்து விதி மீறல்கள் இல்லாத சாலைகள். ஆங்காங்கே நடைபாதைகளில் 3 நிறங்களில் மூடியுடன் கூடிய குப்பை தொட்டிகள் காணப்பட்டன. (ஐரோப்பா முழுவதுமே என்று சொல்வது சரியாக இருக்கும்)

நான் 2010ல் விமானத்தில் பார்த்த குழல் முடி, தொப்பி, வெள்ளை உடை அணிந்த தோற்றத்தில் மக்கள் எங்கேயாவது தென்படுகிறார்களா என வழி மேல் விழி வைத்து கவனித்து கொண்டே நடந்தேன். 2010ல் ஆரம்பித்து தொடர்ந்த என் தேடல் 2016 ல் நேரில் நடைபெற்றது என கூறலாம். [பலரையும் விசாரித்து, கூகிளில், புத்தகங்களில் என எங்கெங்கும் தேடினேன் என்றால் மிகையாகாது.]

நாங்கள் கடைவீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்த சமயத்தில் சகோதரி கலாவின் கணவர் அடிக்கடி காணாமல் போனார். சகோதரி கவலைப்பட ஆரம்பிக்கும் நேரம் மீண்டும் தலை காட்டினார். அது நாள் வரை பயண நேரத்தில் சாப்பிட்ட அசைவ உணவு மற்றும் விமான Liquor வயிற்றை சோதிக்க, அவர் ரெஸ்ட்ரூமை தேடி அடிக்கடி சென்றிருக்கிறார். மறுநாள் காலை சகோதரி விவரம் கூறினார்.

வழிகாட்டி முக்கிய தெருவை தாண்டியதும் மற்றொரு பகுதிக்கு வழி நடத்தி சென்றார். சரத்குமார் / அஜீத்குமார் படங்களில் வரும் கிராமத்து பண்ணை வீடுகளை போல பெரிய்ய்ய்ய அகன்ற தொட்டி முற்றம் போன்ற பகுதி தான் சாலை. அதன் இரு புறமும் உணவுக்கடைகள் இருந்தன.

அந்த தொட்டி முற்ற சாலையை கடந்த போது நம் டீக்கடைகள், கையேந்தி பவன்கள் போல நெருக்கமாக சிறிய உணவுக் கடைகள் வரிசையாக இருந்தன.வாசலில் அடுப்பு வைத்து pancake போல தோசைகள் மற்றும் பிற உணவுகளை சமைத்து பரிமாறிக் கொண்டு இருந்தார்கள். ஒவ்வொரு கடை வாசலிலும் போர்டு வைத்திருந்தார்கள். ஆங்கிலம், டச்சு, பிரஞ்சு, ஜெர்மன், அரபி, ஸ்பானிஷ் மொழிகளை என்னால் அடையாளம் காண முடிந்தது. மேலும் வேறு சில மொழி போர்டுகளும் இருந்தன. என்னால் அடையாளம் காண முடியவில்லை ஒவ்வொருவரும் அவரவர் நாட்டின் traditional ஆடைகளை அணிந்திருந்தார்கள்.

வெள்ளை நிறத்தில் நேரு மாமா ஆடை போல ஷெர்வானி, தொப்பி, coat, அதன் மேல் கையில்லாத ஜாக்கெட், க்ரோஷா பின்னலால் செய்யப்பட வெள்ளை தொப்பி, கருப்பு தொப்பி என விதம் விதமான உடையலங்காரங்கள்.

பிரஸ்ஸல்ஸ் நகரம் பல்வேறு நாடுகளின் உணவுகளுக்கு புகழ்பெற்றது. அங்குள்ள மக்கள் சிறந்த உணவுகளை தேடி கண்டு பிடித்து உண்பதை ஒரு கலையாக கொண்டுள்ளனர். அந்த ஊரில் ஏன் எங்கெங்கும் உணவுக் கடைகள் என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

நாங்கள் வேடிக்கை பார்த்ததோடு சரி. எங்கும் எதுவும் வாங்கி
உண்ணவில்லை. சிறு பிள்ளைகளை வீட்டை விட்டு அழைத்து செல்லும் முன் தாய்மார்கள் வயிறு நிறைய சாப்பிடக் கொடுத்து அழைத்து செல்வது போல எங்களுக்கு பசியென்றே உணர்வே வராமல் பார்த்து கொண்டார்கள் பயண அமைப்பாளர்கள். நன்றிகள்.

இந்நகரில் French, Flemish (Dutch) அதிகமாக மக்கள் வசிக்கிறார்கள். இவர்களை தவிர சிறிய அளவில் Yiddish, Turkish, Arabic, Berber, Italian, Spanish, English and German போன்றோர் சமீப காலத்திலும் Jews எனப்படும் யூதர்கள் மேற்சொன்ன அனைவருக்கும் முற்பட்ட குடியேறிகள் எனவும் கூறப்படுகிறது _Wikipedia

அநேகமாக சரியாக கணித்திருக்கிறேன். என்னை நானே தட்டி கொடுத்து பாராட்டி கொள்கிறேன்.[

ஆங்கிலம், டச்சு, பிரஞ்சு, ஜெர்மன், அரபி, ஸ்பானிஷ் மொழிகளை என்னால் அடையாளம் காண முடிந்தது என குறிப்பிட்டுள்ளதை கவனித்திருப்பீர்கள். என் கணிப்பு சரியா என்பதை அறியவே wikipedia வை படித்தேன்.]

Dutch மக்கள் Flemish community என அழைக்கப்படுகிறார்கள் 90% மக்கள் பிரெஞ்சு மொழி பேசத் தெரிந்தவர்கள் தற்சமயம் ஆங்கிலமும் பேசுகிறார்கள் என கூறினார் வழிகாட்டி.

இந்த பகுதியிலும்
குழல் முடி கோமான்களை காணவில்லை. என் தேடலை அதன் பிறகும் தொடர்ந்தேன். [பாப்பா ...இந்த மாதிரி அலங்காரத்தில் யாரையாவது பார்த்திருக்கிறாயா? இல்லையே அம்மா]

கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி (30/3/2021) அன்று Netflix ல் Shtisel. என்னும் சீரியல் Haredi Jews குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை பற்றியது அவசியம் காணுங்கள் என்று குழல் முடிக் கோமான்களின் படத்துடன் கூடிய கூகிள் செய்தியைக் கண்டேன்.

அசோகவனத்தில் சீதையை கண்ட அனுமான் கூட அவ்வளவு மகிழ்ந்திருப்பாரா என்று எனக்கு தெரியவில்லை. “கண்டேன் குழல் முடிக் கோமான்களைஎன்று உடனே விக்கிப்பீடியாவை தேட ...

https://en.wikipedia.org/wiki/Haredi_Judaism

இவர்கள் இஸ்ரேலை சேர்ந்த Orthodox Jews பழமையான பழக்கவழக்கங்களை பின்பற்றுபவர்கள். தற்கால பழக்க வழக்கங்களை விரும்புவதில்லை குடும்பத்தை முக்கியமாக நினைப்பவர்கள். இவர்கள் மற்ற நாட்டினருக்கு முன்பாக நெதர்லாந்து பெல்ஜியம் நாடுகளில் ஆதியில் வந்து குடியேறியவர்கள். இப்படி பல தகவல்களை அறிந்து கொண்டேன்.

அப்பாடா ...ஒரு வழியாக என் தேடல் முடிந்தது.]

பிரஸ்ஸல்ஸ் நகரம் பழமையும் புதுமையும் கலந்த ஊராக உள்ளது. மிக சிறந்த கட்டிடங்கள் அங்கங்கே தென்பட்டன. இங்கும் மிதிவண்டிகள் அங்கங்கே காணப்பட்டன. நெதர்லாந்திலும் பெல்ஜியத்திலும் பலதரப்பட்ட மக்கள் வசிப்பதால் அவர்களின் தலை முடியின் நிறம் பல நிறங்களில் இருந்தன. முக்கியமாக கருப்பு நிறம். [லண்டனில் மட்டும் தான் blonde நிற தலைமுடி உள்ளவர்களை கண்டேன்.]

அடுத்து நாங்கள் சென்றது Grand Place. World Heritage site ஆக ஐக்கிய நாடுகள் சபையால்(United Nations Organisation) குறிப்பிடப் பட்டுள்ள இந்த இடம் Grand Square எனவும் அழைக்கப் படுகிறது. சிறந்த சுற்றுலா தலமாக கருதப்படுகிறது இந்த இடம். Grand என்பதற்கேற்ப சிறப்பாக இருந்தது. கண்ணுக்கு விருந்து.

ஐரோப்பிய நகரங்களின் மையப்பகுதியில் இது போல squareகள் உள்ளன. அரசர்கள் ஆண்ட காலங்களில் அவர்களின் அரண்மனைகள், மந்திரிகள் மற்றும் அரண்மனை / அரசாங்க காரியஸ்தர்களின் குடியிருப்புகள் அமைந்த சதுரமான பகுதி. முக்கியமான நாட்களில் ஊர் மக்களை ஒன்று திரட்டி கூட்டம் போட, கலை விழாக்கள் நடத்த அந்த சதுரமான காலியிடத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள் இக்காலத்திலும் விழாக்கள், கூட்டங்கள் இந்த square களில் நடைபெறுகின்றன. அரசர்கள் தான் இல்லை.


பிரஸ்ஸல்ஸ் நகர Grand placeம் அது போல பிரம்மாண்டமான கட்டிடங்களை நான்கு புறமும் கொண்டது. Neo-gothic ஸ்டைல் கட்டிடங்கள் [PLASTERING AND PAINTING செய்வது இந்த வகை கட்டிடக் கலையின் சிறப்பு.] இவை மிகுந்த கலை நயத்துடன் உள்ளன. தங்கத்தை உபயோகித்து கட்டிடங்களுக்கு அலங்கார சிற்பங்கள், ஜன்னல்கள் மற்றும் உப்பரிகை அலங்காரங்களை செய்துள்ளார்கள் நாங்கள் அந்தி சாயும் நேரத்தில் சென்றதால் தங்கம் உபயோகப்படுத்தபட்ட பகுதிகள் ஜொலித்தன. [தங்கத்தை யாரும் திருடி செல்வதில்லை அங்கே]

தற்சமயம் இந்த கட்டிடங்கள் Townhall, museum, மற்றும் பிற அரசாங்க அலுவலகங்களாக செயல்படுகின்றன இதன் சதுர வடிவ மையப்பகுதி பிரம்மாண்டமானது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு ஆண்டு விட்டு ஒரு ஆண்டு (biennial) Assumption Day அன்று ஆயிரக்கணக்கான வண்ண Begonia மலர்களால் இந்த பகுதியில் பிரம்மாண்டமான carpet அமைக்கிறார்கள் மக்கள். Assumption Day என்பது ஏசு பிரானின் தாயார் கன்னி மேரி சுவர்க்கம் சென்ற நாள் என கத்தோலிக்க மக்கள் கொண்டாடுகிறார்கள். [Assumption day details courtesy: விக்கிபீடியா] அன்றைய தினம் அனுமதி சீட்டு வாங்கி தான் Grand Place உள்ளே நுழைய முடியும் என்று வழிகாட்டி கூறினார்.

இப்படி பல தகவல்களையும் எங்கள் வழிகாட்டி அனைவருக்கும் முன்னால் சென்ற

வண்ணம் கூறிக் கொண்டே வந்தார். ஒரே பிரச்சினை என்னவென்றால் அவர் 30 வயதுக்காரர் மற்றவர்கள் 50+. அவர் சொல்வதை கேட்க வேண்டுமென்றால் அவர் பின்னாலேயே ஓட்டமும் நடையுமாக செல்ல வேண்டி இருந்தது.

அங்கே புகைப்படங்கள் எடுத்து கொண்டு மீண்டும் நடைப்பயணத்தை தொடர்ந்தோம். சற்றே குறுகலான சாலையில் சென்ற போது கடைகளில் கண்ணாடி அலமாரிகளில் விதம் விதமான பொம்மைகளை விற்பனைக்கு வைத்திருப்பதைக் கண்டோம். இந்த

பகுதியிலும் உணவு கடைகள், துணிக்கடைகள், சுற்றுலா பயணியரை கவரும் வண்ணம் பல பொருட்கள், chocolate கடைகள் என நெருக்கமாக பல கடைகள் இருந்தன. வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்று தெருவின் முனையில் சிறிய left turn எடுத்தோம்.

திரும்பியதும் தெரு முனையில், சாதாரண வெளிச்சத்தில், ஒரு சுவரின் மேல் பதிக்கப்பட்ட ஒரு குட்டி பையன் உச்சா போகும் சிலை இருந்தது. உலக பிரசித்தி பெற்ற "Manneken pis" எனப்படும் சிலை அது. சற்றே பிரம்மாண்டமாக போலீஸ் பாதுகாப்புடன் பந்தாவாக இருக்கும் என்று நினைத்திருந்தேன்.

https://en.wikipedia.org/wiki/Manneken_Pis

இந்த சிலையின் அமைப்பு பெல்ஜியம் மக்களின் வேடிக்கை உணர்வை காட்டுவதாக அமைந்துள்ளது. ஆதி நாட்களில் இந்த சிலை வழியாக செல்லும் குழாய்கள் நகரின் முக்கிய குடிநீர் அமைப்பின் பகுதியாக இருந்துள்ளன.

தற்சமயம் Original சிலை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தெரு முனையில் உள்ள சிலை அதன் மாதிரி வடிவம் தான். தற்சமயம் சிலையில் கொட்டும் தண்ணீர் recycle செய்யப்பட்டு உபயோகப் படுத்தப் படுகிறது.

பிரபல ஆடை வடிவமைப்பாளராக இருந்தாலும் இந்த சிலைக்கு ஆடை வடிவமைக்க அரசாங்கத்திடம் அனுமதி வாங்க வேண்டும். இந்த குட்டி பையனுக்கு 1000+ ஆடைகள் உள்ளனவாம். அவைகள் அரசாங்க அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப் படுகின்றன.

யார் வேண்டுமானாலும் குட்டி பையனுக்கு ஆடை அணிவித்து அலங்காரம் செய்து விட முடியாது. அந்த பணியாளரையும் அரசு முடிவு செய்து பணியில் அமர்த்தும். அந்த பணியாளருக்கே எப்போது இந்த வேலை போதும் என்று தோன்றுகிறதோ அது வரை வேலை செய்யலாம். [தற்சமயம் பணி செய்பவரின் பேட்டியை சமீபத்தில் படித்தேன். சுவாரசியமான பேட்டி]

எல்லா நாளும் குட்டி பையன் ஆடை அணிந்திருக்க மாட்டான். என்ன ஆடை, என்ன occasion என்பதை அரசாங்கம் கூட்டம் கூட்டி முடிவு செய்யும்.

[சமீபத்தில் கொரோனாவை முன்னிட்டு மருத்துவ சேவை செய்வோரை கௌரவிக்கும் பொருட்டு செவிலியர் ஆடைகள் அணிவிக்கப்பட்டது என்று படித்தேன்.]

மிக சிறிய இடத்தில் சிலை அதை சுற்றி இரும்பு வேலி. சிலை அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொண்டு, தெருவை வேடிக்கை பார்த்து கொண்டு, இசை கலைஞர்களின் இசை நடனங்களை அனுபவித்து கொண்டு நின்றிருந்தோம். அன்று எங்களில் ஒருவருக்கு பிறந்த நாள் என்று அறிந்து கொண்டு அந்த கலைஞர்கள் வாழ்த்தினார்கள்.

நாங்கள் சென்ற சமயம் எங்களை தவிர வேறு யாரும் இல்லையென்றாலும் நாங்களே 80 பேர் கொண்ட பெரிய குழு. அந்த சிலையை பார்க்கவா இவ்வளவு தொலைவு நடக்க வைத்தார் என வழிகாட்டிக்கு அர்ச்சனை வேறு நடந்தது.

பெல்ஜியம் நாட்டின் மற்றொரு சிறப்பு சாக்லேட். Godiva போன்ற பிரபலமான Brands தவிர சிறிய கடைகளில் 

அப்போதே தயார் செய்து சுடச்சுட விற்பனை செய்கிறார்கள்சிலைக்கு அருகிலேயே சாக்லேட் கடைகள் இருந்தனஎங்கள் குழுப் பெண்கள் அந்த கடைகளுக்கு சென்று சாம்பிள் வாங்கி சாப்பிட்டு விட்டுபொறுமையாக அங்கேயே அமர்ந்து ஒய்வு எடுத்து கொண்டுபுகைப்படங்கள் எடுத்துக் கொண்டு இருந்தார்கள்மணிக்கணக்காக நடந்து வந்தோம் இல்லையா??

  (யாரும் அங்கே சாக்லேட் வாங்கியது போல எனக்கு தெரியவில்லை)

ஒரு உபரி தகவல்: நம் இல்லங்களுக்கு மிக அருகில் உள்ள Nuts & Spices கடைகளிலேயே Belgium chocolates கிடைக்கின்றன. [எத்தனை மாதங்கள் /வருடங்களுக்கு முன்பு தயாரிக்கப் பட்டதோ?]

பெல்ஜியம் நாடு comics புத்தகங்களின் தலைநகரமாக கருதப்படுகிறது. 1929ல் TIN TIN காமிக்ஸ் வெளியாகி மிக பிரபலமடைந்ததை தொடர்ந்து இன்றளவும் இந்த நாடு காமிக்ஸ் புத்தகங்களுக்கு பெயர் பெற்றதாக விளங்குகிறது.

கடைகளில் காமிக்ஸ் புத்தகத்தில் வரும் கதாபாத்திரங்களை போல keychains

, பொம்மைகள், brooches, stickers என செய்து விற்பனை செய்கிறார்கள். காமிக்ஸ் புத்தகங்களும் நிறைய இருந்தன. வழிகாட்டி மேலே சொன்ன கதையெல்லாம் எங்களுக்கு சொல்லி வியாபாரம் செய்ய சொன்னார். நாங்கள் வாங்கினால் தானே அவருக்கு commission கிடைக்கும். யாரும் அந்த கடைகளில் வியாபாரம் செய்யவில்லை.

அவைகள் என்னவென்று பார்க்க கூட யாருக்கும் பொறுமை இல்லை. ஓகே ஓகே என்று சொல்லி கொண்டே வெளியில் வந்து விட்டோம்.

[காமிக்ஸ் என்றதும் சிறு வயதில் படித்த ஒரு தமிழ் மொழி காமிக்ஸ் கதை நினைவுக்கு வந்தது. அதையும் உங்களுடன் பகிர விரும்புகிறேன். யாரேனும் இந்த கதையை படித்திருந்தால் கதாசிரியர் யார் என எனக்கு சொல்லுங்கள் மொழி பெயர்ப்பு கதையாகவும் இருக்கலாம்.


கதாநாயகன் ஒரு Superman. எகிப்து நாட்டின் Nile நதிக்கு குறுக்கே கட்டப்பட்டிருக்கும் அணையின் சுவரில் விரிசல் விழுந்து விடும். வில்லன் அந்த சுவற்றிற்கு செல்லும் பாதையை பூட்டி விட்டு ஓடி விடுவார்.நம் கதாநாயகனுக்கு ஒரு பெண் ஒரு ஆண் உதவியாளர்கள் இருப்பார்கள். மூவரும் பூட்டிய கதவை தாண்டி குதித்து கயிறை கட்டி கதாநாயகனை சுவற்றில் இறக்கி விட்டு சிமெண்ட் கலவையையும் கயிற்றில் இறங்குவார்கள். கயிறு கதாநாயகன் மற்றும் கலவையின்
எடை
தாங்காமல் கயிறு அறுந்து விழப் போகும் சமயத்தில் கதாநாயகன் வீர தீர சாகசம் செய்து அணையின் ஓட்டையை அடைத்து மேலே வருவார். எழுத்தாளரின் நடை அந்த நிகழ்வுகளை நாம் நேரில் காண்பது போல இருந்தது. கதாநாயகனின் கயிறு அறுந்து விழப் போகிறது என படித்த போது நானே அந்தரத்தில் தொங்குவது போல ஒரு உணர்வு. பல முறை அந்த புத்தகத்தை படித்தேன்.].


எந்த
அளவுக்கு அரசியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த அலுவலகங்களுக்கு இந்நகரம் பிரசித்தி பெற்றதோ அதே அளவு பழமையான கட்டிடங்கள்

மற்றும் அருங்காட்சியகங்களுக்கும் புகழ்பெற்றது.W.H.Auden என்னும் ஆங்கிலக் கவிஞரின் புகழ்பெற்ற கவிதையான "Musée des Beaux Arts"ல் இடம் பெறும் Brueghel என்னும் பெயருடைய ஓவியரின் Numbering at Bethlehem, Winter Landscape with Skaters and a Bird Trap and Massacre of the Innocents போன்ற ஓவியங்களை பற்றி படித்ததில் அவற்றை நேரில் காண ஆர்வமாக இருந்தேன். The Royal Museum of Fine Artsல் அவைகள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. இது போல பல அருமையான ஓவியங்கள் அங்கே இடம் பெற்றுள்ளன.

[நான் மிகவும் ரசித்த அந்த கவிதையையும் நம்மாழ்வாரின் பாசுரத்தையும் ஒப்பிட்டு எழுதிய ஒரு பதிவின் link:

https://manjooz.blogspot.com/2021/06/blog-post.html]


வழிகாட்டியிடம் The Royal Museum of Fine Arts அழைத்து செல்லுங்கள் என்று கேட்டபோது அனைவரும் விரும்புவது போன்ற தலங்களுக்கு தான் அழைத்து செல்ல முடியும் எல்லாரும் மியூசியம் பார்க்க விரும்ப மாட்டார்கள்.

அவரவர் தனித்தனியாக எங்கு வேண்டுமானாலும் சென்று ஊர் சுற்றி பார்த்து விட்டு பேருந்து ஊரை விட்டு கிளம்பு முன்பு வந்துசேர்ந்து கொள்ளலாம் என்று கூறினார். என்னை தவிர யாராவது ஒருவருக்காவது இது பற்றி தெரிந்தால் அவர்களோடு அருங்காட்சியகம் சென்றிருக்கலாம்.

மீண்டும் வந்த வழியே மெல்ல நடந்து Stock Exchange மண்டபத்தை அடைந்தோம்.


பேருந்து அங்கேயே வரும் என்று சொல்லப்பட்டதால் குழுவாக சேர்ந்து நின்று கொண்டிருந்தோம். (Be careful _ வழிகாட்டி)

அன்றைய சுற்றுலா முடிந்த நிலையில் இந்திய உணவகத்தில் உண்டு முடித்து தங்கும் விடுதிக்கு இரவு 10 மணியளவில் சென்று சேர்ந்தோம்.

கப்பலில் தேவைப்பட்டவர்களுக்கு wifi தொடர்பு ஏற்படுத்தி கொடுக்க உதவியதில் நட்பு வட்டம் பெருகி இருந்தது. இரவு அவரவர் அறைக்கு செல்லும் முன்பாக wifi போட்டு தந்து விட்டு செல்வேன். மீண்டும் காலையில் 6 - 6.30 மணிக்கே lounge வந்து விடுவேன். மேடம் பையனோட நேத்து ராத்திரி பேசவே முடியலை, மஞ்சு...என் மகள் கனடாவில் இருக்கிறாள் அவளுடன் பேசணும் என்று சுமார் 10 பேராவது ஆணும் பெண்ணுமாய் காத்திருப்பார்கள். (ஏதோ என்னாலான சிறு உதவி).

ஐரோப்பாவில் ground floor, first floor, second floor என விடுதி அறைகள் இருக்கும். அமெரிக்காவில் First level, second level, என இருக்கும். பலமுறை அமெரிக்க முறையை நினைவில் கொண்டு எங்கள் அறைக்கு ஒரு level மேலே சென்று படிக்கட்டில் / lift ல் கீழிறங்கி வந்தோம்.

விடுதிகளில் Loungeல், அறையில் புத்தகங்கள் வைத்திருப்பார்கள். எங்கு சென்றாலும் அவற்றை படிப்பது என் வழக்கம். அந்தந்த ஊரின் கலை, கலாச்சாரம், முக்கியமான இடங்கள், பொழுதுபோக்குகள், ஷாப்பிங் செய்ய வேண்டிய பொருட்கள், முக்கியமான உணவுகள் என பல தகவல்களை தெரிந்து கொள்ளலாம். [விமானத்தில் வைக்கப்படும் புத்தகங்களையும் விட்டு வைக்க மாட்டேன்.] நாங்கள் சென்ற சமயம் Brexit (Britain Exit from European union) பற்றி பரபரப்பாக பேசிக்கொண்டு இருந்தார்கள். பிரஸ்ஸல்ஸ் நகரம் EU வின் தலைநகரம் என்பதால் விடுதியில் தந்த புத்தகம் கூட BREXIT பற்றிய அட்டைப் படம் மற்றும் அது பற்றிய கட்டுரையுடன் இருந்தது

விடுதிகளில்.குளியலறை குழாயில் தான் தண்ணீர் பிடித்து குடிக்க வேண்டும்.

எங்கள் நாட்டின் குடிநீர் எந்த குழாயிலிருந்து வந்தாலும் மிக சுத்தமாக இருக்கும் தைரியமாக குடிக்கலாம் என்று பெருமை பட்டுக் கொண்டார்கள்.

சகோதரி கலா என்ன மஞ்சு பாத்ரூம் குழாயில் தண்ணீர் பிடித்து குடிக்க சொல்றாங்களே என்று புலம்பி கொண்டே இருப்பார். சமாதானப்படுத்தி குடிக்க சொல்வேன். (பலரும் அதே தான் சொல்லி கொண்டு இருந்தார்கள். ஆனால் வேறு வழி இல்லை)

வித்தியாசமான உணவுகள் ஏதாவது சாப்பிட்டிருந்தால் குறிப்பிடுகிறேன் என்று சொன்னேன் இல்லையா?

காலை உணவு நேரத்தில் சற்றே பெரிய கோலிகுண்டுகள் போல தக்காளிகள் மற்றும் miniature முட்டைகோசுகளை கண்டேன். அவரவரே sandwich தயாரித்து சாப்பிடும் வண்ணம் வைக்கப் பட்டு இருந்தது. அமெரிக்காவிலும் இவைகள் உண்டு என்றாலும் நான் முதன்முதலாக பிரஸ்ஸல்ஸ் விடுதியில் தான் கண்டேன்.

கோலிக்குண்டு தக்காளிக்கு cherry tomoto என்றும் miniature முட்டைகோசுக்கு Brussels Sprout எனவும் பெயர். 13 ஆம் நூற்றாண்டு முதல் இந்நகரின் அருகே பயிரிடப்படுவதால் இந்த காய் நகரின் பெயரை தன்னுடன் கொண்டுள்ளது என்று அறிகிறோம். நம் ஊரில் களைக்கோசு என அழைக்கப் படுவது தான் Brussels Sprout.

[மருத்துவரான என் தந்தையார் முட்டைகோசு காளைக்கோசு உடலுக்கு நல்லது உணவுடன் சேர்த்து கொள்ள வேண்டும் என்று சொல்வார்

அந்த நினைவில் பின்னொரு நாளில் கலிபோர்னியாவின் CUPERTINO நகரின் உழவர் சந்தையில் (Farmers market) பார்க்க அழகாக இருக்கிறது என்று களைகோசுகளை வாங்கி வந்து பொரியலாக்கி தட்டில் போட்டதும் பேரன்கள் என்ன பாட்டி ஒரு மாதிரி வித்தியாசமாக மணம் வருகிறது ருசியும் நன்றாக இல்லை என்று அலறியதும் நினைவுக்கு வருகிறது.]


பழ வகையில் பச்சை நிற ஆப்பிள் பழங்கள் இருந்தன. சமீபத்தில் பறித்ததற்கான அடையாளமாக இலையுடன் இருந்தது. கடித்ததும் சாறு முழங்கை வரை பெருகியதைக் கண்டபோது ஆண்டாளின் "மூட நெய் பெய்து முழங்கை வழிவார " என்ற திருப்பாவை வரி நினைவுக்கு வந்தது.

காலை உணவினை உண்டு முடித்து விட்டு, பேருந்தில் ஏறியவுடன் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து விட்டு, 260+ கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரை நோக்கி பயணம் தொடங்கினோம்.

அனுபவங்கள் தொடரும்

 

Thursday, 3 June 2021

ஆராரோ ஆரிராரோ.......


விழி ஆடி அறுவை சிகிச்சை , புரியும் தமிழில் சொன்னால் கேடராக்ட் ஆபரேஷன் 🙂 முடிந்து , ஓய்வில் இருக்கும் என் தாயாருக்கு எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்கள் எழுதிய “ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்” என்ற புத்தகத்தைப் படித்துக் காட்டும் வாய்ப்பு கிட்டியுள்ளது.
இப்புத்தகத்தில் ஒவ்வொரு ஆழ்வாருக்கும் [ஆழ்வார்: எதிலும் தீவிரமாக ஆழ்பவர்கள் , ஈடுபடுபவர்கள்] ஒரு அத்தியாயம் என 12 ஆழ்வார்களின் பாடல்களில் உள்ள சொல் பொருள் யாப்பு என ஆராய்ந்து, மதம் சாராமல் எழுதி உள்ளார்.
அருமையான
விளக்கங்கள். பாமரருக்கும் புரியும் வகையில். (இப்ப தான் ஏதோ கொஞ்சம் புரியற மா...........திரி தோணுது)
பெரியாழ்வார் தம்மை யசோதையாகப் பாவித்துக் கண்ணனைத் தன் குழந்தையாக்கிப் பாடிய "பிள்ளைத் தமிழ்" பாடல்கள் மிகுந்த அன்பும் வாத்சல்யமும் கொண்டவை.
ஒரு குழந்தையின் பிறப்பு ,
தாலாட்டு (மாணிக்கங்கட்டி வைரமிடை கட்டி....),
அம்புலி (நிலா நிலா ஓடி வா...),
செங்கீரை(குழந்தை பிறந்த ஐந்தாம் மாதம் தலையை அங்கும் இங்குமாய் அசைத்துப் பார்க்குமே...),
சப்பாணி (இரு கைகளையும் தட்டுமே...சப்பாணி சப்பாணி கொட்டுமாம் அப்புச்சி குடுத்தா தின்னுமாம்..),
தளர் நடை,
கிட்டே வருதல்,
புறம் புல்கல் (குழந்தை பின்புறமிருந்து அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொள்ளுமே..),
அம்மம் (தற்காலத்தின் மம்மு, மம்மம் சாப்பிடு என் செல்லம்....),
உண்ணல், காது குத்தல், நீராட்டல், தலை வாரல், பூச்சூடல், காப்பிடல் என பல்வேறு நிலைகளுக்கும் பாடல்கள் எழுதி உள்ளார்.

கண்ணனைக் குட்டன் என அன்போடு அழைக்கிறார். தற்காலத்தில் மலையாளக் கரையோரம் சென்று விட்டது இந்த வார்த்தை. [குட்டனும் குட்டுவும் எங்கிருந்து வந்தார்கள் என்று இப்போது புரிந்தது.]

பாடல்களைப் படிக்கும் போது நாமே கண்ணனின் அன்னையான உணர்வு. பாக்களின் சொல்லும் பொருளும் யாப்பும் என்னை சிலிர்க்க வைத்தது உண்மை. ஆழ்வார்கள் சிறந்த தமிழ்ப் புலவர்கள் என்பதில் ஐயமில்லை. அவ்வப்போது வாய்விட்டுப் படிக்க இயலாத நெகிழ்வு. கண்ணின் துளிகள் தானே கலைகளின் வெகுமானம்....... உண்மை.

இறைவனின் பிறப்பு பற்றிய இரு பாடல்கள் உங்களுக்காக.......

ஆயர்பாடியில் கண்ணன் பிறந்த செய்தி கேட்டு , அக்குழந்தை இறைவனின் அம்சம் என்று உணர்ந்து மக்கள் மகிழ்ந்து கொண்டாடுவதாக அமைக்கப் பட்டுள்ளது இந்தப் பாடல்.

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே

மகிழ்ச்சி பெருகி தாம் செய்வது என்ன என்றே புரியாமல் சிலர் ஓடினார்கள்; சிலர் எண்ணெயும் சுண்ணமும் கலந்த திருமுற்றத்துச் சேற்றில் வழுக்கி விழுந்தார்கள்; சிலர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக உரக்கக் கூவினார்கள்; ஒருவரை மற்றவர் கட்டித் தழுவினார்கள்; நம் தலைவனான கண்ணன் எங்கே இருக்கிறான் என்று கூறிக் கொண்டு அவனை தேடினார்கள் சிலர்; சிலர் இனிய குரலில் பாடினார்கள்; சிலர் பலவிதமான பறைகளை இசைத்து ஆடினார்கள். இப்படி கண்ணன் பிறந்த நேரத்தில் பெரும் திருவிழாவைப் போலிருந்தது திருவாய்ப்பாடி என்பதாகப் பெரியாழ்வார் கண்ணனின் பிறப்பைப் பற்றிய நிகழ்வினைக் கூறுகிறார்.
மேற்கண்ட பாடல் வரிகளைப் படிக்க நேர்ந்த போது ஆங்கில இலக்கியத்தில் நான் படித்த , இதனையொத்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது.

W. H. Auden என்பார் "Musee des Beaux Arts" (Museum of Fine Arts) என்னும் கவிதையை தாம் ஐரோப்பிய நகரமான பிரஸ்ஸல்ஸ் நகரின் அருங்காட்சியகத்தில் கண்ட ஓவியங்களின் அடிப்படையில் எழுதி உள்ளார்.
Brueghel என்பவர் வரைந்த "The Numbering of Bethlehem" (also known as The census at Bethlehem) என்னும் ஓவியத்தில் (The Royal Museum of Fine arts of Belgium, Brussels) ஏசுபிரானின் பிறப்பு மற்றும் அது குறித்த மக்களின் மனநிலை பற்றியும் நுணுக்கமாக வரையப் பட்டுள்ளது. அதன் பாதிப்பில் எழுதப் பட்ட கவிதை இது. இந்த கவிதை Ekphrasis என்னும் அமைப்பில் உள்ளது. ஒரு பொருளை அப்படியே வார்த்தைகளால் வர்ணிப்பது. (visual representation of a person, place or thing)

About suffering they were never wrong,
The old Masters: how well they understood
Its human position: how it takes place
While someone else is eating or opening a window or just walking dully along;
How, when the aged are reverently, passionately waiting
For the miraculous birth, there always must be
Children who did not specially want it to happen, skating
On a pond at the edge of the wood:

ஏசுபிரானின் பிறப்பிற்கான நேரம். அவரது தாயார் மிகுந்த வேதனையில் இருந்த சமயம் , மக்கள் சிலர் எந்த பாதிப்பும் இல்லாமல் நடந்து செல்கின்றனர். வயதில் மூத்த பெரியோர் மிகுந்த ஆர்வமுடன் அபூர்வமான நிகழ்வான இறைவனின் பிறப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். சிறுவர்கள் எந்த விதப் பாதிப்பும் இல்லாமல் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். யார் எப்படிப் போனால் நமக்கென்ன என்ற மன நிலையில் பலரும் இருப்பார்கள் என நம் முன்னோர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

[The old Masters (நம் முன்னோர்கள் என்பதாகக் கொள்ளலாம்) were never wrong about human suffering and its position in context with the rest of human society. While someone is suffering, others are going about their regular business. The elderly live in desperate hope for a miracle, but children are not particularly concerned. Even a martyr dies on the margins of society.]
இறைவனின் பிறப்பை ஏற்கனவே மக்கள் அறிந்திருந்தார்கள் என்பது போல இரு பாடல்களும் உள்ளன.
கண்ணே என் கண்மணியே....இன்னும் உறங்கலியோ........
ஆராரோ ஆரிரரோ.......
பின் குறிப்பு :
எனக்குப் புரிந்த வகையில் தெரிந்த வகையில் விளக்கியுள்ளேன்.
Courtesy : http://koodal1.blogspot.in/2008/05/11.html (4000 கற்போம்)
ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்(திரு. சுஜாதா)