நானும் நீயும்
ஜீவாத்மா
நானும் அவனும்
பரமாத்மா!
ராதையும் நானும்
ஜீவாத்மா
ராதையும் கண்ணனும்
பரமாத்மா!
ராதை நானும்
கண்ணன் அவனும்
ஒன்றாகக் கூடினால்
வருவது அத்வைதம்!
நாதம் அவன்
காற்று அவள்
அவனும் அவளும் கீதமாய்
ஆவது பேரின்பம்!
நாயகனே ஈசன்
நாயகியே மனிதன்
நாயகி ஈசனுடன்
இணைவது சொர்க்கம்!
பேரின்பம் கண்ணனே
கண்ணனை நாடி
கானங்கள் பாடிக்
கலப்பது முக்தி!
No comments:
Post a Comment