எட்டாவது வசுதேவ மைந்தனானவன்
எட்டாவது அவதாரமாய் வந்துதித்தான்
எட்டாவது திதியில் அவதரித்தவன்
எட்டெழுத்தானது அவன் நாமம்
எட்டு ராணியரும் அவனுக்குண்டாம்
எட்டுத் திசைமுட்டும் அவன் புகழை
எட்டு அடிகளில் நாமும் பாடி
எட்டி அவன் பாதம் பற்றிடுவோம்!!
No comments:
Post a Comment