Thursday, 29 January 2015

அந்திக்கு முந்து....

ஐந்தாம் வகுப்பு அறிவியல் பாட வேளை....... வகுப்பு மற்றும் தலைமை ஆசிரியை திருமதி சிவகாமி அவர்கள் எங்களிடம் கேட்ட கேள்வி:  உயிரினங்கள் ஆக்சிஜனை உள் வாங்கி கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகின்றன. வளி மண்டலத்தில் உள்ள ஆக்சிஜன் தீராமல் இருப்பது எப்படி?
வழக்கம் போல் எங்கள் பதில்..... பே..பேபே...... 
மறு நாள் வகுப்பில் எங்கள் வகுப்பு மாணவி மீனா (எ) வேணி அவரது தாயாரிடம் (நம்ம டீச்சர்தான் அவங்க அம்மா) கேட்டு வந்து வகுப்பில் சொன்ன பதில் : தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடை உட்கொண்டு ஆக்சிஜனை வெளியேற்றுகின்றன. இது ஒரு சுழற்சி போல பயன்படுத்தப் படுகிறது.

வணக்கம் ....... வெட்னெஸ்டே சமையலில் நாம் கற்கப் போவது தாவரங்களின் சமையல் முறை பற்றியது
இதற்குப் பெயர்  போடோசிந்தசிஸ் .....
தேவையான பொருட்கள் :  வேரிலிருந்து உறியப்படும் நீர், கர்பன் டை ஆக்சைடு மற்றும் பச்சையம் (கர்ட் ரைஸ் வித் பொடேடோ ஃபிங்கர் சிப்ஸ் மா....திரி) 
சூரிய ஒளியை வைத்து மேற்படி உணவினை தாவரங்கள் தயாரித்து இலைகளில் சேமித்து வைக்கும்.....
(முக்கியக் குறிப்பு :இரவு நேரத்தில் சூரிய ஒளி இல்லாததால் தாவரங்களின் சமையலறை மூடப்படும்.)

அதிகப்படியான நீரை நாம் எல்லாருமே இலைகளின் மேல் பார்த்திருப்போம். அது சூரிய ஒளியில் ஆவியாகி, மேகமாகி, பின் குளிர்ந்து மழையாக மாறி பூமிக்கு வந்து சேர்கிறது. மீண்டும் தாவரங்கள் அந்த தண்ணீரை உறிஞ்சி , உணவாக்கி, ஆவியாகி, மேகமாகி, மழையாகி, .....  இது முடிவில்லாத ஒரு வட்டம். (இதையே மழை சுழற்சி என்பார்கள்)

மழைக்குத் தேவை மரங்கள்..... மரங்களைக் காக்க நம்மால் ஆன சிறு செயல்கள் .... 
(1)சிறு பிள்ளைகளுக்கு காகிதங்களை வீணாக்கக் கூடாது என்பதை சொல்லித் தர வேண்டும். 
(2)மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகளை பிரித்து குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.(மறு சுழற்சி முறையில் காகிதங்கள் பயன்படுத்தப்படும்)

[என் மகன் பள்ளி சேர்ந்த புதிதில் அன்று எழுதிய காகிதம் மறு நாள் நோட்டில் இருக்காது. எங்கே என்று நான் கேட்டதற்கு அவரது பதில்....... அதான் எழுதியாச்சே....... நாளைக்கு பள்ளிக்கு செல்லும் போது புது நோட்டா எடுத்துட்டு போக வேண்டாமா? அதான் இன்னைக்கு எழுதின பக்கத்தை கிழிச்சுட்டேன்.]

ஆங்....... சொல்ல வந்ததை விட்டுட்டு எங்கேயோ போயிட்டேன்.......

மாலை வேளைகளில் நடைப் பயிற்சி செய்ய விரும்புபவர்கள் அந்தி சாயும் முன்பே நடைப் பயிற்சியை முடித்துக் கொள்ள வேண்டும் ........ (அந்தி - சூரியன் மறையும் நேரம்) இரவில் திறந்த வெளியில் தூங்குவதும் நல்லதல்ல...... குறிப்பாக மரங்கள் அடர்ந்த பகுதியில் மேற்கண்டவைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்....அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடை தாவரங்கள் இரவு நேரங்களில் வெளியேற்றும்....


பின் குறிப்பு : புரியாத புலவர்களுக்காக :
During the day, plants photosynthesise more than they respire so more carbon dioxide is used up than produced.  During photosynthesis energy from the sun changed into energy stored as sugar and oxygen is produced as water is broken down.  This is why we think of plants as producing oxygen and using carbon dioxide.  At night however, photosynthesis can’t happen (because it’s dark!) and plants make carbon dioxide as they consume oxygen during cellular respiration. 


No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...