Thursday, 6 December 2018

வணக்கம் பல முறை சொல்வேன் !

असतोमा सद्गमय । 
तमसोमा ज्योतिर् गमय । 
मृत्योर्मामृतं गमय ॥ 
ॐ शान्ति शान्ति शान्तिः ।। 

From ignorance, lead me to truth;
From darkness, lead me to light;
From death, lead me to immortality
Om peace, peace, peace !

ஒரு மாணவர் தன்னுடைய ஆசிரியரைப் பார்த்துக் கூறுவதாக  ப்ருஹதாரண்யக உபநிஷதத்தில் உள்ள பாடலின் ஒரு வரியை (தாமஸோமா ஜ்யோதிர்கமய) அடிப்படையாகக் கொண்டு , ஒரு நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி எங்கள் சம்ஸ்கிருத வகுப்பில் நடைபெற்றது .  

அஞ்ஞான இருளை நீக்கி அறிவுக்கு கண்ணை திறப்பவர் ஆசிரியரே என்ற அடிப்படையில் அமையப்பெற்ற நிகழ்ச்சிகளை கொண்டு நடைபெற்ற நிகழ்ச்சி அது.

நிகழ்ச்சிக்கு என் பங்களிப்பாக (in absentia ) நான் எழுதி அனுப்பிய சம்ஸ்கிருத கவிதை . புரியாதவர்களுக்காக கீழே தமிழில் .....


अवन्दे वन्दे वन्दिष्ये

अहं चिन्तयामि !
कथं एतावत् शिकराणि लुठितवती?
अहं चिन्तयामि !

(1)देवता रूपेण भूम्यै आगत्य अम्बा कारणं वा?
   "अहं अस्मि कदापि न रोदिषि " इति धैर्यं दत्त: जनक: कारणं वा?
   अहं चिन्तयामि !

(2) मम आरम्भ अध्यापनस्य  कर्ता उत्तमा अध्यापका  कारणं वा ?
    गणितं सुलबं इति मधुरतया  पाठित: आचार्य: कारणं वा ?
    अहं चिन्तयामि !

(3)शास्त्र विषये अज्ञानं नाशीत: वृद्धाचार्य कारणं वा ?
   मधुरं गीतं गापयित: मम संगीत गुरु: कारणं वा ?
   अहं चिन्तयामि !

(4)"त्वया शक्नोषि" इति नित्यं हेतु: कथयन् मित्रं कारणं वा ?
     गातुं समये वज्रस्य अभिनयं कथा करणीयं इति पाठित: दौहित्र: कारणं वा ?
     अहं चिन्तयामि !

(5)देवभाषाया: मार्गदर्शनं दर्षितौ भगिन्यौ कारणं वा ?
    पुस्तकानि वा ? प्रकृति: वा ? अथवा  पण्डितानां मेलनं वा ?
    अहं चिन्तयामि !  

                          इदानीं अहं अवगच्छामि ! (2)
                          मम चिन्तनम् इदानीं पूरणं भवति !

(6)यानि अज्ञानानि नाशयित्वा ज्ञानम् ददाति , तानि सर्वाणि  गुरु: एव  किल ? (2)

(7)चक्षु : उन्मीलितं ये कुर्वन्ति , ते सर्वैभय: अहं वन्दे !   (2)



வணங்கினேன் வணங்குகிறேன் வணங்குவேன் 

நான் சிந்திக்கிறேன் 
இத்தனை சிகரங்களை எப்படி எட்டினேன் ?
நான் சிந்திக்கிறேன் 

தேவதை உருவில் பூமிக்கு வந்த அன்னை காரணமா ?
நான் இருக்கிறேன் எதற்கும் அழாதே என தைரியம் சொன்ன  தந்தை காரணமா?
நான் சிந்திக்கிறேன் 

ஆரம்பப் பாடங்களை அன்பாய்க் கற்றுத் தந்த ஆசிரியை காரணமா ?
கணிதம் சுலபம் என இனிக்கக்  கற்றுத் தந்த ஆசிரியர் காரணமா?
நான் சிந்திக்கிறேன் 

சாஸ்திர விஷயங்களில் என் சந்தேகம் நீக்கிய மூப்படைந்த ஆசிரியர் காரணமா?
இனிமையான பாடல்களை கற்றுத் தந்த சங்கீத ஆசிரியர் காரணமா ?
நான் சிந்திக்கிறேன் 

உன்னால் முடியும் என அனுதினம் உற்சாகமூட்டும் நண்பன் காரணமா ?
பாடும் சமயம் வைரம் என்ற வார்த்தையை அபிநயம் பிடிக்க கற்றுத் தந்த குட்டி பேரன் காரணமா ?
நான் சிந்திக்கிறேன் 

தேவர்களின் மொழியை கற்கும் வழியைக் காட்டிய சகோதரிகள் காரணமா?
புத்தகங்களா? இயற்கையா ? கற்றவர்களின் சேர்க்கையா ?
நான் சிந்திக்கிறேன் 

   இதன் விடை எனக்கிப்போது புரிந்து விட்டது 
   என் சிந்தனையும் முற்றுப் பெற்றது 
                
எவைகள் நம் இருளை நீக்கி ஒளியைத் தருகின்றனவோ , அவைகள் அனைத்தும் நம் ஆசிரியர்கள் இல்லையா?

அஞ்ஞான இருளை நீக்கும் அனைத்திற்கும் என் வணக்கங்கள்.  




No comments:

Post a Comment

WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...