Thursday, 6 December 2018

வணக்கம் பல முறை சொல்வேன் !

असतोमा सद्गमय । 
तमसोमा ज्योतिर् गमय । 
मृत्योर्मामृतं गमय ॥ 
ॐ शान्ति शान्ति शान्तिः ।। 

From ignorance, lead me to truth;
From darkness, lead me to light;
From death, lead me to immortality
Om peace, peace, peace !

ஒரு மாணவர் தன்னுடைய ஆசிரியரைப் பார்த்துக் கூறுவதாக  ப்ருஹதாரண்யக உபநிஷதத்தில் உள்ள பாடலின் ஒரு வரியை (தாமஸோமா ஜ்யோதிர்கமய) அடிப்படையாகக் கொண்டு , ஒரு நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி எங்கள் சம்ஸ்கிருத வகுப்பில் நடைபெற்றது .  

அஞ்ஞான இருளை நீக்கி அறிவுக்கு கண்ணை திறப்பவர் ஆசிரியரே என்ற அடிப்படையில் அமையப்பெற்ற நிகழ்ச்சிகளை கொண்டு நடைபெற்ற நிகழ்ச்சி அது.

நிகழ்ச்சிக்கு என் பங்களிப்பாக (in absentia ) நான் எழுதி அனுப்பிய சம்ஸ்கிருத கவிதை . புரியாதவர்களுக்காக கீழே தமிழில் .....


अवन्दे वन्दे वन्दिष्ये

अहं चिन्तयामि !
कथं एतावत् शिकराणि लुठितवती?
अहं चिन्तयामि !

(1)देवता रूपेण भूम्यै आगत्य अम्बा कारणं वा?
   "अहं अस्मि कदापि न रोदिषि " इति धैर्यं दत्त: जनक: कारणं वा?
   अहं चिन्तयामि !

(2) मम आरम्भ अध्यापनस्य  कर्ता उत्तमा अध्यापका  कारणं वा ?
    गणितं सुलबं इति मधुरतया  पाठित: आचार्य: कारणं वा ?
    अहं चिन्तयामि !

(3)शास्त्र विषये अज्ञानं नाशीत: वृद्धाचार्य कारणं वा ?
   मधुरं गीतं गापयित: मम संगीत गुरु: कारणं वा ?
   अहं चिन्तयामि !

(4)"त्वया शक्नोषि" इति नित्यं हेतु: कथयन् मित्रं कारणं वा ?
     गातुं समये वज्रस्य अभिनयं कथा करणीयं इति पाठित: दौहित्र: कारणं वा ?
     अहं चिन्तयामि !

(5)देवभाषाया: मार्गदर्शनं दर्षितौ भगिन्यौ कारणं वा ?
    पुस्तकानि वा ? प्रकृति: वा ? अथवा  पण्डितानां मेलनं वा ?
    अहं चिन्तयामि !  

                          इदानीं अहं अवगच्छामि ! (2)
                          मम चिन्तनम् इदानीं पूरणं भवति !

(6)यानि अज्ञानानि नाशयित्वा ज्ञानम् ददाति , तानि सर्वाणि  गुरु: एव  किल ? (2)

(7)चक्षु : उन्मीलितं ये कुर्वन्ति , ते सर्वैभय: अहं वन्दे !   (2)



வணங்கினேன் வணங்குகிறேன் வணங்குவேன் 

நான் சிந்திக்கிறேன் 
இத்தனை சிகரங்களை எப்படி எட்டினேன் ?
நான் சிந்திக்கிறேன் 

தேவதை உருவில் பூமிக்கு வந்த அன்னை காரணமா ?
நான் இருக்கிறேன் எதற்கும் அழாதே என தைரியம் சொன்ன  தந்தை காரணமா?
நான் சிந்திக்கிறேன் 

ஆரம்பப் பாடங்களை அன்பாய்க் கற்றுத் தந்த ஆசிரியை காரணமா ?
கணிதம் சுலபம் என இனிக்கக்  கற்றுத் தந்த ஆசிரியர் காரணமா?
நான் சிந்திக்கிறேன் 

சாஸ்திர விஷயங்களில் என் சந்தேகம் நீக்கிய மூப்படைந்த ஆசிரியர் காரணமா?
இனிமையான பாடல்களை கற்றுத் தந்த சங்கீத ஆசிரியர் காரணமா ?
நான் சிந்திக்கிறேன் 

உன்னால் முடியும் என அனுதினம் உற்சாகமூட்டும் நண்பன் காரணமா ?
பாடும் சமயம் வைரம் என்ற வார்த்தையை அபிநயம் பிடிக்க கற்றுத் தந்த குட்டி பேரன் காரணமா ?
நான் சிந்திக்கிறேன் 

தேவர்களின் மொழியை கற்கும் வழியைக் காட்டிய சகோதரிகள் காரணமா?
புத்தகங்களா? இயற்கையா ? கற்றவர்களின் சேர்க்கையா ?
நான் சிந்திக்கிறேன் 

   இதன் விடை எனக்கிப்போது புரிந்து விட்டது 
   என் சிந்தனையும் முற்றுப் பெற்றது 
                
எவைகள் நம் இருளை நீக்கி ஒளியைத் தருகின்றனவோ , அவைகள் அனைத்தும் நம் ஆசிரியர்கள் இல்லையா?

அஞ்ஞான இருளை நீக்கும் அனைத்திற்கும் என் வணக்கங்கள்.  




WHAT'S NEW ?!

எங்கே தேடுவேன்??

  ஏழாவது அமெரிக்கப் பயணம் காலம். பீனிக்ஸ் நகரில் மகனது இல்லத்தில் தங்கியிருந்து விட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மீண்டும் கலிபோர்னியாவிலுள்ள மக...